சனி, 4 ஜனவரி, 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறை அமைக்கும் பணி தீவிரம்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் விஸ்வநாதன் கூறியது: 

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் இளங்கலை அரசியல் அறிவியல் பாடப்பிரிவு நடப்புக் கல்வியாண்டில் புதிதாக துவங்கப்பட்டது. தற்போது முதலாமாண்டு வகுப்புகள் நடக்கிறது. இப்பாடப் பிரிவுக்கான இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாமாண்டு வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு புதிதாக வகுப்பறை கட்டுவதற்கு கடலூர் தொகுதி எம்.பி., மேம்பாட்டு நிதியில் இருந்து 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த நவம்பர் 21ம் தேதி, அழகிரி எம்.பி., அடிக்கல் நாட்டியதைத் தொடர்ந்து, பொதுப் பணித்துறை (கட்டடப் பிரிவு) சார்பில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தரைத் தளம் மட்டுமே அமைக்கப்படுகிறது. இதில், பேராசிரியர்கள் அறை, இரண்டு வகுப்பறைகள் என மொத்தம் மூன்று அறைகள் அமைக்கப்படுகிறது
Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP