வியாழன், 12 ஜனவரி, 2012

தானே புயல் : கடலூர் மாவட்டத்தில் பெரியார் கலைக் கல்லூரி உட்பட அரசு கல்லூரிகளை சீரமைக்க ரூ.83 லட்சம் நிதி ஒதுக்கீடு


புவனகிரி:

         கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளை சீரமைக்க ரூபாய் 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார். தானேபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் பார்வையிட்டு நிவாரண பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். 

அப்போது உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறுகையில், 

          "தானே புயலால் கடலூர் பெரியார் கலைக் கல்லூரி,  சிதம்பரம், சி.முட்லூர்  அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர்  அரசு கலைக்கல்லூரிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. கல்லூரி ஜன்னல் கண்ணாடிகள், காம்பவுண்டு சுவர்கள், மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன. இதனை சீரமைக்க 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என்றார். செல்வி ராமஜெயம் எம்.எல்.ஏ., மாவட்டச் செயலர் மாரிமுத்து, சேர்மன் கீதா உடனிருந்தனர்.


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP