புதன், 25 செப்டம்பர், 2013

தூத்துக்குடி புனித மேரி கல்லூரியில் தமிழக வரலாற்றுப் பேரவையின் இருபதாவது ஆண்டுக் கருத்தரங்கில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பு

   தூத்துக்குடி புனித மேரி கல்லூரியில் தமிழக வரலாற்றுப் பேரவையின் இருபதாவது ஆண்டுக் கருத்தரங்கம்  செப்டம்பர்  20, 21 மற்றும் 22, ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. 

        கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர் வி. ராயப்பன் அவர்களின் வழிகாட்டுதலில், கல்லூரி முதல்வர் அவர்களின் ஒப்புதலோடு வரலாற்றுத்துறை முதுகலை மாணவர்கள் 18 பேர் கருத்தரங்கில் கலந்துகொண்டனர். மாணவர்களை வரலாற்றுத்துறைப் பேராசிரியர்கள் முனைவர் நா. சேதுராமன், முனைவர் இ. விஜயலட்சுமி ஆகியோர் பொறுப்பேற்று அழைத்துச் சென்றனர்.   

    கருத்தரங்கில் கலந்து கொண்ட துறைத்தலைவர் வி. ராயப்பன், பேராசிரியர்கள் முனைவர் நா. சேதுராமன், முனைவர் இ. விஜயலட்சுமி, கௌரவ விரிவுரையாளர் ரா. சந்தோஷ் மற்றும் மாணவர்கள் ஜெ. ஜெயசுதா, ர. ஜெயலலிதா, பா. கனிமொழி, எஸ்.மஞ்சுளா, ப. மாலா, அ. சரண்யா, ர. சத்யபாமா, ரா. செல்வி, அ. தமிழரசன், தி. அமுல்ராஜ் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.         

அவர்கள் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரைகள் முறையே பின்வருமாறு: 

“பெஞ்சமின் ராபின்ஸ்: ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி பொறியாளரின் வாழ்க்கை வரலாறு”,

 “கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்: தமிழகத்தின் காந்தியச் செயற்பாட்டாளர்”,

 “தமிழ்நாட்டில் தேவதாசிகள் முறை ஒழிப்பில் பெண் சமுதாய சீர்திருத்தவாதிகள்”, 

“இரட்டை மலை சீனிவாசன்: வாழ்வும் சாதனைகளும்”, 

“தில்லையாடிவள்ளியம்மை: வாழ்வும், பணிகளும்”, 

“கடலூர் புனித டேவிட் கோட்டையின் வரலாறு – ஒர் ஆய்வு”, 

“திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் சிற்பங்கள் – ஓர் ஆய்வு”, 

“திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில் கல்வெட்டுகள் கூறும் வரலாற்றுச் செய்திகள் – ஓர் ஆய்வு”, 

“திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் கல்வெட்டுகள்: ஓர் ஆய்வு”, 

“திருப்பாதிரிப்புலியூர் பாடலேஸ்வரர் கோயிலின் வளர்ச்சி - ஒரு வரலாற்றுப் பார்வை”,

 “திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில் கல்வெட்டுக்கள்–ஓர் ஆய்வு”, 

“கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள் – ஓர் ஆய்வு”, 

  மற்றும் “பல்லவர் காலப் பனைமலை ஓவியங்கள்”.        

  அரசுக் கல்லூரியில் முதுகலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பயிலும் நிலையிலேயே மாணவர்கள் மிகச் சிறப்பான சான்றுகளுடன் ஆய்வுக்கட்டுரைகளைத் தயார்செய்து சிறப்பாகச் சமர்ப்பித்ததை கருத்தரங்கில் கலந்துகொண்ட ஆய்வாளர்கள் அனைவரும் வெகுவாகப் பாராட்டினர்.       

   மேலும், தமிழக வரலாற்றுப் பேரவையின் செயற்குழுவில் கடலூர் பெரியார் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் நா. சேதுராமன் அவர்கள் தமிழக வரலாற்றுப் பேரவை ஆய்வுக்கட்டுரைத் தொகுதியின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.          
    ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்த வரலாற்றுத்துறைப் பேராசிரியர்களையும், மாணவர்களையும் கல்லூரி முதல்வர் முனைவர் வி.என். விஸ்வநாதன் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP