வெள்ளி, 7 அக்டோபர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை

கடலூர்:

                கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

            கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின், மாணவிகள் பிரிவு பேரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  கல்லூரியில் இரண்டாம் சுழற்சி மாணவர்களுக்கு குடிநீர் தடையின்றி வழங்க வேண்டும். பட்ட மேற்படிப்பு மாணவர்கள் அனைவருக்கும் அரசு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

            ஈரோடு மாவட்ட இந்திய மாணவர் சங்கச் செயலாளர் கனிமொழி, சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்துப் பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசுதா, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.துளசி, மாவட்டச் செயலாளர் டி.அரசன் உள்ளிட்டோரும் பேசினர்.  புதிய நிர்வாகிகள் தேர்தலில் கல்லூரியின் கிளைத் தலைவராக எஸ்.ரம்யா, செயலாளராக புவனேஸ்வரி மற்றும் 13 பேர் அடங்கிய நிர்வாக்குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர். ஆர்.பாலாஜி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP