வியாழன், 15 அக்டோபர், 2015

பாரத ரத்னா டாக்டர். ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது.

       கடலூர்  பெரியார் கலைக் கல்லூரியில் 15.10.2015 வியாழக்கிழமையன்று தமிழக அரசின் ஆணைக்கிணங்க பாரத ரத்னா டாக்டர். ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது. 15.10.2015 அன்று காலை 09.00 மணிக்குக் கல்லூரி வளாகத்திலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் பழைய அலுவலகம் வரை இளைஞர் எழுச்சி பேரணி நடைபெற்றது. 
    இப்பேரணியைக் கல்லூரின் முதல்வர் கொடியசைத்துத் தொடக்கிவைத்தார். பேரணி கடலூர் புதுப்பாளையம்  வழியாக மாவட்டத் தலைவர் பழைய அலுவலகத்தைச் சென்றடைந்தது. பேரணியில் மாண்பு மிகு தமிழக முதல்வரின் தொலைநோக்குத் திட்டம் 2023 யினை வெளிப்படுத்தும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர். பேரணியை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் கே. பழனிவேலு  திரு. சந்திரசேகரன் முனைவர் ந. பாஸ்கரன் திரு. சிவசண்முகராஜா ஆகியோர்  வழிநடத்திச் சென்றனர். இப்பேரணியில் கல்லூரிப் பேராசிரியர்களும் மாணவர்களும் நாட்டு நலப்பணித்திட்டத் தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். 

                15.10.2015 அன்று மதியம் 2 மணிக்குப் பெரியார் கலைக்கல்லூரியின் அண்ணா நூற்றாண்டு விழாக் கட்டடத்தில் இளைஞர் எழுச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு. தமிழாழி கொற்கை வேந்தன் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வர்(பொ.)க.மனோகரன் தலைமை தாங்கினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறைப் பேராசிரியர் முனைவர் ச.பாலமுருகன் அப்துல்கலாமின் செயல்பாடுகள் சிறப்புகள் பணிகள் அவர் மாணவர்களுக்கும் நாட்டுக்கும் ஆற்றிய சேவைகளைப் பற்றி விரிவாகச் சிறப்புரையாற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவர் முனைவர்.கே.பழனிவேலு நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் திரு.சந்திரசேகரன் முனைவர் ந. பாஸ்கரன் திரு. சிவசண்முகராஜா ஆகியோர்  ஒருங்கிணைத்தனர்;. விழாவில் கல்லூரி மாணவர் அனைவரும் பங்கேற்று அப்துல் கலாமின் சிறப்புகளை அறிந்துகொள்வதன் மூலம் எழுச்சி பெற்றனர்.




Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

செவ்வாய், 13 அக்டோபர், 2015

கடலூா், பொியாா் கலைக் கல்லூாியில் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Read more...

வியாழன், 1 அக்டோபர், 2015

பொியாா் கலைக் கல்லூாியின் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு மாணவா்கள் பேரணி 01.10.2015 -வியாழக்கிழமை காலை 09.00 மணியளவில் நடைபெற்றது


மக்களாட்சியின் அடிப்படை காலந்தோரும் மக்கள் பங்கேற்கும் தேர்தல் உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி இந்தியா. வருகின்ற தேர்தல் காலங்களில் அதிகமாக வாக்காளர் பங்கேற்புக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் வாக்குரிமையின் முக்கியத்துவத்தை வெளிக்கொணர்வதில் தேர்தல் குழுவின் பரிந்துரையின் பேரில் விழிப்புணர்வு பேரணி மாவட்டந்தோரும் நடைபெறும். 
கடலூர் மாவட்டத்தின் கீழ்க்கண்ட செய்திகள் அடங்கிய விழிப்புணர்வை 01.10.2015- அன்று காலை 09.00 மணியளவில் அரசியல் அறிவியல் துறையின் சார்பில் நடைபெற்றது. இப்பேரணியானது கடலூர் மாவட்டர் ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் அவர்கள் கொடியை அசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் கல்லூரி முதல்வர்.வ.நா.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். 
இப்பேரணியில் கல்லூரியின் மாணவ/மாணவிகள் கீழ்க்கண்ட செய்திகள் அடங்கிய விழிப்புணர்வை பதாகைகளை ஏந்தி வாயில் வழியாக கோஷமிட்டும் வாக்களிப்பதின் அவசியத்தை பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 
1. வாக்களிப்பது ஜனநாயக கடமை
2. வாக்குரிமை நமது உரிமை
3. மற்ற உரிமைகளை பெற அளித்திடுவோம் வாக்குரிமை.
4. மக்களாட்சியின் பெருமை நாம் அளிக்கும் வாக்குரிமை.
5. மறக்காதே! மறக்காதே! வாக்களிக்க மறக்காதே!
6. வாக்களிப்போம் வளமான இந்தியாவை பெறுவோம்.
7. விற்காதே! விற்காதே! வாக்குகளை விற்காதே!
8. வாக்காளர் என்பதில் பெருமை கொள்வேன்! வாக்களிக்க தயார் என்பேன்! 
9. நீங்கள் விரும்பும் மாற்றம் உங்களிடமிருந்து தொடங்கட்டும்!
10. உங்கள் வாக்கு… உங்கள் சக்தி…வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்!
11. நல்வாழ்க்கைக்கு வாக்களி! வாக்களித்தால் வாழ்வு கிட்டும்.
12. மக்களாட்சியின் இதயமே வாக்குச்சாவடிமறக்காமல் செல்வோம் மதிப்போம்! பதிவு செய்வோம் வாக்கினை.
13. உன் வாக்கு உன் உரிமை உரிமைக்கு மதிப்பளி
 பெரியார் அரசு கல்லூரியின் பேரா.ஆர்.ரவி ஆங்கிலத்துறைத்தலைவர் பேரா.வி.இராயப்பன் வரலாற்று துறைத்தலைவர் மற்றும் தேர்தல் அதிகாரியான பேரா.கி.செந்தில்குமார் முனைவர்.ப.இளவரசன் அரசியல் அறிவியல் துறை பேராசியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இப்பேரணியானது கடலூர் நகர அரங்கில் தொடங்கப்பெற்று பிரதான சாலை வழியாக உழவர் சந்தை வரை சென்று நிறைவடைந்தது.
தினமலா் 02.10.2015

தினமலா் 02.10.2015

தினத்தந்தி 02.10.2015

தினத்தந்தி 02.10.2015
Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்


Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP