வெள்ளி, 9 ஜூலை, 2010

ஆசிரியர்களே இல்லாத கடலூர் பெரியார் கலைக் கல்லூரி... மாணவர்கள் தவிப்பு


கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தும் கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவ மாணவியர்.
டலூர்:

             தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் 2-வது ஷிஃப்ட் (2-வது சுழற்சி வகுப்புகள்) மாணவர்கள் ஆசிரியர்கள் இன்றித் தவிக்கிறார்கள். தமிழகத்தில் 69 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் கடந்த 3 ஆண்டுகளாக 2-வது ஷிஃப்ட் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் 60 ஆயிரம் மாணவ,  மாணவிகள் படிக்கிறார்கள். கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மட்டும் 1,000 மாணவ மாணவிகள் படிக்கிறார்கள்.2-வது ஷிஃப்ட் கல்லூரிக்கு ஆண்டுதோறும் தாற்காலிக ஆசிரியர்களை ( கௌரவ  விரிவுரையாளர்கள்) அரசு நியமிக்கிறது. மார்ச் மாதத்தில் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டு பணிபுரிந்த 600 கெüரவ விரிவுரையாளர்களும் மார்ச் மாதத்தில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். கடந்த கல்வி ஆண்டு ஜூன் மாதம் வகுப்புகள் தொடங்கியதும், அதற்கு முந்தைய ஆண்டு பணிபுரிந்த  கௌரவ  விரிவுரையாளர்களை, ஜூன் மாதத்தில் பணிக்கு வந்துவிடுமாறும், பணியாணை பின்னர் வழங்கப்படும் என்றும் வாய்மொழியாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் கடந்த ஆண்டு மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல், தொடக்கத்திலேயே ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி கல்லூரி வகுப்புகள் தொடங்கி விட்டன. ஆனால் 2-வது ஷிஃப்ட் கல்லூரி வகுப்புகளுக்கு, ஆசிரியர்கள் இன்னமும் நியமிக்கப்படவில்லை. இதனால் வகுப்பறைகள், ஆசிரியர்கள் இன்றி காணப்படுகின்றன.

இது குறித்து அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் பழநி கூறுகையில்,

           "2-வது ஷிஃப்ட் கல்லூரி வகுப்புகளுக்கு, ஆண்டுதோறும் கெüரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுவதும், ஆண்டு இறுதியில் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதுமாக உள்ளனர். இதனால் கல்வி ஆண்டு தொடக்கத்தில் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் நிலை உள்ளது. கடந்த கல்வி ஆண்டில் வாய்மொழி உத்தரவைப் பெற்று, முந்தைய ஆண்டில் பணிபுரிந்த அனைத்து கெüரவ விரிவுரையாளர்களும், ஜூன் மாதம் வகுப்புகள் தொடங்கும் போதே பணிக்கு வந்து விட்டனர். ஆனால் இந்த ஆண்டு அவ்வாறு வாய்மொழி உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. அதனால் கெüரவ விரிவுரையாளர்கள் யாரும் இன்னமும் பணிக்கு வரவில்லை. எனவே இனிமேல்தான் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் குறித்து, கல்லூரிக் கல்வி இயக்குநரின் உத்தரவு வரவேண்டும். இது குறித்து கல்வித் துறைச் செயலரை புதன்கிழமை சந்தித்துப் பேசி இருக்கிறோம். எங்களது சங்கம் மேற்கொண்ட முயற்சியால், கெரவ விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியம் ரூ. 4 ஆயிரத்தில் இருந்து ரூ. 6 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, 2-வது ஷிஃப்ட் கல்லூரி வகுப்புகளுக்கும் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று அரசிடம் வற்புறுத்தி வருகிறோம் என்றார். 2-வது ஷிஃப்ட் கல்லூரி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இன்னமும் நியமிக்கப்படாததால், ஆங்காங்கே கல்லூரி மாணவ மாணவியர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆசிரியர்கள் நியமிக்கப்படாததைக் கண்டித்து, கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவ மாணவியர் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்தனர்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP