வியாழன், 27 ஜூன், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் கணினி அறிவியல் பாடத்தில் சேர கடும் போட்டி

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2013-2014 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான நடந்த கலந்தாய்வில் கணினி அறிவியல் பாடத்தில் சேர மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. 

கடலூர் பெரியார் அரசுக் கல்லூரியில் கடந்த 25-ம் தேதி கலந்தாய்வு தொடங்கியது. கணிதம், கணினிஅறிவியல், புள்ளியியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடந்தது. இதில் கணினிஅறிவியல் பாடத்தில் சேர்வற்கு மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. இதன் காரணமாக கலந்தாய்வு தொடங்கிய சிறிது நேரத்தில் அனைத்து இடங்களும் பூர்த்தியானது. புள்ளியியல் பாடத்துக்கு மாணவர்கள் குறைவாக வந்திருந்தனர். இதில் 4 மாணவர்கள மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

புதன், 26 ஜூன், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2013-2014 ஆண்டிற்கான மாணவர் சேர்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு தொடக்கம்


கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது. கவுன்சிலிங் தொடங்கிய 1 மணி நேரத்தில் கணினி அறிவியல் பாடத்துக்கான சேர்க்கை முடிவடைந்தது.

கலந்தாய்வு:

தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2013–14–ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் (24/06/2013) தொடங்கியது. முதல் கட்ட கலந்தாய்வில் முதல் நாளான நேற்று முன்தினம் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவனத்தினரின் பிள்ளைகள், என்.சி.சி.யில் ‘ஏ‘ சான்றிழ் பெற்ற மாணவ, மாணவிகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து 2–வது நாளான நேற்று (25/06/2013) காலையில் இதர பிரிவு மாணவர்களுக்கு கணக்கு, கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியல் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமையிலான ஆசிரியர் குழுவினர் இந்த கலந்தாய்வை நடத்தினர்.

பின்னர் இது குறித்து கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் அளித்த பேட்டி: 

சிறப்பு பிரிவினர்

கலந்தாய்வை பொறுத்தவரை என்ஜினீயரிங் கல்லூரிகளில் கூட இன்னும் காலியிடங்கள் இருக்கின்றன. ஆனால் கலைக்கல்லூரிகளை பொறுத்தவரை அனைத்து பாட பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கை நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் சிறப்பு பிரிவினருக்கான நடைபெற்ற கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் 6 பேரும், விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில் 18 பேரும், என்.சி.சி. பிரிவில் ஒருவரும் என மொத்தம் 25 பேர் கலந்துகொண்டனர். முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கான பிரிவில் ஒருவர் கூட கலந்துகொள்ளவில்லை.

இதைத் தொடர்ந்து நேற்று (25/06/2013) புள்ளியியல், கணக்கு, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கலந்தாய்வு நடைபெற்ற 1 மணி நேரத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கான மாணவர் சேர்க்கை முடிவடைந்தது. கணக்கு பாடத்துக்கும் ஓரளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

புள்ளியில் பாடம்:

புள்ளியல் பாடத்துக்கான கலந்தாய்வில் பகல் 1 மணிவரையில் 4 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். இதற்கு பள்ளிக்கூடங்களில் புள்ளியில் பாடம் தனி பாடமாக இல்லாததே காரணம். 12–ம் வகுப்பில் கணக்கு பாடத்துடன் சேர்ந்து புள்ளியியல் பாடம் வருகிறது. இதனால் பள்ளியில் கணக்கு பாடம் எடுத்து படிக்கும் மாணவர்கள் கல்லூரிக்கு வரும்போது பெரும்பாலானோர் கணக்கு பாடத்தையே தேர்வு செய்கிறார். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் பாடம் உள்ள ஒரே கல்லூரி பெரியார் அரசு கல்லூரி தான்.
பெரியார் கல்லூரியில் அனைத்து பாட பிரிவுகளுக்கும் மொத்தம் 900 இடங்கள் உள்ளன. இதில் வணிகவியல் பாடத்துக்கு நிறையபேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு அடுத்ததாக ஆங்கிலபாடத்துக்கும், 3–வதாக கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கும் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இயற்பியல்–வேதியியல்:

தொடர்ந்து 3–வது நாளான இன்று(புதன்கிழமை) இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கும், நாளை(வியாழக்கிழமை) தாவரவியல், விலங்கியல், தொழில்முறை வேதியியல், மைக்ரோ பயாலஜி ஆகிய பாடங்களுக்கும், வருகிற 1–ந் தேதி(திங்கட்கிழமை) வணிகவியல், பி.பி.ஏ. ஆகிய பாடங்களுக்கும், 2–ந் தேதி(செவ்வாய்கிழமை) தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கும், 3–ந் தேதி(புதன்கிழமை) பொருளியல், வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் ஆகிய பாடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
இதை தொடர்ந்து 2–வது கட்ட கலந்தாய்வு வருகிற 8–ந் தேதி முதல் 10–ந் தேதி வரையிலும், 3–வது கட்ட கலந்தாய்வு 18–ந் தேதியும் நடக்கிறது.

Read more...

திங்கள், 24 ஜூன், 2013

கடலூர் பெரியார் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான (2013-2014) மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று 24/06/2013 தொடங்குகிறது.

கடலூரில் உள்ள அரசு பெரியார்
கலைக் கல்லூரியில் 2013-2014-ஆம் கல்வியாண்டில் சேர 5,033 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.

3,773 விண்ணப்பங்களை மாணவர்கள் பூர்த்தி செய்து, கல்லூரியில் ஒப்படைத்துள்ளனர். கடந்த கல்வியாண்டில் 4,650 விண்ணப்பங்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. முதல் கட்ட கலந்தாய்வு இன்று (24/06/2013) தொடங்குகிறது.

கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் பி.காம். பாடப்பிரிவில் சேர அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக ஆங்கில இலக்கியம், கணினி அறிவியல், இயற்பியல், கணிதம், விலங்கியல், தாவரவியல், பொருளியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

இது குறித்து கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் கூறுகையில்,


"கடந்தாண்டைவிட இந்தாண்டு விண்ணப்பங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இந்தாண்டும் பி.காம். பாடப் பிரிவில் சேர விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அடுத்தப்படியாக பி.பி.ஏ. பாடப்பிரிவில் சேர விண்ணப்பிப்பார்கள்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் பி.காம். பாடத்தில் சேர அதிகளவில் விண்ணப்பிக்க காரணமாகும். கடந்தாண்டு கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் பி.காம். பாடப்பிரிவைச் சேர்ந்த 66 பேர் தேர்வு செய்யப்பட்டனர்' என்றார்.


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

புதன், 19 ஜூன், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் கல்லூரி ஆசிரியர் நியமன விண்ணப்பப் படிவம் விற்பனை


 கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் கல்லூரி ஆசிரியர் நியமன விண்ணப்பப் படிவம் விற்பனை செய்யபடுகிறது.

 இது குறித்து கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் கல்லூரி ஆசிரியர் நியமன விண்ணப்பப் படிவம் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் கல்லூரி ஆசிரியர் நியமனத்துக்கான விண்ணப்பப் படிவம் ஒன்றின் விலை ரூ.100. இப்படிவங்கள் புதன்கிழமை (ஜூன் 19) முதல் ஜூலை மாதம் 10-ம் தேதி வரை அனைத்து வேலைநாட்களிலும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை விற்பனை செய்யப்படும். 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP