ஞாயிறு, 27 அக்டோபர், 2013

Rs.50 lakh chemistry lab for Cuddalore Periyar Arts College

Cuddalore:

Environment Minister M.C. Sampath inaugurated a chemistry laboratory built at a cost of Rs. 50 lakh at Periyar Government Arts College here on Saturday (26.10.2013). The Minister reportedly sanctioned the entire amount for construction of the laboratory from his MLA’s Local Area Development Funds. Speaking on the occasion, he said that Chief Minister Jayalalithaa had taken many initiatives for improving the standard of education. For enhancing skills of students and to help them shine in their career, she had launched the free laptop scheme. 


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ரூ.50 லட்சம் மதிப்பில் வேதியியல் ஆய்வுக்கூட கட்டடம் திறப்பு

கடலூர்:

கடலூர் பெரியார் கலைக் கல்லூரிக்கு வேதியியல் ஆய்வுக்கூட கட்டடம் கட்ட சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஒதுக்கியிருந்தார். அந்த நிதியில் கட்டப்பட்ட வேதியியல் ஆய்வுக்கூடத்தின் திறப்பு விழா சனிக்கிழமை (26.10.2013) காலையில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) மனோகரன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் வரவேற்று பேசினார். 

விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேதியியல் ஆய்வுக்கூடத்தை திறந்து வைத்து பேசியது: 

 பெரியார் கலைக் கல்லூயில் முதுகலை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 4016.45 சதுர அடிப் பரப்பில் புதிய வேதியியல் ஆய்வகக் கட்டடம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் ஆய்வுக்கூடம், ஆசிரியர் அறை, பொருள்கள் வைக்கும் அறை மற்றும் ரசாயன அறை ஆகியவை உள்ளன. மாணவர்கள் ஆய்வகத்தை முழுமையாகப் பயன்படுத்தி ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொண்டு தலைசிறந்த மாணவர்களாக உருவாகவேண்டும். 50–ம் ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் இக்கல்லூரிக்கு தன்னாட்சி பெற்றுத்தர முயற்சிகள் எடுப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். என்.எல்.சி. நிறுவனத்திடம் இருந்து 2½ கோடி ரூபாய் கட்டிட வசதிக்காக பெற்றுத்தர ஏற்பாடு செய்வேன். இந்த நிதி கிடைக்கவில்லையெனில் வேறு சாத்தியக்கூறுகளை கண்டறியவும் நடவடிக்கை எடுப்பேன். இக்கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக 12 புதிய பாடப்பிரிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு எம்.பி.ஏ. படிப்பு கொண்டு வருவதற்கு உயர்கல்வித்துறை அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் குமார், நகராட்சி துணைத்தலைவர் ஜி.ஜெ.குமார், கடலூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பழனிச்சாமி, கவுன்சிலர் பழனிச்சாமி மற்றும் பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் வேதியியல் துறை தலைவர் ஷர்மிளா இந்திராணி நன்றி கூறினார். நிகழ்ச்சியை செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி தமிழ்செல்வராஜன் தொகுத்து வழங்கினார்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

சனி, 12 அக்டோபர், 2013

MANAFEST-13 தேசிய அளவிலான போட்டியில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் இராண்டாமிடம் பெற்று சாதனை

புதுச்சேரி சமுதாயக் கல்லூரி மேலாண்மைத் துறையால் 10/10/2013 அன்று MANAFEST-13 தேசிய அளவிலான போட்டிகள் நடைபெற்றது. இதில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வணிகவியல் துறை சார்பில் 12 மாணவர்கள் பங்கேற்றனர். இளம் வணிகவியல் மூன்றாமாண்டை சேர்ந்த கெளதம் மற்றும் முபாரக் அலி ஆகியோர் BUSINESS QUIZ-ல் இராண்டாமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பெரியார் கலைக் கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், பேராசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். 



Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

புதன், 9 அக்டோபர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் எதிர்ப்பு தொடர்பான வாசகம் எழுதும் போட்டி

கடலூர்:

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு, போதைப் பொருள் எதிர்ப்பு தொடர்பான வாசகம் எழுதும் போட்டி செவ்வாய்க்கிழமை (08/10/2013) அன்று நடைபெற்றது. 

 கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சந்துரு முன்னிலை வகித்தார். கல்லூரி ஆங்கிலத் துறை பேராசிரியர் டேவிட் சௌந்தர் ஒருங்கிணைத்தார். மாணவர்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான வாசகங்களை எழுதினர். புனித வளனார் மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் மரிய சேவியர், ஜேசிஐ அமைப்பு சண்முகம் நடுவராகச் செயல்பட்டார். மாணவர்கள் கருணாகரன், கோபிதாஸ் ஆகியோர் முதல் இரண்டு பரிசுகளைப் பெற்றனர்.




Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வெள்ளி, 4 அக்டோபர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ஒரே நாளில் 150 மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர்

கடலூர் :

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ஒரே நாளில் 150 மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை (03.10.2013) அன்று நடைபெற்ற ரத்த தான முகாமிற்கு கல்லூரி முதல்வர் என்.விஸ்வநாதன் தலைமை வகித்தார்.  இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நிர்மல்குமார் ரத்த தானம் வழங்கி முகாமைத் தொடங்கி வைத்தார். முகாமில் கல்லூரி மாணவர்கள் சுமார் 150 பேர் ரத்த தானம் வழங்கினர்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

செவ்வாய், 1 அக்டோபர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள கல்வி உதவி தொகையை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கடலூர்:

விண்ணப்பம் அளித்து 2 ஆண்டுகளாகியும் வழங்கப்படாமல் உள்ள கல்வி உதவித் தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கடலூர் பெரியார்  கலைக் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் பாடப் பிரிவு 2-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள், கடலூர் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமாரிடம் திங்கள்கிழமை அளித்த மனு:

2012-2013 கல்வி ஆண்டில் இளங்கலை பொருளாதாரம் பாடப் பிரிவில் சேர்ந்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கல்வி உதவித்தொகை கேட்டு உரிய முறையில் விண்ணப்பம் அளித்திருந்தோம். மற்றத் துறை மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குரிய உதவித்தொகையும் வழங்கப்பட்ட நிலையில், பொருளாதாரத் துறை மாணவர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படவில்லை. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியிருந்தனர். 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP