வெள்ளி, 31 அக்டோபர், 2014

கடலூா் அரசு கல்லூாி முன்பு கவுரவ விாிவுரையாளா்கள் 6 மாத ஊதியம் வழங்க கோாி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.


தினத்தந்தி 28.10.2014- செவ்வாய்க்கிழமை



தினத்தந்தி 28.10.2014- செவ்வாய்க்கிழமை



 தினமலா் 28.10.2014- செவ்வாய்க்கிழமை


தினமலா் 28.10.2014- செவ்வாய்க்கிழமை
     
தினமணி 28.10.2014 செவ்வாய்க்கிழமை 

பொியாா் கலைக் கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் போராட்டம்  நடத்தினா்.
    ஊதியம் வழங்காததை கண்டித்து கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கலைக் கல்லூரியில் சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கான வகுப்பு நடத்துவதற்காக அரசு சார்பில் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பேராசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் வகுப்புகள் தடையின்றி செயல்பட கெளரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடலூர் அரசுக் கல்லூரியில் இதுபோன்று நியமிக்கப்பட்டுள்ள 34 விரிவுரையாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லையாம்.
இதையடுத்து திங்கள்கிழமை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் அறிவித்தனர். திங்கள்கிழமை காலை மாணவர்கள் வகுப்புகளுக்கு வந்த நிலையில் விரிவுரையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Halloween Comments - http://www.halloweentext.com

Read more...

திங்கள், 27 அக்டோபர், 2014

திருவள்ளுவர் பல்கலைக்கழக மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இரண்டாமிடம் பெற்றனர்.


விருத்தாசலத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழக கல்லூரி அணிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது.

கால்பந்து போட்டி

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கடலூர் மண்டலத்தில் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கிடையே கால்பந்து, கபடி போட்டி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இதில் இரு மாவட்டங்களில் இருந்தும் மொத்தம் 40 கல்லூரிகளை சேர்ந்த சுமார் 600 மாணவர்கள் வரை பங்கேற்றனர். இப்போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி திருவள்ளுவர் பல்கலைக்கழக அளவில் திருப்பத்தூரில் நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளது. இந்த போட்டியில் திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட அணிகளும் பங்கேற்கும். இதில் தேர்வாகும் அணி நவம்பர் இறுதியில் கேரளாவில் அனைத்திந்திய பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்க நிகழ்ச்சி

நேற்று விருத்தாசலத்தில் நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். கல்விக்குழு உறுப்பினர் மனோகரன் முன்னிலை வகித்தார். முன்னதாக பல்கலைக்கழக உடற்கல்வி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கவாஸ்கர் வரவேற்றார். போட்டியை கல்லூரி முதல்வர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து இன்றும், போட்டி நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில், உடற்கல்வி பேராசிரியர்கள் மகேஷ், ரவி, ராஜமாணிக்கம், பாலு, தியாகலிசன், சாந்தகுமாரி, ஜானகி, பயிற்சியாளர் அறிவழகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.         


     திருவள்ளுவர் பல்கலைக்கழக மண்டல அளவிலான கால்பந்து போட்டி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூியில் 25.10.2014 மற்றும் 26.10.2014 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 14 கல்லூரி கால்பந்தாட்ட அணிகள் கலந்துகொண்டன. 

     இப்போட்டியில்,  கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியின் சார்பில் கிரிராஜ், விக்னேஷ், சந்துரு, கதிரேசன், அஜித்குமார் சங்கரையா, கிரி, செழியன், கிருஷ்ணராஜ், நந்தகுமார்,  மைக்கேல், ஜவஹர் மற்றும் நித்யானந்தம் ஆகிய 13 மாணவர்கள் கலந்து கொண்டனர்.  இப்போட்டியில் கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி 15 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் இறுதிப்போட்டியில் பங்கேற்று இரண்டாமிடம் பெற்று சான்றிழழ்களை பெற்று வந்தனர். இவ்விளையாட்டு வீரர்களில் கிரிராஜ் விக்னேஷ் மற்றும் கதிரேசன் ஆகிய 3 மாணவர்கள் பல்கலைகழக விளையாட்டு போட்டிக்;கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
            விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் முதல்வர்.வ.நா.விஸ்வநாதன் பரிசுகள் வழங்கியும், கல்லூரியின் விளையாட்டு இயக்குநர் (பொறுப்பு) முனைவர்.கு.நிர்மல்குமார் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.



தினத்தந்தி ஞாயிறு, 26.10.2014







Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

சனி, 18 அக்டோபர், 2014

கடலூர் பெரியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா மாணவர்கள் மது போதைக்கு அடிமையாக கூடாது சட்டபல்கலைக்கழக துணை வேந்தர் வணங்காமுடி பேச்சு

                          


தினத்தந்தி 17.10.2014 வெள்ளிக்கிழமை
Page 1 : Graduation Day Report_2014 

Page 2 : Graduation Day Report_2014 

Page 3 : Graduation Day Report_2014 

   மாணவர்கள் மது போதைக்கு அடிமையாக கூடாது என கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணை வேந்தர் வணங்காமுடி கூறினார்.

பட்டமளிப்பு விழா 

கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியின் 7–வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வணங்காமுடி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 2011–12, 2012–13–ம் கல்வி ஆண்டுகளில் படித்து முடித்த 890 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:–

புரிந்து படிக்க வேண்டும் 

மாணவர்கள் தேர்வுக்காக, பாடங்களை மனப்பாடம் செய்து படிக்கிறார்கள். இது தவறு. மனப்பாடம் செய்து படித்தால் எந்த பலனும் இல்லை. புரிந்து படிக்க வேண்டும். தாங்கள் படித்ததை வைத்து சொந்தமாக அறிவை பயன்படுத்தி தேர்வு எழுதவேண்டும். அதற்கு அவர்களை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் 100–க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. உலகிலேயே சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் முதல் 200 இடங்களில் இந்திய பல்கலைக்கழகங்கள் ஒன்று கூட இடம் பெறவில்லை.

போதைக்கு அடிமையாகக்கூடாது 

ஆங்கிலம் வர்த்தக மொழி. எனவே ஆங்கில புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேண்டாம் என்று நினைத்தால் தமிழிலாவது புலமையை வளர்த்துக்கொள்ளுங்கள். படிப்பு மட்டும்தான் ஒரே சொத்து என்று கிடையாது. படிப்பை விட பெரிய சொத்து உண்டு.

உலகிலேயே அதிக அளவில் காப்புரிமை பெற்ற நாடுகளில் ஒன்று தென் கொரியா. நம்மிடம் எவ்வளவு அறிவு வளம், சிறப்பம்சங்கள் இருந்தும் நாம் காப்புரிமை பெறுவது கிடையாது. நம்முடைய அறிவுக்கு காப்புரிமை பெற வேண்டும்.

மாணவர்கள் மது போதைக்கு அடிமையாக கூடாது. மாறிவரும் பொருளாதார சூழ்நிலையில் வேலைகள் நிறைய உள்ளன. எனவே வேலை கிடைக்கவில்லையே என்று மனம் தளர கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர்.



















Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்




Read more...

பொியாா் அரசுக் கல்லூரி விடுதி மாணவர்கள் அடிப்படை வசதி கோாி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா்

தினமலா் 17.10.2014 வெள்ளிக்கிழமை
தினமலா் 17.10.2014 வெள்ளிக்கிழமை
                           


        தினத்தந்தி 17.10.2014 வெள்ளிக்கிழமை


தினமணி நாளிதழ்  17.10.2014 வெள்ளிக்கிழமையன்று வந்த செய்தி

உணவு தரமில்லாமல் இருந்ததாக குற்றஞ்சாட்டி, கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி விடுதி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
      கடலூர், தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கல்லூரி எதிரில் உள்ள பிற்பட்டோர் நல விடுதியில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு வியாழக்கிழமை காலை உணவு வழங்கப்பட்டது. அது தரமாக இல்லாததாலும், விடுதியில் கழிவறை சுத்தம் செய்யாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உணவை சாப்பிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குணசேகர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.    அப்போது உணவு தரமாக வழங்குவதாகவும்
, பிற கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். அதனையேற்று மாணவர்கள் காலை 11 மணிக்கு தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டு வகுப்பிற்குச் சென்றனர்.




Halloween Comments - http://www.halloweentext.com 
                                              கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வணிகவியல் மாணவர்களுக்கான சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் விழிப்புணர்வு கருத்தரங்கு 17.10.2014 அன்று நடைபெற்றது.

         கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு வணிகவியல் துறை சார்பாக வணிகவியல் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.  இதில் பொரியார் கலைக் கல்லூரி முதல்வர் திரு. வ. நா. விஸ்வநாதன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.  கல்லூரியின் பொருளாதர துறைத்தலைவர் ந. கண்ணன் அவர்கள சிறப்புறை ஆற்றினார். பின்பு  ICAI-ன் புதுச்சேரி கிளையின் தலைவர் “திரு விஜயகுமார் மோடி” மற்றும் அவர்களின் குழு இந்த நிகழ்ச்சியை சிறப்பான முறையில் நடத்தியது.  இக்கருத்தரங்கில் கடலூரை சேர்ந்த ஆடிட்டர்கள் M.S. ரவிச்சந்திரன் மற்றும் திரு. குமரகுரு சிறப்புரை ஆற்றினார்கள் மேலும் முனைவர் க. முருகதாஸ் அவர்கள் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பின் முக்கியதுவத்தையும் அதன் சாரம்சங்களையும் மாணவர்களுக்கு எளிமையாக எடுத்து கூறினார். வணிகவியல் துரை பேராசிரியர் திரு. சூசை ஜான் ரோசரியா துறையின் கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் சிறப்hன முறையில் பங்கேற்றனர்.     





Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வியாழன், 16 அக்டோபர், 2014

கடலூா், பொியாா் கலைக் கல்லூாியின் 7-வது பட்டமளிப்பு விழா சிறப்பு புகைப்படங்கள் நாள் 16.10.2014



தினமலா் 17.10.2014-வெள்ளிக்கிழமை
தினமலா் 17.10.2014-வெள்ளிக்கிழமை







Halloween Comments - http://www.halloweentext.com




Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP