செவ்வாய், 27 மார்ச், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வேதியியல் மன்றத் தொடக்க விழா

கடலூர்: 

   கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வேதியியல் மன்றத் தொடக்க விழா திங்கள்கிழமை நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வரும் (பொறுப்பு) வரலாற்றுத்துறைத் தலைவருமான முனைவர் க.காந்திமதி தலைமை தாங்கினார். வேதியியல் துறைத் தலைவர் முனைவர் பா.ஷர்மிளா இந்திராணி முன்னிலை வகித்தார். கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி வேதியியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் அனுசுயா சிறப்பு சொற்பொழிவாற்றினார். வேதியியல் துறை இணைப் பேராசிரியர் சு.கலைமணி நன்றி கூறினார்.

Read more...

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் மாணவர் பேரவையின் முன்னாள் செயலர் வாஞ்சிநாதனுக்கு பாராட்டு விழா



கடலூர் :


    கடலூர் பெரியார் கலைக்  கல்லூரியின் மாணவர் பேரவையின் முன்னாள் செயலர் வாஞ்சிநாதன். இவர் கடந்த 18 ஆண்டுகளில் 33 முறை ரத்ததானம் செய்துள்ளார். அவரது சேவையைப் பாராட்டி கடலூர் பெரியார் கல்லூரி பிற்பட்டோர் நல விடுதி மாணவர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. மாணவர் சிலம்பரசன் தலைமை தாங்கினார். சங்கரநாராயணன், குபேந்திரன், கோதண்டபாணி முன்னிலை வகித்தனர். ஜெயபால் வரவேற்றார். தொடர்ந்து ரத்ததானம் செய்து வரும் வாஞ்சிநாதனை விடுதி மாணவர்கள் சார்பில் பாராட்டி கவுரவித்தனர். பின்னர் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆரோக்கிய அருள்தாஸ் நன்றி கூறினார்.



Read more...

வியாழன், 22 மார்ச், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி விடுதி மாணவர்கள் தரமான உணவு வழங்காததைக் கண்டித்து போராட்டம்

கடலூர் :
 
          கடலூர்  பெரியார் கலைக் கல்லூரி விடுதி மாணவர்கள் தரமான உணவு வழங்காததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
         கடலூர், தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பலர் கல்லூரி எதிரில் உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு நேற்று காலை உணவு வழங்கப்பட்டது. அது தரமாக இல்லாததாலும், விடுதியில் கழிவறை சுத்தம் செய்யாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உணவை சாப்பிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் ராமலிங்கம் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உணவு தரமாக வழங்குவதாகவும், பிற கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனையேற்று மாணவர்கள் காலை 11 மணிக்கு தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டு வகுப்பிற்குச் சென்றனர்.

Read more...

செவ்வாய், 6 மார்ச், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதியில் சுகாதாரமற்ற உணவு

கடலூர்:
 
     கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்கள், சுகாதாரமற்ற உணவைக் கண்டித்து திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

           கல்லூரிக்கு அருகில் உள்ள  மாணவர்கள் விடுதியில் 105 மாணவர்கள் தங்கிப் படிக்கிறார்கள். இவர்களுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்கிறார்கள் மாணவர்கள் .தானே புயலில் ஏற்பட்ட சேதங்கள் சரிசெய்யப்படவில்லை. உணவு தரமானதாகவும் சுகாதாரமாகவும் இல்லை என்றும் குற்றம்சாட்டுகிறார்கள். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பயனில்லை என்கிறார்கள்.

        இந்நிலையில் திங்கள்கிழமை வழங்கப்பட்ட காலை உணவு, சுதாரமற்ற நிலையிலும் துர்நாற்றத்துடனும், புழுப் பூச்சிகளுடனும் மிகமோசமாக இருந்ததாம். எனவே விடுதி மாணவர்கள் காலை உணவைப் புறக்கணித்து, கல்லூரி வகுப்புகளையும் பறக்கணித்தனர். பின்னர் விடுதி வாயில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்ததும் பிற்பட்டோர் நலத்துறை வட்டாட்சியர் பழநி மற்றும் கடலூர் வட்டாட்சியர் எழிலன் ஆகியோர் விரைந்து வந்து, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

       பிற்பட்டோர் மாணவர் விடுதியைச் சீரமைக்க ரூ. 5 லட்சம் ஒதுக்கி இருப்பதாகவும், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும், சுகாதாரமான உணவு வழங்கப்படும் என்றும் வட்டாசியர் பழநி உறுதி அளித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் கலைந்துச் சென்றனர்.

Read more...

திங்கள், 5 மார்ச், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பு


கடலூர் :

       கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பு நடந்தது.

        பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி உதவியுடன் சென்னை தாய் மரம் தொண்டு நிறுவனம் சார்பில் மாணவர்களின் தனி திறனை மேம்பாடுத்துவதற்காக மாதிரி நேர்முக தேர்வு மூன்று நாள் நடைபெற்றது. பயிற்சி வகுப்யில் கல்லூரியைச் சேர்ந்த மூன்றாமாண்டு மாணவர்கள் 800 பேர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு மாதிரி நேர்காணல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
 

      பயிற்சி வகுப்பின் நிறைவு விழாவிற்கு கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். பேராசிரியர் காந்திமதி வரவேற்றார். பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவர்களுக்கு கடலூர் டி.எஸ்.பி., வனிதா சான்றிதழ் வழங்கினார். வேலை வாய்ப்பு மற்றும் வழிகாட்டுதல் பயிற்சியின் பொறுப்பாளரான பேராசிரியர் சின்னதுரை நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ஜெயந்திதேவி, கண்ணன், மனோகரன், சிவக்குமார் செய்திருந்தனர். 


Read more...

வெள்ளி, 2 மார்ச், 2012

கடலூர் பெரியார் கல்லூரி தி.மு.க. மாணவர் அணியினர் ரத்ததான முகாம் ஏ

கடலூர் மார்ச் 1:

முன்னாள் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த தினம் கடலூரில் தி.மு.க.வினரால் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. தி.மு.க. மாணவர் அணியினர் கடலூரில் புதன்கிழமை ரத்ததானம் செய்தனர். மு.க. ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த ரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி தி.மு.க. மாணவர் அணியினர் நடத்திய ரத்ததான முகாமுக்கு, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் கு.வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார். கடலூர் அரசு மருத்துவமனையில் நடந்த ரத்ததான முகாமை, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார். பெரியார் கல்லூரி தி.மு.க. மாணவர் அணியினர் அன்புதாசன், கிருஷ்ணராஜ், ராகவன், சிவதாசன், விக்னேஸ்வரி, விஜி, ராமு, புருஷோத்தமன், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP