செவ்வாய், 28 செப்டம்பர், 2010

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி விரிவுரையாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்

கடலூர்:

                 கடலூர் பெரியார் அரசுக் கலைக் கல்லூரி 2-ம் சுழற்சி (கௌரவ விரிவுரையாளர்கள் திங்கள்கிழமை திடீர் வேலைநிறுத்தம் செய்தனர்.

                       கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 2-ம் சுழற்சியில் 700 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆண்டுதோறும் கெüரவ விரிவுரையாளர்களை அரசு நியமிக்கிறது. இந்த ஆண்டு கௌரவ விரிவுரையாளர்கள் 35 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லையாம். இதனை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில், கௌரவ விரிவுரையாளர்கள் திங்கள்கிழமை திடீர் வேலைநிறுத்தம் செய்தனர். 

                        இதுவரை தர வேண்டிய ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். மாதம்தோறும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். கௌரவ விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, திங்கள்கிழமை 2-வது சுழற்சி மாணவர்களின் வகுப்புகள் பாதிக்கப்பட்டன.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP