சனி, 28 செப்டம்பர், 2013

பெரியார் கலைக் கல்லூரியில் கடலூர் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி

கடலூர்:

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடந்தது. உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் வரும் நவம்பர் 7ம் தேதி முதல், 28ம் தேதி நடக்கிறது. 

 இப்போட்டியில் தற்போதைய உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்தை எதிர்த்து நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் காரல்சன் விளையாடுகிறார். சதுரங்கப் போட்டியை பிரபலப்படுத்தி, விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திட ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தமிழக அரசு 55 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதையொட்டி, சதுரங்கக் கழகம் சார்பில், மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி துவக்க விழா கடலூர்  பெரியார் கலைக் கல்லூரியில் நேற்று நடந்தது.

கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், சுற்றுலாத் துறை அதிகாரி தமிழரசி ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். 9 வயது, 11, 13, 15 வயதுக்கு உட்பட்ட பிரிவு மற்றும் ஓபன் பிரிவில் போட்டிகள் நடந்தது. போட்டியில் 300 பேர் பங்கேற்றனர். நாளை (29ம் தேதி) வரை போட்டிகள் நடக்கிறது. இதில், வெற்றி பெறுவோருக்கு அன்றைய தினம் பரிசு வழங்கப்படும். போட்டி ஏற்பாடுகளை சதுரங்கக் கழக மாவட்டச் செயலர் பாலசுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Click Here
Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடலூர் வெள்ளிக் கடற்கரையை சுத்தம் செய்த பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள்




கடலூர்:

கடலூர் வெள்ளிக் கடற்கரை பெரியார் கலைக் கல்லூரி மாணவர்களால் வெள்ளிக்கிழமை சுத்தம் செய்யப்பட்டது. 

சுற்றுலாத் துறை, பெரியார் கலைக் கல்லூரி சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடலூர் வெள்ளிக் கடற்கரை சுத்தம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தொடங்கிவைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் கடற்கரை சுற்றுப் பகுதி முழுவதிலும் குப்பைகளை சேகரித்தனர். பின்னர், கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

இந்த நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ்செல்வராஜன்,சுற்றுலா அலுவலர் தமிழ்செல்வி, கல்லூரி முதல்வர் என்.விஸ்வநாதன் மற்றும் 500 மாணவர்கள் பங்கேற்றனர்.
Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள புதிய பாடப் பிரிவுகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் கேட்டு அரசுக்கு முன்மொழிவு

கடலூர்:

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள புதிய பாடப் பிரிவுகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் கேட்டு அரசுக்குப் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.

 கடலூர் தேவனாம்பட்டினத்தில் 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு பெரியார் கலை அறிவியல் கல்லூரியில் பிஏ, எம்ஏ, பிகாம், எம்காம், எம்எஸ்சி உள்பட பல்வேறு பாடப் பிரிவுகள் உள்ளன. இங்கு கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 3,600 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

 நிகழ் கல்வியாண்டில், இளங்கலை அரசியல் அறிவியல், இளம் அறிவியல் நுண்ணுயிரியல், முதுநிலை பிரிவில் வேதியியல், தாவரவியல் எம்பில் பாடப் பிரிவு என முழு நேர வகுப்புகளும், தாவரவியல் பிஎச்டி முழு நேரம் மற்றும் பகுதி நேர வகுப்புகளும், வணிகவியல் பிஎச்டி முழு நேர வகுப்புகளும் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளின் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப கூடுதலாக புதிய வகுப்பறைகள், பரிசோதனைக் கூடம் அமைக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

 இதுகுறித்து கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் கூறியது:

 நிகழ் கல்வியாண்டில் புதிதாக 8 பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ள நிலையில், புதிய பாடப்பிரிவுக்கு, தேவையான வகுப்பறைகள் மற்றும் பரிசோதனைக் கூடம் எத்தனை தேவை என்ற விவரங்கள் குறித்து தமிழக அரசு பட்டியல் கேட்டுள்ளது. அதன்படி, 10 வகுப்பறைகள், ஒரு பரிசோதனைக் கூடம் தேவை என வரைபடத்துடன் பட்டியல் அனுப்பியுள்ளோம் என்றார்.


Read more...

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ஜெனீவா உடன்பாடு குறித்த கருத்தரங்கு

கடலூர்:

 கடலூர்  பெரியார் கலைக் கல்லூரியில் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், ஜெனீவா உடன்பாடு குறித்த கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. 

இதில் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை வகித்துப் பேசியது: 

ஜெனீவா உடன்பாட்டை 187 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. உலக அளவில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் போர் நடந்து கொண்டிருக்கிறது. போரினால் பாதிக்கப்படுவோருக்கு உதவி செய்வதே ஜெனிவா உடன்பாட்டின் நோக்கம் என்றார். பிரம்மா குமாரிகள் இளைஞர் சைக்கிள் ஊர்வலக் குழு மேலாளர் ரவி, நாமக்கல் மைய ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி ஆகியோர் பேசினர். விழாவில், சைக்கிள் ஊர்வலம் செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மல்குமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

புதன், 25 செப்டம்பர், 2013

தூத்துக்குடி புனித மேரி கல்லூரியில் தமிழக வரலாற்றுப் பேரவையின் இருபதாவது ஆண்டுக் கருத்தரங்கில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பு

   தூத்துக்குடி புனித மேரி கல்லூரியில் தமிழக வரலாற்றுப் பேரவையின் இருபதாவது ஆண்டுக் கருத்தரங்கம்  செப்டம்பர்  20, 21 மற்றும் 22, ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. 

        கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர் வி. ராயப்பன் அவர்களின் வழிகாட்டுதலில், கல்லூரி முதல்வர் அவர்களின் ஒப்புதலோடு வரலாற்றுத்துறை முதுகலை மாணவர்கள் 18 பேர் கருத்தரங்கில் கலந்துகொண்டனர். மாணவர்களை வரலாற்றுத்துறைப் பேராசிரியர்கள் முனைவர் நா. சேதுராமன், முனைவர் இ. விஜயலட்சுமி ஆகியோர் பொறுப்பேற்று அழைத்துச் சென்றனர்.   

    கருத்தரங்கில் கலந்து கொண்ட துறைத்தலைவர் வி. ராயப்பன், பேராசிரியர்கள் முனைவர் நா. சேதுராமன், முனைவர் இ. விஜயலட்சுமி, கௌரவ விரிவுரையாளர் ரா. சந்தோஷ் மற்றும் மாணவர்கள் ஜெ. ஜெயசுதா, ர. ஜெயலலிதா, பா. கனிமொழி, எஸ்.மஞ்சுளா, ப. மாலா, அ. சரண்யா, ர. சத்யபாமா, ரா. செல்வி, அ. தமிழரசன், தி. அமுல்ராஜ் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.         

அவர்கள் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரைகள் முறையே பின்வருமாறு: 

“பெஞ்சமின் ராபின்ஸ்: ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி பொறியாளரின் வாழ்க்கை வரலாறு”,

 “கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்: தமிழகத்தின் காந்தியச் செயற்பாட்டாளர்”,

 “தமிழ்நாட்டில் தேவதாசிகள் முறை ஒழிப்பில் பெண் சமுதாய சீர்திருத்தவாதிகள்”, 

“இரட்டை மலை சீனிவாசன்: வாழ்வும் சாதனைகளும்”, 

“தில்லையாடிவள்ளியம்மை: வாழ்வும், பணிகளும்”, 

“கடலூர் புனித டேவிட் கோட்டையின் வரலாறு – ஒர் ஆய்வு”, 

“திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் சிற்பங்கள் – ஓர் ஆய்வு”, 

“திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில் கல்வெட்டுகள் கூறும் வரலாற்றுச் செய்திகள் – ஓர் ஆய்வு”, 

“திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் கல்வெட்டுகள்: ஓர் ஆய்வு”, 

“திருப்பாதிரிப்புலியூர் பாடலேஸ்வரர் கோயிலின் வளர்ச்சி - ஒரு வரலாற்றுப் பார்வை”,

 “திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில் கல்வெட்டுக்கள்–ஓர் ஆய்வு”, 

“கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள் – ஓர் ஆய்வு”, 

  மற்றும் “பல்லவர் காலப் பனைமலை ஓவியங்கள்”.        

  அரசுக் கல்லூரியில் முதுகலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பயிலும் நிலையிலேயே மாணவர்கள் மிகச் சிறப்பான சான்றுகளுடன் ஆய்வுக்கட்டுரைகளைத் தயார்செய்து சிறப்பாகச் சமர்ப்பித்ததை கருத்தரங்கில் கலந்துகொண்ட ஆய்வாளர்கள் அனைவரும் வெகுவாகப் பாராட்டினர்.       

   மேலும், தமிழக வரலாற்றுப் பேரவையின் செயற்குழுவில் கடலூர் பெரியார் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் நா. சேதுராமன் அவர்கள் தமிழக வரலாற்றுப் பேரவை ஆய்வுக்கட்டுரைத் தொகுதியின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.          
    ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்த வரலாற்றுத்துறைப் பேராசிரியர்களையும், மாணவர்களையும் கல்லூரி முதல்வர் முனைவர் வி.என். விஸ்வநாதன் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.

Read more...

சனி, 21 செப்டம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

கடலூர்:
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் 20/09/2013 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்றது. 

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு பயிற்சி முகாமுக்கு கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மூன்றாம் ஆண்டு பயிலும் 200 மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும், அதற்கான தகுதியை பெறுவதற்கு மேற்கொண்டு படிக்க வேண்டிய தொழில் படிப்புகள் மற்றும் பயிற்சிகள், தகவல் தொடர்பு மற்றும் மொழிபுலமை ஆளுமைத் திறன் ஆகியவை குறித்தும் மாணவர்களுக்கு விளக்க காட்சிகளுடன் கருத்துரை மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது. கல்லூரியின் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் அமைப்பு, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், இந்திய தொழில் நிறுவன கூட்டமைப்பு ஆகியன இணைந்து நடத்திய இந்த முகாமில் டைட்டான் செயல் மேலாண்மை இயக்குநர் வைரவேல், பொது மேலாளர் ராஜி ஆறுமுகம் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பேராசிரியர்கள் சின்னதுரை, நிர்மல்குமார், டேவிட் சவுந்தர், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்கக் கோரி வாயில் முழக்கப் போராட்டம்

கடலூர்:

நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்கக் கோரி, கடலூர் பெரியார் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் 19/09/2013 (வியாழக்கிழமை) அன்று வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 26க்கும் மேற்பட்ட பாடப் பிரிவுகள் உள்ளது. 3,600 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்கள் எண்ணிக்கை காரணமாக கல்லூரியில் இரண்டு சுழற்சி முறையில் இயங்கி வருகிறது. மாணவர், மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை. இதனால் அரசு குறைந்த ஊதியத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெரியார் கலைக் கல்லூரியில் 63 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 37 பேர் புதியவர்கள்; மற்றவர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகின்றனர்.

1. ஊதியமின்றி பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு  கடந்த 5 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்.

2. பணி நீட்டிப்பு ஆணை உடன் வழங்க வேண்டும்.

3. பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த அடிப்படை ஊதியம் ரூ.15,600-ஐ வழங்க வேண்டும்

 என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த வாயில் முழக்க போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டன.

கௌரவ விரிவுரையாளர்கள் 37 பேர் வேலைநிறுத்தம் காரணமாக, வியாழக்கிழமை 2-வது சுழற்சி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் தொடக்க விழா

 கடலூர்:

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் தொடக்க விழா, மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தலைமையில் 16/09/2013 (திங்கள்கிழமை) அன்று நடைபெற்றது. 

விழாவில் மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகத்தை தொடங்கிவைத்து அமைச்சர் எம்.சி. சம்பத் மேலும் பேசியது:

கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு தரமான உயர் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசுக் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பாடப் பிரிவுகளில் கூடுதல் பாடப் பிரிவுகளைத் தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில், கடலூர் பெரியார் கல்லூரியில்  கூடுதலாக 2 இளங்கலை பாடப் பிரிவுகளும், ஒரு முதுகலை பாடப் பிரிவு,  ஆராய்ச்சி மேற்படிப்பு என மொத்தம் 13 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல்வர் அளித்துள்ள இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி கல்வியில் சிறந்தவர்களாக உருவாகவேண்டும் என்றார் அவர்.

கல்லூரி முதல்வர் வி.என்.விஸ்வநாதன், நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்பிரமணியன், துணைத் தலைவர் சி.ஜெ.குமார், கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.குமார், ஒன்றியச் செயலர் ரா.பழனிச்சாமி, மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் என்.டி.கந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

திங்கள், 16 செப்டம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம்

கடலூர்: 

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம்  16/09/2013 (திங்கள்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.

இது குறித்து கல்லூரியின் முதல்வர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடலூர்  பெரியார் கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் புதிதாக  இளங்கலை அரசியல் அறிவியல், இளம் அறிவியல் நுண்ணுயிரியல் ஆகிய பாடப் பிரிவுகளும், முதுநிலை பிரிவில் வேதியியல் பாடப் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.

இப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை 16/09/2013 (திங்கள்கிழமை) தேதி காலை 10 மணி முதல் கல்லூரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

இளநிலை பிரிவிற்கான விண்ணப்பம் ரூ.27, முதுநிலை பாட பிரிவு விண்ணப்பம் ரூ.42, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஒரு விண்ணப்பம் இலவசமாக வழங்கப்படும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 27-ம் தேதி மாலைக்குள் கல்லூரிக்கு வந்து சேர வேண்டும். இளநிலை பாடப் பிரிவிற்கு அக்டோபர் 3-ம் தேதியும், முதுநிலை பாடப் பிரிவிற்கு அக்டோபர் 4-ம் தேதியும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தி அன்றே சேர்க்கை நடைபெறும்.

மேலும், கல்லூரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தாவரவியல் எம்.பில்., பாடப் பிரிவு முழு நேர வகுப்புகளும், தாவரவியல் பிஎச்.டி., முழு நேரம் மற்றும் பகுதி நேர வகுப்புகளும், வணிகவியல் பிஎச்.டி., முழுநேர வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

சனி, 14 செப்டம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம்

கடலூர் :

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் 12/09/2013 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 

இதற்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் விஸ்வநாதன் தலைமை தாங்கி தற்கொலை செய்வதால் ஏற்படும் பின் விளைவுகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து விரிவாக பேசினார். பேராசிரியர்கள் டேவிட் சவுந்தர், பன்னீர்செல்வம், நிர்மல்குமார் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள். இதில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர். முன்னதாக பேராசிரியர் முருகதாஸ் வரவேற்றார். முடிவில் பேராசிரியை ஞானாம்பிகை நன்றி கூறினார். 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

புதன், 11 செப்டம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் செஞ்சுலுவை சங்கம் சார்பில் ஒரு நாள் விழிப்புணர்வு முகாம்


NATIONAL SERVICE SCHEME
 IN ASSOCIATION WITH YOUTH RED CROSS 
CONDUCTS ONE –DAY AWARENESS PROGRAM ON 
“PREVENTION OF SUICIDE AMONG YOUTHS”
DATE: 12-09-2013    TIME: 11.00 a.m     VENUE: MLA BUILDING
PROGRAM 
                         Tamizhthai Vazhthu
Welcome Address
:
Prof:K.Murugadoss
Presidential  Address
:
Dr.V.N.Viswanathan
Principal.
Special Address
:
:
:
1.Prof.S.David Soundar
2.Prof.V.Pannerselvam
3.Prof.K.Nirmal Kumar
Vote of thanks 
:
Prof:M.Gnanambigai

                            National Anthem

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

சனி, 7 செப்டம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா 05/09/2013 அன்று கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கண்ணன் தலைமை தாங்கினார். ஆங்கில துறைத் தலைவர் பேராசிரியர் ரவி வரவேற்றார். விழாவில் ஓய்வு பெறும் பேராசிரியர்கள் விலங்கியல் துறைத் தலைவர் ஜெயந்திதேவி, விலங்கியல் துறை சேர்ந்த பழனிவேல் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சரால் பாராட்டு பெற்ற ஆங்கிலத் துறை பேராசிரியர் தயாளமூர்த்தி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

 விழாவில், வேதியியல் துறைத் தலைவர் ஷர்மிளா இந்திராணி விலங்கியத்துறை உதவி பேராசிரியர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.விழாவையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் குறித்த பேச்சுப்போட்டி, பாடல்கள் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. கணிதத்துறை பேராசிரியர் சிவசண்முகராஜா நன்றி கூறினார்.



 Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

புதன், 4 செப்டம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

Date : 05.09.2013.

Venue : New Building. 
Time  : 10.30 A.M. 
Organized by Parents Teachers Association.

Welcome Address                   :  Prof: R.Ravi,
                                                       HOD, Dept. of English

Presidential Address              :  Dr.V.N.Viswanathan,
                                                         Principal, 
                Periyar Arts College,
                                                        Cuddalore

Felicitation   to                        :   Prof. (Mrs) R.Jayanthidevi  ,
                                                         HOD, Dept. of  Zoology

Felicitation   by                        :   Dr. B. Sharmila Indirani,  
                                                         HOD, Dept. of  Chemistry.

Felicitation to                            :   Dr. V.Palanivelu,
                                                           Associate Professor,  Dept of Zoology

Felicitation by                          :    Dr. R.Kannan,
                                                          Assistant Professor,  Dept of  Zoology

Appreciation                             :    Prof. K.Dhayalamurthy,
                                                           Dept of English

Presentation of Gifts to            :   Teachers

Students Participation             :   a) Mimicry
                                                           b) Songs / Poems in praise of Teachers

Vote of Thanks                          :    Prof. C.Sivashanmugaraja,
                                                            HOD, Dept. of Mathematics


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP