வெள்ளி, 24 ஜனவரி, 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழ்த் துறை சார்பில் மாநில அளவிலான செம்மொழித் தமிழ் கருத்தரங்கம்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழ்த் துறை சார்பில் மாநில அளவிலான செம்மொழித் தமிழ் கருத்தரங்கம் வருகிற 29ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

மாநில அளவிலான இந்த செம்மொழித் தமிழ்க் கருத்தரங்கம், சங்க இலக்கிய நெய்தல் திணைப் பாடல்களும் நாட்டுப்புற மீனவர் பாடல்களும் எனும் தலைப்பில் நடைபெறுகிறது. இக் கருத்தரங்கம் நடத்துவதற்கான நிதியை சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்குகிறது. 30-க்கும் மேற்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்களும், கல்லூரி பேராசிரியர்களும் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கவுள்ளனர். கருத்தரங்கினை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் முத்துவேலு தொடங்கி வைக்கிறார். சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்த் துறை தலைவர் முனைவர் மகாலிங்கம் சான்றிதழ்களை வழங்கி நிறைவுரையாற்றுகிறார். கருத்தரங்கின் தலைவராக கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், ஒருங்கிணைப்பாளராக தமிழ்த் துறை தலைவர் தமிழாழிக்கொற்கை வேந்தன் செயல்பட உள்ளனர். 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP