வெள்ளி, 29 ஏப்ரல், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் புகைப்படங்கள்


                                                                         வடிவேலன்  ( தாவரவியல் துறை 2004 -2007 )







ரவிச்சந்திரன்  ( தாவரவியல் துறை 2004 -2007 )


Read more...

Candidates representatives can watch strongrooms on laptops in Cuddalore Periyar Arts College

CUDDALORE: 

          On the direction of District Electoral Officer P. Seetharaman, web camera-fitted laptops have been placed in the inner perimeter of Periyar Government Arts College where electronic voting machines collected from four constituencies have been kept in the strongrooms.

            Mr. Seetharaman told reporters that already such laptops had been placed in front of the respective strongrooms where the EVMs of the Cuddalore, Panruti, Neyveli and Kurinjipadi Assembly constituencies were kept for round-the-clock monitoring. Authorised representatives of candidates were allotted a place in the counting centre for keeping vigil. Earlier, they were permitted to go once in a day to the first and second floors of the college to check the seals on the locks of the strongrooms. With the setting up of four laptops, one each for every constituency, in their enclosure, the representatives could now easily keep a 24-hour check on strongrooms.

Read more...

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி புகைப்படம்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி புகைப்படம் ( சில்வர் பீச் சாலை )

Read more...

வியாழன், 28 ஏப்ரல், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஓட்டு எண்ணும் மையத்தில் அ.தி.மு.க.வேட்பாளர்கள் பார்வை

கடலூர் : 

          கடலூர் ஓட்டு எண்ணும் மையத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ள அறையை குறிஞ்சிப்பாடி, நெய்வேலி அ.தி.மு.க., வேட்பாளர்கள் நேற்று பார்வையிட்டனர். 

             கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி மற்றும் பண்ருட்டி ஆகிய தொகுதிகளின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் நேற்று மாலை குறிஞ்சிப்பாடி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், நெய்வேலி வேட்பாளர் சிவசுப்ரமணியன் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை பார்வையிட்டனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில் கையெழுத்திட்டனர். 

               அதனைத் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் இருந்த கட்சித் தொண்டர்களிடம் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனர். உடன் தொழிற்சங்கச் செயலர் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலர்கள் கோவிந்தராஜ், கமலக்கண்ணன், பழனிசாமி, தொகுதி செயலர் வெங்கடாஜலபதி, ஜெ.,பேரவை ஒன்றிய செயலர் வீரமணி உடனிருந்தனர்.

Read more...

திங்கள், 25 ஏப்ரல், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு

கடலூர்:

               கடலூரில் 4 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு, கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் வகையில், கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரிச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

           கடலூர் பெரியார்  கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன. எனவே அந்த 4 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், இக்கல்லூரியில் உள்ள அறைகளில் வைத்து பூட்டி, சீல் வைக்கப்பட்டு உள்ளன. கல்லூரி வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

              கடந்த 20-ம் தேதி இக்கல்லூரி முதல்வர் ரங்கநாதன் பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவருக்குக் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பிரிவுபசார விழா, அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.  அதுமுதல் கல்லூரி வளாகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கல்லூரிச் சாலையின் இரு கோடியிலும், போலீஸ் தடுப்புக் கட்டைகள் வைக்கப்பட்டு, பொதுமக்கள் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. அங்கு 24 மணி நேரமும் கூடுதலாக போலீஸôர் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். இதனால் சில்வர் பீச்சுக்குச் செல்லும் பொதுமக்கள், நேராக கடற்கரைக்குச் செல்லாமல், மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Read more...

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முதல்வரின் பிரிவு உபச்சார விழா: அதிமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பால் வேறு இடத்துக்கு மாற்றம்

கடலூர்:

           வாக்கு எண்ணிக்கை மையமான கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெறவிருந்த கல்லூரி முதல்வரின் பிரிவுபசார விழா, அதிமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பால் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.  

             கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த 4 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களும் கல்லூரியில் உள்ள அறைகளில் பூட்டி சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்புக் கோபுரம் அமைத்து, இயந்திரத் துப்பாக்கிகள் சகிதமாக சுமார் 100 போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

          4 வேட்பாளர்களின் அனுமதி பெற்ற முகவர்கள் 24 மணி நேரமும் அங்கேயே தங்கி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறைகளைக் கண்காணித்து வருகிறார்கள்.  கல்லூரியில் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடந்து வருகின்றன. இதனால் ஆசிரியர்கள் வந்து போகிறார்கள். இந்நிலையில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரங்கநாதன், ஆங்கிலத் துறைத் தலைவர் நடராஜன் ஆகியோர் புதன்கிழமை பணியில் இருந்து ஓய்வுபெற்றனர். ஓய்வுபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பிரிவுபசார விழா கல்லூரி வளாகத்தில் நடைபெறுவதுதான் வழக்கம். 

               இதனால், விழா ஏற்பாடுகளுக்காக செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு, கல்லூரி ஆசிரியர் கழகத் தலைவர் நிர்மல் குமார் காரில் கல்லூரிக்குச் சென்றார். விழாவுக்கான சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் மினி டெம்போவில் ஏற்றப்பட்டு உடன் சென்றது.  பேராசிரியர் சென்ற காரையும், பொருள்கள் ஏற்றிச் சென்ற டெம்போவையும் அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் திடீரெனக் கும்பலாக வந்து வழிமறித்துத் தடுத்து நிறுத்தினர். அனுமதி பெறாமல் வாகனங்கள் கல்லூரிக்குள் செல்வதற்கு, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

              இதனால் அந்த இரு வாகனங்களும் வெளியேற்றப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்த தகவல் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் ரங்கநாதன், பேராசிரியர் நடராஜன் ஆகியோருக்கு பிரிவுபசார விழா கல்லூரி வளாகத்தில் நடைபெறுவதற்கு, மாவட்ட ஆட்சியர் தடை விதித்தார்.   இதன் காரணமாக பிரிவுபசார விழா, கடலூர் டவுன் ஹாலில் நடைபெற்றது. பணியாற்றிய கல்லூரியில், அவர்களுக்கு விழா நடத்த முடியாமல் போனதற்கு முதல்வர்,  பேராசிரியர்கள் பெரிதும் வருத்தமடைந்தனர்.

Read more...

வியாழன், 21 ஏப்ரல், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் புகைப்படங்கள்


அஹமது  மீரான் மற்றும் வடிவேலன் ( இடமிருந்தது வலம்)
தாவரவியல் துறை (2004 - 2007 )

Read more...

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஓட்டு எண்ணும் மையத்தில் அ.தி.மு.க.வினர் முற்றுகை

கடலூர் : 

           கடலூரில் ஓட்டு எண்ணும் மையத்திற்குள் நேற்று இரவு மினி லாரி, கார் சென்றதை கண்டித்து அ.தி.மு.க., வினர் மையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

             கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி ஆகிய நான்கு தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சிகளில் ஏஜன்டுகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் இம்மையத்திற்குள் மினி வேன் மற்றும் இன்டிகா கார் சென்றன. 

            உடன் அங்கு பணியில் இருந்த அ.தி.மு.க., ஏஜன்ட் ரவிச்சந்திரன் அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையத்தால் அனுமதி வழங்கப்படாத வாகனங்களை எப்படி உள்ளே அனுமதிக்கலாம் என தெரிவித்தார். தகவல் அறிந்த அ.தி.மு.க., வேட்பாளர்கள் சம்பத், சிவசுப்ரமணியன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் சிவக்கொழுந்து, நிர்வாகிகள் என அனைவரும் ஓட்டு எண்ணும் மையத்தை முற்றுகையிட்டனர். 

            இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த டி.எஸ்.பி., கமலாபாய், அவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினார். அதில் கல்லூரியில் பேராசிரியர்கள் சார்பில் ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடத்த அனுதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். ஓட்டு எண்ணும் மையத்தில் விழா நடந்த எப்படி அனுமதி வழங்கலாம் எனக் கேட்டு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற இருந்த விழா நடக்காது என உறுதியளித்ததைத் தொடர்ந்து அ.தி.மு.க., வினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கலைந்துச் சென்றனர்.

Read more...

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஓட்டு எண்ணும் மையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு

கடலூர்:

              கடலூரில் ஓட்டு எண்ணும் மையத்திற்குள் அனுமதியின்றி மினி லாரி, கார் சென்றதை கண்டித்து அ.தி.மு.க.,வினர் முற்றுகை போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

               கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்திய மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு வேட்பாளர்களின் முகவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மினி லாரி மற்றும் கார் ஒன்று கல்லூரி வளாகத்திற்குள் சென்றது. இதனையறிந்த அ.தி.மு.க.,வினர் ஓட்டு எண்ணும் மையத்தை முற்றுகையிட்டனர். அவர்களை போலீஸ் அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பினர்.

                இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் செய்தனர்.அதனைத் தொடர்ந்து கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் ஆகியோர் நேற்று காலை மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள பெரியார் அரசு கல்லூரி மையத்தை பார்வையிட்டனர். தேர்தல் ஆணையத்தின் அனுமதி இல்லாத வாகனங்களை கல்லூரியினுள் அனுமதிக்கக் கூடாது என்றும், கல்லூரியைச் சுற்றி 200 மீட்டர் சுற்றளவில் தடுப்பு அமைக்க உத்தரவிட்டனர்.

              அதன்படி தேவனாம்பட்டினம் சாலையில் உப்பனாற்று பாலம் மற்றும் சில்வர் பீச் புறக்காவல் நிலையம் அருகே உள்ள சாலைகளில் போலீசார் "பேரிகாட்' அமைத்து வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விட்டனர்.


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

Tight security at Periyar Arts College Vote counting centres


 
ROUND-THE-CLOCK VIGIL:Collector P. Seetharaman inspecting the counting centre in Periyar Government Arts College in Cuddalore on Wednesday.

CUDDALORE: 

          For the purpose of providing foolproof security to the counting centres, three zones have been earmarked, namely inner perimeter, middle perimeter and outer perimeter, according to P. Seetharaman, Collector and District Electoral Officer.

          He made this observation to The Hindu after inspecting the security arrangements along with Superintendent of Police Ashwin Kotnis at Periyar Government Arts College, serving as the counting centre for four Assembly constituencies such as Cuddalore, Panruti, Neyveli and Kurinjipadi, on Wednesday.

           The Collector said that the inner perimeter was the zone where the electronic voting machines were kept in strongrooms and guarded by the armed personnel of the Central Para Military Forces (CPMF) and the Tamil Nadu Special Police (TSP) Force. One laptop each had been placed in front of every strongroom, in which the EVMs from a particular Assembly constituency were kept, to monitor round the clock the activities through web camera.

            Mr. Seetharaman said that all those entering the inner perimeter, including himself, the SP and election observers, would affix their signature and time of entry and exit in a register. In the middle perimeter, TSP personnel had been stationed and also representatives of the candidates of various political parties. The watchtowers too had been erected in this zone and armed guards posted. In the outer perimeter, that is, outside the campus, local police personnel had been deployed. Mr. Seetharaman said that no procession or meeting would be allowed within one-km radius of the counting centres.

                Uninterrupted power supply and flood-light arrangements too had been made in each of the centres. Striking force personnel and fire service personnel too had been kept ready, he added.


Read more...

Polls put government colleges in a predicament

CUDDALORE: 

           The Assembly elections have put government colleges in a predicament as they have invariably doubled up as examination and counting centres.

           Therefore, even though in the midst of conducting the academic year-end university examinations, these colleges would have to provide adequate space for accommodating the electronic voting machines and the security personnel till the counting is over.

            In playing the dual role, these colleges are facing practical difficulties and logistic problems. For instance, three government arts colleges in Cuddalore district such as Periyar Government Arts College located near the Silver Beach and two others at Vriddhachalam and Chidambaram are the designated counting centres for the Assembly and Lok Sabha elections. Hitherto, these colleges have never faced such a piquant situation as of now, mainly because of the extended schedule for counting slated for May 13, exactly a month after the polling was over on April 13.

            Students and lecturers are seen going hither and thither inside Periyar Government Arts College, unmindful of the security drill and the armed personnel perching atop the watchtowers erected on the college campus. It defies the notion that the counting centres are the heavily guarded fortresses that cannot be easily accessed by commoners. Of the three wings of the college, the middle one has been taken over by the election authorities to be used as strongrooms for storing the EVMs of the four Assembly constituencies such as Cuddalore, Panruti, Kurinjipadi and Neyveli.

           While the first wing has been used as the administrative block, the third one is serving as examination centre. The students, numbering over 6,000, have been visiting the college in batches to take the examinations. Hence, the college has been bubbling with activity throughout the day. The security personnel at the main entrance verify their identity cards before allowing them inside and the lecturers are also subjected to the same rigour. Principal in-charge of the college K. Renganathan told The Hindu that after the EVMs were stored, the movement of the staff and students was restricted.

           On April 16, the students who did not bring their identity cards had difficulty in entering the college to get their hall tickets and, therefore, each of them had to be personally identified by the lecturers for gaining entry. A farewell party to be hosted in honour of two retiring professors on April 19 could not be held owing to opposition from political parties in holding any such event on the college premises. Mr. Renganathan further said that given the large number of students neither the examinations could be postponed nor could the venue be changed.

           Moreover, under the Thiruvalluvar University, there were 96 colleges all of which would have to complete the examinations, take up the valuation work, publish the results and start the admission procedures for the coming academic year within a time frame. Therefore, to avoid any further complication in this aspect, the university had allowed the colleges to conduct the examinations in two spells - one from April 16 to May 10, and, another from May 16 to 21. On an average, about 1,000 students were sitting for the examination every day, he said.

             Superintendent of Police Ashwin Kotnis said that since the strongrooms were fully secured there need not be any concern over their safety. Other than the entry of students, the thoroughfares running along these colleges were either cordoned off or vehicular traffic was diverted.

Read more...

புதன், 20 ஏப்ரல், 2011

Cuddalore Periyar Arts College told to change function venue

CUDDALORE: 

        A vehicle carrying the paraphernalia for a college function, said to be a farewell party, was turned back by security personnel and booth agents of political parties at Periyar Government Arts College here on Tuesday.

         The college is serving as a storing point for electronic voting machines collected from the Assembly constituencies such as Cuddalore, Panruti, Neyveli and Kurinjipadi, as well as the counting centre. However, college authorities, unaware of the election rules, were about to hold a function already scheduled on the college premises. When the articles were about to be unloaded from the vehicle, the agents of political parties already stationed there objected to it.

         All India Anna Dravida Munnetra Kazhagam cadres, including the candidate for the Cuddalore constituency, M.C.Sampath, went to the centre and asked how could the vehicle enter the premises of the counting centre, despite heavy security posted there. When it was brought to the notice of Collector P. Seetharaman, who is also the District Electoral Officer, he denied permission for the function and directed the college authorities to look for alternative venue. Accordingly, the college authorities put off the event and agreed to shift the venue.

Read more...

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையம்: போலீஸ் பாதுகாப்பு

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அறைகளில் பாதுகாப்பாக வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.  

                    கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கு கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியிலும், விருத்தாசலம், திட்டக்குடி, தொகுதிகளுக்கு விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியிலும், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் தொகுதிகளுக்கு சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியிலும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.  வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் இடங்களுக்கு புதன்கிழமை இரவே கொண்டு வரப்பட்டன. 

      அந்தத் தொகுதிகளுக்கான அறைகளில் வைத்து, வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.  வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணும் இடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Read more...

திங்கள், 11 ஏப்ரல், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழா


கடலூர்:
 
             கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடந்தது. 
 
              விழாவுக்கு கல்லூரி முதல்வர் க.ரங்நாதன் தலைமை வகித்தார். மாணவ மாணவியருக்குப் பட்டங்களை வழங்கி கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் ஜெ.ஜோதிகுமார் பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார். 556 மாணவ மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 
 
வணிகவியல் துறையில் 109 மாணவர்களும், 
பொருளாதாரத் துறையில் 92 மாணவர்களும், 
வரலாற்றுத் துறையில் 50 மாணவர்களும், 
தமிழ் துறையில் 75 மாணவர்களும், 
ஆங்கிலத் துறையில் 15 மாணவர்களும், 
கணிதத் துறையில் 42 மாணவர்களும், 
இயற்பியல் துறையில் 26 மாணவர்களும், 
வேதியல் துறையில் 39 மாணவர்களும், 
விலங்கியல் துறையில் 30 மாணவர்களும், 
தாவரவியல் துறையில் 33 மாணவர்களும், 
கணினி அறிவியல் துறையில் 45 மாணவர்களும் 
 
பட்டம் பெற்றனர்.

Read more...

வியாழன், 7 ஏப்ரல், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு

கடலூர் : 

        கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றது.

           கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி ஆகிய தொகுதி ஓட்டுகளை கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் எண்ணப்படுகிறது. இதற்காக கல்லூரியில் ஒரு பகுதியில் உள்ள கட்டடத்தை முழுவதும் தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. மேலும் நான்கு தொகுதிகளில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, 13ம் தேதி ஓட்டுப்பதிவிற்கு பின்னர் இரவுக்குள் அனைத்து மின்னுணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களையும் கொண்டு வந்து கல்லூரியில் பாதுகாப்பாக வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

          இதற்காக தேர்தல் ஆணையம் மின்னணு ஓட்டுப் பெட்டியை பாதுகாப்பாக வைப்பதற்கு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைக்கும் அறைக்கு மின் வசதி மற்றும் செங்கற்களால் ஜன்னல்கள் அடைக்கும் பணி என அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகின்றனர்.

Read more...

புதன், 6 ஏப்ரல், 2011

சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி முதல்வருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா: கடலூர் பெரியார் கலைக் கல்லூரி துணைப் பேராசிரியர் பாஸ்கர் பங்கேற்ப்பு

கிள்ளை : 

          சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி முதல்வருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது.
 
           சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சேரமான். இவருக்கு கல்லூரி வளாகத்தில் நடந்த பணி நிறைவு பாராட்டு விழாவில் துணை பேராசிரியர் லோகராஜன் வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் தட்சணாமூர்த்தி, வடலூர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் தெய்வநாயகம், ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் நடனம் முன்னிலை வகித்தனர்.
               அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆங்கிலத் துறை பேராசிரியர்கள் பழனியப்பன், ராஜாராமன், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவர் கதிர்வேல், கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி துணைப் பேராசிரியர் பாஸ்கர், சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி துணைப் பேராசிரியர் தங்கமணி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் செய்திருந்தனர்.

Read more...

திங்கள், 4 ஏப்ரல், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி கருத்தரங்கு

கடலூர் : 

         கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி கருத்தரங்கு நடந்தது. கடலூர் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த இந்த கருத்தரங்கிற்கு சங்கத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட மக்கள் தொடர்பு இயக்குனர் பிறையோன் சிறப்புரையாற்றினார். பார்மெக்ஸ் கேரியர் அகாடமி தலைவர் குருநாத் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, வேலை வாய்ப்பிற்கான உத்தரவாதம் அளித்தார். பேராசிரியர்கள் கண்ணன், வண்ணமுத்து வாழ்த்திப் பேசினர். செயலர் ரமேஷ் நன்றி கூறினார்.

Read more...

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா: கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் ரங்கநாதன் பங்கேற்ப்பு

கிள்ளை : 

            சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சேரமான் தலைமை தாங்கினார். மாணவர் தமிழ் வரவேற்றார். உடற்கல்வித் துறை இயக்குனர் சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார். உதவி பேராசிரியர் லோகராஜன், பொருளியல் துறைத் தலைவர் விவேகானந்தன், உதவி பேராசிரியர்கள் அறிவழகன், அர்ச்சுனன், சுரேஷ், உடற்கல்வி ஆசிரியர் ராமசாமி முன்னிலை வகித்தனர்.
 
          கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ரங்கநாதன், அரிமா சங்கத் தலைவர் ரத்தினசபாபதி, பேராசிரியர் கண்ணன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினர். குழு விளையாட்டில் சாம்பியன்ஷிப் பட்டத்தை கணிதவியல் மற்றும் பொருளாதாரத் துறை மாணவர்கள் பெற்றனர். தனித்திறன் போட்டியில் மாணவர்கள் செந்தில்குமார், ஆரோக்கிய விண்ணரசி சாம்பியன் ஷிப் பட்டம் பெற்றனர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ்த்துறை விரிவுரையாளர் மாதவி தொகுத்து வழங்கினார்.

Read more...

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

நூல் வெளியீட்டு விழா: கடலூர் பெரியார் கலைக்கல்லூரி பேராசிரியர் பங்கேற்ப்பு

கடலூர்:
           கடலூர் கூத்தப்பாக்கம் இலக்கியப் பேரவையில் வளவ.துரையன் எழுதிய பசி மயக்கம் என்ற, மரபுக் கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  நிகழ்ச்சிக்குப் பேரவை துணைத் தலைவர் முனைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செந்தமிழ் சோலை அரங்கநாதன் நூலை வெளியிட, முதல் பிரதியை புதுவை முனைவர் நாகராஜன் பெற்றுக் கொண்டார்.  நூல் பற்றிய ஆய்வுரைகளை கடலூர் பெரியார் கலைக்கல்லூரி பேராசிரியர் இளங்கோ, தமிழ் ஒளி இயக்க நிறுவனர் கதிர் முத்தையன் ஆகியோர் நிகழ்த்தினர். வளவ. துரையன் ஏற்புரை நிகழ்த்தினார்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP