வெள்ளி, 28 அக்டோபர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளுக்கு அனுமதி: மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

           கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் சேர விருப்பம் உள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

           கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2011-12ம் ஆண்டில் புதிதாக பாடப்பிரிவுகள் துவங்க அரசு அனுமதியளித்துள் து. இதில் பி.எஸ்சி., புள்ளியியல், எம்.எஸ்சி., தாவரவியல், எம்.ஏ., ஆங்கிலம், வரலாறு, எம்.பிஎல்., தமிழ் (முழு நேரம்), பிஎச்.டி., தமிழ்., (முழு நேரம்) ஆகிய வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. 

            இந்த வகுப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் வரும் 28ம் தேதி வரை உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் கல்லூரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 30ம் தேதி காலை 10 மணியளவில் நடக்கிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Read more...

வியாழன், 20 அக்டோபர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

கடலூர்:

            ஓட்டுப்பதிவு செய்த மின்னணு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பாக வைத்துள்ள ஓட்டு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

            உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்டமாக நேற்று கடலூர், சிதம்பரம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தல் நடந்தது. இதில் நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களும், ஒன்றியங்களில் ஓட்டு சீட்டுகளும் ஓட்டுப் பதிவிற்கு பயன்படுத்தப்பட்டன. மாலை 5 மணிக்கு ஓட்டுப் பதிவு முடிந்ததும் அந்தந்த ஓட்டுச் சாவடிகளில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு ஓட்டுப் பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டன.

ஓட்டுபெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்கள் விவரம்:

நகராட்சி: 

கடலூர் -  டவுன்ஹால், கடலூர். 
சிதம்பரம் - ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம்.

பேரூராட்சி: 

குறிஞ்சிப்பாடி, வடலூர் - அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி. திட்டக்குடி - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திட்டக்குடி.
ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு - டி.ஜி.எம்.மேல்நிலைப் பள்ளி, சேத்தியாத்தோப்பு. 
காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை - பர்வதராஜகுல குருகுல மேல்நிலைப் பள்ளி - காட்டுமன்னார்கோவில். 
அண்ணாமலை நகர் - ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி, அண்ணாமலை நகர். 
புவனகிரி, பரங்கிப்பேட்டை - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - புவனகிரி. கிள்ளை - அரசு மேல்நிலைப் பள்ளி, கிள்ளை.

ஒன்றியம்: 

கடலூர் - பெரியார் அரசு கல்லூரி, தேவனாம்பட்டினம். 
 குறிஞ்சிப்பாடி - எஸ்.கே.வி. மெட்ரிக் பள்ளி, குறிஞ்சிப்பாடி. 
மேல்புவனகிரி - சந்திரா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேத்தியாத்தோப்பு. பரங்கிப்பேட்டை - அரசு கல்லூரி, சி.முட்லூர். 
கீரப்பாளையம் - அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
 சிதம்பரம். குமராட்சி - நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 
சிதம்பரம். காட்டுமன்னார்கோவில் - ஆ.சி.மேல்நிலைப்பள்ளி, 
காட்டுமன்னார்கோவில். 

               மாவட்டத்தில் உள்ள 34 உள்ளாட்சி அமைப்புகளில் இரண்டு கட்டமாக நடந்த தேர்தலில் பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுப் பெட்டிகள் 27 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் நேற்று மாலை முதல் ஒவ்வொரு மையத்திற்கும் இரண்டு இன்ஸ்பெக்டர்கள், 4 சப் இன்ஸ்பெக்டர், 100 போலீசார் மூன்றடுக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Read more...

புதன், 12 அக்டோபர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் கடலூர் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.ராஜா வாக்கு சேகரிப்பு

கடலூர்:

             கடலூர் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.ராஜா பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்  செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.  

        புதுப்பாளையம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு சேகரிப்பைத் தொடங்கினார். ஆசிரியைகளிடம் தி.மு.க.வுக்கு வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். பெரியார் அரசு கலைக்கல்லூரி, புனித வளனார் கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள்,  கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி, ஏ.ஆர்.எல்.எம். மெட்ரிக் பள்ளி, நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும் வாக்கு சேகரித்தார். சுரக்கல்பட்டு புனித அந்தோனியார் கோயிலுக்கும் சென்று கிறிஸ்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். 

            முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, நகராட்சித் தலைவர் து.தங்கராசு. முன்னாள் நகராட்சித் தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோரும் வேட்பாளருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.  





Read more...

வெள்ளி, 7 அக்டோபர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை

கடலூர்:

                கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

            கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின், மாணவிகள் பிரிவு பேரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  கல்லூரியில் இரண்டாம் சுழற்சி மாணவர்களுக்கு குடிநீர் தடையின்றி வழங்க வேண்டும். பட்ட மேற்படிப்பு மாணவர்கள் அனைவருக்கும் அரசு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

            ஈரோடு மாவட்ட இந்திய மாணவர் சங்கச் செயலாளர் கனிமொழி, சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்துப் பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசுதா, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.துளசி, மாவட்டச் செயலாளர் டி.அரசன் உள்ளிட்டோரும் பேசினர்.  புதிய நிர்வாகிகள் தேர்தலில் கல்லூரியின் கிளைத் தலைவராக எஸ்.ரம்யா, செயலாளராக புவனேஸ்வரி மற்றும் 13 பேர் அடங்கிய நிர்வாக்குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர். ஆர்.பாலாஜி நன்றி கூறினார்.

Read more...

வியாழன், 6 அக்டோபர், 2011

கடலூர் பெரியார் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள் தமிழக வரலாற்றுப் பேரவை கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்தனர்

கடலூர் :
       
            கடலூர் அரசு கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள் தமிழக வரலாற்றுப் பேரவை கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். 

           தமிழக வரலாற்றுப் பேரவையில் ஆண்டு கருத்தரங்கு ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மகளிர் கல்லூரியில் கடந்த 30ம் தேதி முதல் 2ம் தேதி வரை நடந்தது. இக்கருத்தரங்கில் கடலூர் பெரியார் அரசு கல்லூரி பேராசிரியர்கள் பிரபா, தெய்வாம்சம், விஜயலட்சுமி, சேதுராமன் ஆகியோர் "தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள், "பெண்களும் அவர்களின் விவசாயப் பணிகளும்', "புதுச்சேரி தமிழ் சமூகத்தின் மீது இலக்கிய சங்கங்களின் தாக்கம்' கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள்', "ஹிலாரி கிளிண்டனின் இந்தியா வருகையும் இந்திய - அமெரிக்க உறவுகளின் மீது அதன் தாக்கமும்' என்ற தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்பித்தனர். 

               கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள் செல்வமுருகன், முத்தமிழ்ச்செல்வன், சுவாமிமலை, ஆனந்தராஜ் ஆகியோர் துறை பேராசிரியர் காந்திமதி வழிகாட்டுதலுடன் முறையே திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கல்வெட்டுச் செய்திகள், வில்லியனூர் காமீஸ்வரர் கோவில், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் சிறப்புகள் ஆகிய தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்தனர். 

                கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த வரலாற்றுத் துறை மாணவர்களை கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி, வரலாற்றுத் துறை தலைவர் (பொறுப்பு) பேராசிரியர் ராயப்பன் ஆகியோர் பாராட்டினர்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP