புதன், 20 ஜூன், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவ சேர்க்கைக்கான கலந்தாய்வு - 800 மாணவர்கள் பங்கேற்பு

கடலூர் :


கடலூர் அரசு கல்லூரியில் நேற்று நடந்த கலந்தாய்வில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் நேற்று கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்சி., (கணிதம்), இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இன்று பயாலஜி, விலங்கியல், இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

கலந்தாய்வு பற்றி கமிட்டி உறுப்பினர் மனோகரன் கூறுகையில்,

மொழிகல்வி தவிர, மூன்றாவது பாடப்பிரிவுகளில் உள்ள மதிப்பெண் அடிப்படையில் இந்த கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கண்டிப்பாக கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்றார்.

 

Read more...

சனி, 16 ஜூன், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவ சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு

கடலூர்:

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு 18ம் தேதி துவங்குகிறது.

பெரியார் கலைக்  கல்லூரி முதல்வர் கண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில்  மாணவ, மாணவிகளின் சேர்க்கைக்கான கலந்தாய்வு மதிப்பெண் அடிப்படையில் பகுதி 3ல் 800 முதல் 280 வரை எடுத்தவர்களுக்கு  18ம் தேதி முதல் கட்டமாக (மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு மற்றும் முன்னார் ராணுவத்தினர் பிள்ளைகள், தொழில் சார்ந்த கல்வி பயின்றவர்கள் நீங்கலாக) கலந்தாய்வு நடக்கிறது.


ஜூன் 19ம் தேதி கணிதம், இயற்பியல், வேதியியல் (பொது) கணினி அறிவியல், புள்ளியியல் (பகுதி 3ல் கணிதம் படித்த மாணவர்கள் மட்டும்) 20ம் தேதி தாவரவியல், விலங்கியல், வேதியியல் (தொழில்முறை) கணினி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு  நடக்கிறது.

ஜூன் 21ம் தேதி வணிகவியல் (பொது / தொழில் முறைக் கல்வியில்) அகடமிக், ஒக்கேஷனல் மாணவர்களுக்கு கலந்தாவு நடக்கிறது.பகுதி 1ல் தமிழ் பகுதி 2ல் ஆங்கிலம் பாடங்களில் 200 முதல் 70 வரை மதிப்பெண் எடுத்தவர்களுக்கு 22ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் (சிறப்புத் தமிழ், சிறப்பு ஆங்கிலம்) படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பொருளியல் மற்றும் வரலாறு பாடப்பிரிவில் பகுதி 3ல் 800 முதல் 280 வரை எடுத்தவர்களுக்கு 25ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது. காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அனைத்து அறிவியல் துறைகளுக்கும் 28ம் தேதியும், வணிகவியல் பாடத்திற்கு 29ம் தேதியும், அனைத்து கலைப்பிரிவுகளுக்கும் 30ம் தேதியும் இரண்டாம் கட்ட கலந்தாவு நடக்கிறது. மேலும் காலி இடங்கள் இருந்தால் மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் ஜூலை 5ம் தேதி நடக்கிறது.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP