வெள்ளி, 17 மே, 2013

கடலூர் பெரியார் அரசுக் கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வம்

கடலூர்:

கடலூர் பெரியார் கலைக்  கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பங்கள் வாங்கிச் செல்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் மற்றும் விருத்தாசலத்தில் அரசுக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கடந்த காலங்களில் அரசுக் கல்லூரிகளில் சேருவதற்கு கடும் போட்டி நிலவியது. ஆனால், பொறியியல் கல்லூரிகள் காரணமாக அரசுக் கலைக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்தது. தற்போது அரசுக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் வரும் கல்வி ஆண்டுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் கடந்த 9-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆறு நாள்களில் இதுவரை 1,200 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

சனி, 11 மே, 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

கடலூர்:

    கடலூர்  பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கியது.

     கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை, இளம் அறிவியல் மற்றும் இளம் வணிகவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 9-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.  கடந்த 11-ம் தேதி வரை 400 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.

இது குறித்து கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் கூறுகையில், 

        "விண்ணப்பங்கள் கடந்த 9-ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 14-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பத்தின் விலை ரூ.27. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் தங்களின் ஜாதிச் சான்றிதழின் அசல் மற்றும் நகலைக் காண்பித்து ஒரு விண்ணப்பம் மட்டுமே இலவசமாகப் பெறலாம். கூடுதலாக தேவைப்படும் விண்ணப்பத்துக்குப் பணம் செலுத்த வேண்டும். மற்ற வகுப்பினர் விண்ணப்பத்துக்குரிய பணத்தை செலுத்தி பெறலாம்.

      கடந்தாண்டு 6,000 விண்ணப்பங்கள் வரை விற்பனையாயின. இந்தாண்டு முதல் கட்டமாக 5,000 விண்ணப்பம் வரை அச்சிடப்பட்டுள்ளது. கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்படும் என்றார்.


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP