செவ்வாய், 18 செப்டம்பர், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தந்தைப் பெரியாரின் 134-வது பிறந்த தினம் கொண்டாட்டம்

 கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தந்தைப் பெரியாரின் 134-வது பிறந்த தினத்தில் ( 17/09/2012) நமது கல்லூரியில் அமைந்துள்ள தந்தைப் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 






நமது கல்லூரியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு நமது கல்லூரி  பேராசிரியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்





நமது கல்லூரியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு கடலூர் மாவட்ட திராவிடர் கழக (தி.க) நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்




 



நமது கல்லூரி முதுநிலை தாவரவியல் துறை மாணவர்கள் ( M.sc, Botany - Students)

Read more...

வியாழன், 13 செப்டம்பர், 2012

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரி பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து போராட்டம்

கடலூர், :

 
    கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்த நிலையில் போலீஸ் தடியடி நடத்தி கலைத்தது. துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். இதனை கண்டித்து கடலூரில் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்தது. அணுமின் நிலையம் அருகே செல்வதை தடுத்த போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தினர். தகவல் பரவிய நிலையில் திருசெந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட திரண்ட கூட்டத்தை பார்த்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு மீனவர் பலியானார். இதனால் நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பதற்றம் நிலவி வருகிறது.

      இந்நிலையில் கடலூரில் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் 2ஆயிரம் பேர் நேற்று (11/09/2012) வகுப்புகளை புறக்கணித்து பாதுகாப்பற்ற அணுமின் நிலையத்தை மூட வேண்டும், கடல் நீர், சூரிய ஒளி மின்சார உற்பத்தியை அதிகரிக்க வழிகாண வேண்டும், பொதுமக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை  நடவடிக்கை கண்டிப்பது, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும், மக்கள் கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் நியாயமான தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கல்லூரி வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கூடங்குளம் விவகாரத்தில் உரிய தீர்வு காணப்படவில்லை எனில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Read more...

சனி, 8 செப்டம்பர், 2012

கடலூர் பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் இலவச பஸ் பாஸ் வழங்கக்கோரி சப் கலெக்டரிடம் மனு

 கடலூர்


     இலவச பஸ் பாஸ் வழங்கக்கோரி கடலூர் பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள்  நேற்று வகுப்பை புறக்கணித்து ஸ்டிரைக்செய்தனர். இலவச பஸ் பாஸ், குடிநீர்  உள்ளிட்டவசதிகள் செய்துதரக் கோரி கடலூர் பெரியார் கலைக் கல்லூரி  மாணவ, மாணவியர்கள் நேற்று பிற்பகல்வகுப்பை புறக்கணித்து ஸ்டிரைக் செய்தனர். கல்லூரி முன்பு திரண்ட மாணவ,மாணவியர்கள் கோஷமிட்டபடி ஊர்வலமாக வந்து சப் கலெக்டர் லலிதாவிடம்மனு கொடுத்தனர்.

இது குறித்து கல்லூரியில் 3ம் ஆண்டுதமிழ்த்துறை மாணவர் பாலகிருஷ்ணன்கூறுகையில்,

      கல்லூரி திறந்து  இரண்டு மாதங்களாகியும் இதுவரை எங்களுக்கு பஸ் பாஸ் வழங்கவில்லை. இது பற்றி கேட்டால் போக்குவரத்துக்கழக நிர்வாகம், உங்கள் அடையாள அட்டை காண்பித்து பஸ்சில்  டிக்கெட் வாங்காமல் செல்லுமாறு கூறுகின்றனர். ஆனால் பஸ் சில் கண்டக்டர்  ஏற்றுக்கொள்வதில்லை. டிக்கெட் வாங்கும்படி வற்புறுத்துகின்றனர்  என்றார்.

அரசு போக்குவரத்துக்கழக கமர்ஷியல் மேலாளர் முருகானந்தம் கூறுகையில்,


கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்காக 400  பேரின் புகைப்படம் ஒட்டிய மனுக்கள் சென்னைக்கு  அனுப்பப்பட்டுள்ளன.  இதற்கிடையே மாணவர்கள் அரசு பஸ்களில் அடையாள அட்டையை  காண்பித்து பயணம் செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது. இது பற்றி கண்டக்டர்களிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டக்டர்கள் அனுமதிக்கவில்லை என புகார் தெரிவித்தால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Read more...

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆதிதிராவிட விடுதியில் சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதைக் கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கடலூர்:
     கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் ஆதிதிராவிட மாணவர்கள்  விடுதியில் 180 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று காலை விடுதியில் வழங்கப்பட்ட உணவு சுகாதாரமாக இல்லை என மாணவர்கள் உணவை  சாப்பிடாமல் புறக்கணித்தனர். மேலும் விடுதியில் கழிவறை, குளியலறை, சமையலறை ஆகியவைகளை முறையாக பராமரிக்காததை கண்டித்து ஆனந்தராஜ், செந்தில் ஆகியோர் தலைமை மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

             தகவலறிந்த கடலூர்  ஆதிதிராவிடர் நலத் துறை தாசில்தார் சரவணன், மாணவர்களிடம் பேச்சுவார்தை  நடத்தி இனி சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை விலக்கிக் கொண்டு மாணவர்கள் கல்லூரி சென்றனர்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP