வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

கடலூர் பெரியார் கலைக்கல்லூரி இளங்கலை பொருளாதாரம் வகுப்பு மாணவர்களோடு அமர்ந்து பாடம் கவனித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன்

கடலூர்:

கடலூரில் பெரியார்  அரசுக் கலைக்கல்லூரி வகுப்பறைக்குள் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் திடீரென நுழைந்து மாணவர்களுடன் அமர்ந்து பாடத்தைக் கவனித்தார்.

கடலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை 
(08/08/2013) உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் வந்திருந்தார். அப்போது காலை 10.30 மணியளவில், கடலூர்  பெரியார் கலைக் கல்லூரிக்கு அமைச்சர் திடீரென நுழைந்தார். அங்கு வகுப்பறைகள் உள்ள வராண்டாவில் நடந்துச் சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது இளங்கலை பொருளாதாரம் வகுப்புக்குள் நுழைந்து மாணவர்களோடு அமர்ந்து கொண்டு பாடம் கவனித்தார். பின்னர் அங்கிருந்த மாணவர்களிடம், சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெளிவுப்பெற வேண்டும் என அறிவுரைக் கூறினார். அவருடன் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP