செவ்வாய், 23 ஏப்ரல், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தமிழ் பாடத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசு

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தமிழ் பாடத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் அறக்கட்டளை சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

இந்த அறக்கட்டளை மூலம் ரூ.1 லட்சம் வங்கி சேமிப்பில் செலுத்தப்பட்டு, அதில் கிடைக்கும் வட்டியைக் கொண்டு பல்கலைக்கழகத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 2010-2011-ம் மற்றும் 2011-2012-ம் ஆண்டில் கல்லூரி அளவில் தமிழ் பாடத்தில் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா கல்லூரியில் திங்கள்கிழமை 
(22/04/2013) அன்று  நடைபெற்றது.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  கோ.அய்யப்பன் 6 மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். முதல் பரிசாக ரூ.1,500, இரண்டாம் பரிசாக ரூ.1,250, மூன்றாம் பரிசாக ரூ.1,000 வழங்கப்பட்டது. இந்த ஆண்டு, அறக்கட்டளை சேமிப்புக்கு மேலும் ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் பரிசுத்தொகையும் அதிகமாகும் என்றும் அய்யப்பன் தெரிவித்தார்.

விழாவில், கல்லூரி முதல்வர் வ.விஸ்வநாதன், தமிழியல் உயராய்வு மையத் தலைவர் சு.தமிழாழிக் கொற்கைவேந்தன், விலங்கியல் துறைத் தலைவர் இரா.ஜெயந்திதேவி, பேராசிரியர் அ.அர்த்தநாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 1,040 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பயிலும் 1,040 மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் இலவச மடிக்கணினியை சனிக்கிழமை 13/04/2013 வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் வரவேற்றார். மாவட்ட ஊராட்சித் தலைவர் மல்லிகா வைத்தியலிங்கம், நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்பிரமணியன், துணைத் தலைவர் சி.ஜெ.குமார், நகரச் செயலர் குமரன், ஒன்றியச் செயலர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமைச்சர் எம்.சி. சம்பத் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினியை வழங்கி பேசினார். தமிழ்த்துறைத் தலைவர் தமிழாழி கொற்கைவேந்தன் நன்றி கூறினார். முன்னதாக அமைச்சர் சம்பத் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வெளியிட்டார். அப்போது நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச்செயலர் நிஜாமுதீன் உடனிருந்தார்.

பாதுகாப்பான குடிநீர்: 

மாணவர்கள் கோரிக்கை மாணவர்கள் சார்பில் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், அமைச்சரிடம் அளித்த மனு:

இக் கல்லூரியில் பாதுகாப்பான குடிநீர் கிடையாது. எனவே தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்கி கொடுத்து மாணவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அனைத்து மாணவர்களும் அமர்ந்து சாப்பிடும் வகையில் கேன்டீன் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

Rs.1.42 crore free laptops distributed to Periyar Government Arts College students

The Akilesh Yadav’s Government in Uttar Pradesh has emulated the innovative scheme of Jayalalithaa’s Government of providing free laptops to students, said M.C. Sampath, Environment Minister. He was delivering a speech at a function held in Periyar Government Arts College here to distribute laptops worth Rs. 1.42 crore to 1,040 students on Saturday(13/04/2013) . The Minister said that Chief Minister had launched many welfare schemes that had caught the attention of the entire nation. He called upon the students to put the laptops to the best use. Collector R. Kirlosh Kumar, Principal V.N. Viswanathan participated.


 Environment Minister M.C. Sampath giving away a free laptop to a student of the Periyar Government Arts College in Cuddalore on Saturday.



Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP