ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ராக்கிங் மற்றும் ஈவ்டீசிங் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

கடலூர்:


       கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் ராக்கிங் மற்றும் ஈவ்டீசிங் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

       கல்லூரிகளில் சீனியர்  மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை ராக்கிங் செய்து துன்புறுத்துவதை தடுக்கும் பொருட்டும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் போலீஸ் துறை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் 25/08/2012 அன்று    நடந்தது. கல்லூரி வளாகத்தில் நடந்த கருத்தரங்கிற்கு கல்லூரி பேராசிரியர் (பொறுப்பு) ஜெயந்திதேவி தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., சுந்தரவடிவேல், புதுநகர் இன்ஸ்பெக்டர் பால்சுதர், சப் இன்ஸ்பெக்டர் தண்டபாணி ஆகியோர் ராக்கிங் மற்றும் ஈவ்டீசிங் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள், இத்தவறை செய்வோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். மேலும், மாணவர்கள் அனைவரும் நட்புடன் பழக வலியுறுத்தினர்.


Read more...

சனி, 25 ஆகஸ்ட், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் இலவச பஸ் பாஸ், கல்வி உதவி தொகை வழங்ககோரி மாலை நேர வகுப்பு மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கடலூர் :


    இலவச பஸ் பாஸ், கல்வி உதவி தொகை வழங்ககோரி  பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் மீண்டும் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

       கடலூரில் தேவனாம்பட்டினம்   பெரியார் கலைக் கல்லூரியில் பி.ஏ, பி.எஸ்.சி, எம்.ஏ, எம்எஸ்சி உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சுமார் 2 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர். காலை, மாலை என இரு பிரிவாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 3 மாத காலமாக இலவச பஸ் பாஸ் வழங்காமல் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். பஸ் பாஸ் கடலூர் நகரோடு மட்டுமல்லாமல் கல்லூரி அமைந்துள்ள தேவனாம்பட்டினம் வரை மாணவர்கள் வந்து- செல்லத்தக்க வகையில் வழங்க வேண்டும். கல்வி உதவி தொகை பெறும் மாணவ- மாணவிகளுக்கு உடனடியாக சம்பந்தப்பட்ட தொகை வழங்க வேண்டும்.

           கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கல்லூரியின் பாதுகாப்பு மற்றும் மாணவ- மாணவிகள் நலன் கருதி சுற்று சுவர் முழுமையாக கட்டி முடிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகுப்பு மாணவ- மாணவிகள் கடந்த 13ம் தேதி முதல் 3 முறை வகுப்புகளை புறக்கணித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனடிப்படையில் காலை நேர வகுப்பில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு பஸ் பாஸ் மற்றும் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில் மாலை நேர வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகள் நிலை குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து நேற்று மாலை நேர வகுப்புகளுக்கு வந்த மாணவ- மாணவிகள் சுமார் 700 பேர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

        தகவலறிந்து வந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு நலத்திட்டங்கள் விடுபட்ட மாணவ- மாணவி களுக்கு விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


 

Read more...

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்கப்படும்

கடலூர்:


      கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவ மாணவியருக்கு வழங்க வேண்டிய 634 ஸ்மார்ட் கார்டுகள் விரைவில் வழங்கப்படும் என கடலூர் மண்டல பொது மேலாளர் கூறியுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) பிரிவு கடலூர் மண்டல பொது மேலாளர் முருகானந்தம் விடுத்துள்ள விளக்கம்:


        கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரி மாணவ, மணவியர்களுக்கு இக் கல்வியாண்டில் 2012-13 அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்வதற்குமொத்தம்  2,580 விண்ணப்பங்கள்வழங்கப்பட்டன.  பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 1,381 வரப்பெற்று இப்போக்குவரத்துக் கழக பணிமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவற்றில் 744 ஸ்மார்ட் கார்டுகள் தயார் செய்து, மாணவ, மாணவியருக்கு  வழங்கும் பொருட்டு இக்கல்லூரிக்கு அனுப்பப்பட்டு விட்டன. மீதி வழங்கப்பட  வேண்டிய ஸ்மார்ட் கார்டுகள் 637ம் விரைவில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Read more...

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

கல்வி உதவித் தொகை, இலவச பஸ் பாஸ் வழங்கக் கோரி கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

கடலூர்: 


    கல்வி உதவித் தொகை, இலவச பஸ் பாஸ் வழங்கக் கோரி கடலூர் பெரியார் கலைக்  கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

        கடலூர், தேவனாம்பட்டினம் பெரியார் கல்லூரி மாணவர்கள், அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையை உடன் வழங்க வேண்டும். மூன்றாமாண்டு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும். கல்லூரியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். விரிவுரையாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அரசின் இலவச பஸ் பாஸ் கிராமங்களில் இருந்து கடலூர் வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால் கடலூரில் இருந்து கல்லூரிக்கு மாணவர்கள் வர சிரமமாக உள்ளதால், மாணவர்கள் கிராமங்களில் இருந்து கல்லூரிக்கு வந்து செல்லும் வகையில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP