வியாழன், 22 மார்ச், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி விடுதி மாணவர்கள் தரமான உணவு வழங்காததைக் கண்டித்து போராட்டம்

கடலூர் :
 
          கடலூர்  பெரியார் கலைக் கல்லூரி விடுதி மாணவர்கள் தரமான உணவு வழங்காததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
         கடலூர், தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பலர் கல்லூரி எதிரில் உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு நேற்று காலை உணவு வழங்கப்பட்டது. அது தரமாக இல்லாததாலும், விடுதியில் கழிவறை சுத்தம் செய்யாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உணவை சாப்பிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் ராமலிங்கம் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உணவு தரமாக வழங்குவதாகவும், பிற கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனையேற்று மாணவர்கள் காலை 11 மணிக்கு தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டு வகுப்பிற்குச் சென்றனர்.

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP