வெள்ளி, 23 செப்டம்பர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் இலவச மடிக்கணினி வழங்கக் கோரி வகுப்புப் புறக்கணிப்பு

கடலூர்:

      டலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . அரசுக் கல்லூரியில் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு, தமிழக அரசு இலவச மடிக் கணினி வழங்குவதாக அறிவித்து உள்ளது. அரசுக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கும் இலவச மடிக் கணினி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 

              இக்கோரிக்கையை வலியுறுத்தி, கடலூர் பெரியார் அரசுக் கலைக் கல்லூரி பட்டமேற்படிப்பு மாணவர்கள் வியாழக்கிழமை கல்லூரி வாயிலில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மற்ற மாணவ மாணவிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து அனைத்து மாணவ மாணவியரும் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரியை விட்டு வெளியேறினர்.

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP