திங்கள், 28 மார்ச், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம்

கடலூர் : 

             கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது. கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தாவரவியல் துறை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நிர்மல்குமார், டாக்டர் வித்யாசங்கர் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஏராளமான மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் பிரகாஷ் செய்திருந்தார்.

Read more...

ஞாயிறு, 27 மார்ச், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வில் சாதனை

கடலூர்:

              பல்கலைக்கழக தேர்வில் சாதனை படைத்த கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் ரங்கநாதன் பாராட்டினார்.
 
                     வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் இணைவு பெற்ற கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் 2010ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த பல்கலைக் கழகத் தேர்வில் முதல் 10 இடங்களுக்குள் மதிப்பெண் பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் வெங்கடேஸ்வரன் பொருளாதாரத்திலும், பெருமாள் தொழிற்வேதியலிலும் முதலிடம் பெற்றனர். மேலும் தொழிற்வேதியல் பாடத்தில் பாலமுருகன் 3ம் இடத்தையும், செல்வநாதன் 4ம் இடத்தையும், கார்த்திகேயன் 5ம் இடத்தையும் பெற்றனர்.

                    இயற்பியலில் மாணவி நாகலட்சுமி 8ம் இடத்தையும், முதுகலை கணிதத்தில் மாணவி முல்லை 5ம் இடத்தையும் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் ரங்கநாதன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினார்.

பின்னர் கல்லூரி முதல்வர் ரங்கநாதன் கூறியது:

திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துடன் பெரியார் கலைக் கல்லூரி இணைவு பெற்று 8 ஆண்டுகளில் முதல் முறையாக பல்கலைக் கழக தேர்வில் எங்கள் கல்லூரி மாணவர்கள் முதல் 10 இடங்களுக்குள் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

              சாதனை படைத்த மாணவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த பேராசிரியர்களுக்கும் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.வரும் காலங்களிலும் கல்லூரி மாணவர்களை முதல் 10 இடங்களுக்குள் வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் எம்.எஸ்சி., வேதியில், இயற்பியல், விலங்கியல் மற்றும் எம்.ஏ., வரலாறு, ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளை கொண்டுவரவும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தெரிவித்தார்.

Read more...

செவ்வாய், 8 மார்ச், 2011

ஆட்சிமொழிப் பயிலரங்கம் : கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பேராசிரியர் பங்கேற்ப்பு

கடலூர் : 
 
           கடலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் இரண்டு நாள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் ஊரக வளர்ச்சி அலுவலக அரங்கில் நடந்தது. தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் லட்சுமணன் (ஓய்வு) தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் உமா வரவேற்றார். கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பேராசிரியர் நடராஜன் "மொழிப் பயிற்சி' தலைப்பிலும், ஐந்தாம் உலகத் தமிழ்ச்சங்க நிறுவனர் ராம முத்துக்குமரனார் "ஆட்சி மொழி ஆய்வும், குறைகளும்' தலைப்பிலும் பேசினர். பயிலரங்கில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more...

சனி, 5 மார்ச், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ஓட்டு எண்ணும் மையம்: கலெக்டர் பார்வை

கடலூர் : 

            கடலூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகள் ஓட்டுக்களை எண்ணும் மையத்தை கலெக்டர், எஸ்.பி., ஆய்வு செய்து பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 13ம் தேதி நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி மற்றும் நெய்வேலி தொகுதிகள் ஓட்டுகளை கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் எண்ண முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஓட்டு எண்ணும் மையத்தை நேற்று மாலை கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஆர்.டி.ஓ., முருகேசன், பி.ஆர்.ஓ., முத்தையா, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் மனோகரன், டி.எஸ்.பி., பாண்டியன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

Read more...

வெள்ளி, 4 மார்ச், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர் வகுப்பறையில் பூச்சி மருந்து சாப்பிட்டதால் திடீர் பரபரப்பு




கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி; விடுதியில் விஷம் குடித்தார்






கடலூர்:

            கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில், ஆசிரியர் முன்னிலையில் வகுப்பறையில் மாணவர் பூச்சி மருந்து சாப்பிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திருவக்கரையைச் சேர்ந்தவர் முருகையன். இவரது மகன் ராம்குமார் (21). இவர் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பி.எஸ்சி.,தாவரவியல் இரண்டாமாண்டு படித்து வருகிறார். பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் தங்கியுள்ளார். இவர் வகுப்பிற்கு ஒழுங்காக வராததால் பேராசிரியர் கண்டித்துள்ளார். 

                 இதனால் ராம்குமார் வகுப்பறையில் ஆசிரியர் முன்னிலையில் பூச்சிமருந்தை சாப்பிட்டார். உடன் அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் மாணவரை கண்டித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது

Read more...

வியாழன், 3 மார்ச், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கடலூர் : 

                அடிப்படை வசதி கோரி அரசு கல்லூரி பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி மாணவர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 105 பேர் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். விடுதியில் கடந்த இரண்டு மாதங்களாக சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிவறைகள் இல்லை. தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் நேற்று விடுதியில் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வார்டன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். நடவடிக்கை மேற்கொள்ளும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் அறிவித்தனர்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP