சனி, 5 செப்டம்பர், 2015

பெரியார் கலைக் கல்லூரியில் ஆசிரியர் தினம் சிறப்பாக 04.05.2015 வெள்ளிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.





         சர்வபள்ளி டாக்டர்.இராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா பெரியார் கலைக் கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஆசிரியர்களுக்கிடையேயான கவிதை, கிரிக்கெட், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, வட்டு எறிதல், குண்டு எறிதல் போட்டிகள் நடத்தப்பெற்று பரிசுகள் வழங்கப்பட்டன.
         மாவட்ட அளவில் ‘அரசியல் சாசன அடிப்படை கடமைகள’; என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியில் பரிசு பெற்ற மாணவி பு.கவிஇலக்கியாவுக்கு பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவில் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர்.ஜெ.சியாமளா எழுதிய “சீதையின் புத்ரிகள்” என்ற தலைப்பில் உள்ள நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர். முனைவர்.வ.நா.விஸ்வநாதன் நூலினை வெளியிட முதல்பிரதியை தமிழ்த் துறைத்தலைவர் முனைவர்.சு.தமிழாழிக் கொற்கை வேந்தன் அவர்களும்ää இரண்டாம் பிரதியை கல்லூரி நூலகர் திரு.D.இளவழகன் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.
       மேலும் இக்கல்வியாண்டில் பணிநிறைவு பெறும் கல்லூரி முதல்வருக்கும் பேரா.சு.தமிழாழிக் கொற்கை வேந்தனுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் ஆசிரியரல்லா பணியாளரான திரு.தேவகுரு அவர்களுக்கு நினைவப்பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவினை பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து நடத்தப்பட்டது.
      வரவேற்புரையில் பேரா.சி.சிவசண்முகராஜா அவர்களும் நன்றியுரை முனைவர்.ம.ஆனந்தராஜ் அவர்களும் நல்கினர். இவ்விழாவின், சிறப்புரையில் முனைவர்.சு.தமிழாழிக் கொற்கை வேந்தன், முனைவர்.க.மனோகரன், பேரா.ரா.ரவி, முனைவர்.ரா.கண்ணன், பேரா.வி.இராயப்பன், பேரா.ரா.பாஸ்கரன், முனைவர்.ச.சச்சிதாநந்தம் முனைவர்.க.முருகதாஸ், முனைவர்.ப.ஷர்மிளா இந்திராணி, முனைவர்.ச.கீதாதேவி, பேரா.க.கீதா, முனைவர்.கே.செந்தில்குமார் மற்றும் முனைவர்.கு.நிர்மல்குமார் உள்ளிட்ட அனைத்து துறைத்தலைவர்களும் பேசினர்.

        இவ்விழாவில் கல்லூரி முதல்வர் “ஆசிரியர் பணி அறப்பணி என்றும், சமூக மாற்றத்தை கொண்டு வருவதில் ஆசிரியர்கள் பெரும் பங்காற்றுகின்றனர்” என்று குறிப்பிட்டார். இறுதியில் கவின் கலை மன்றத்தின மாணவ/மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் பெரும்பாலான மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆசிரியர்களை வாழ்த்தினர்.








Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP