வெள்ளி, 27 செப்டம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள புதிய பாடப் பிரிவுகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் கேட்டு அரசுக்கு முன்மொழிவு

கடலூர்:

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள புதிய பாடப் பிரிவுகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் கேட்டு அரசுக்குப் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.

 கடலூர் தேவனாம்பட்டினத்தில் 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு பெரியார் கலை அறிவியல் கல்லூரியில் பிஏ, எம்ஏ, பிகாம், எம்காம், எம்எஸ்சி உள்பட பல்வேறு பாடப் பிரிவுகள் உள்ளன. இங்கு கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 3,600 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

 நிகழ் கல்வியாண்டில், இளங்கலை அரசியல் அறிவியல், இளம் அறிவியல் நுண்ணுயிரியல், முதுநிலை பிரிவில் வேதியியல், தாவரவியல் எம்பில் பாடப் பிரிவு என முழு நேர வகுப்புகளும், தாவரவியல் பிஎச்டி முழு நேரம் மற்றும் பகுதி நேர வகுப்புகளும், வணிகவியல் பிஎச்டி முழு நேர வகுப்புகளும் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளின் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப கூடுதலாக புதிய வகுப்பறைகள், பரிசோதனைக் கூடம் அமைக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

 இதுகுறித்து கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் கூறியது:

 நிகழ் கல்வியாண்டில் புதிதாக 8 பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ள நிலையில், புதிய பாடப்பிரிவுக்கு, தேவையான வகுப்பறைகள் மற்றும் பரிசோதனைக் கூடம் எத்தனை தேவை என்ற விவரங்கள் குறித்து தமிழக அரசு பட்டியல் கேட்டுள்ளது. அதன்படி, 10 வகுப்பறைகள், ஒரு பரிசோதனைக் கூடம் தேவை என வரைபடத்துடன் பட்டியல் அனுப்பியுள்ளோம் என்றார்.


0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP