வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வுப் பயிற்சி

கடலூர்:

                கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு, நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி முகாம் புதன்கிழமை நடந்தது.  

             மாவட்ட உணவுப் பொருள்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.  பயிற்சி முகாம் தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் க.ரங்கநாதன் தலைமை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.கல்யாணம் ஆகியோர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட கூடுதல் ஆட்சியர் வீரராகவ ராவ் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர்கள் கலையரசி ராமதாஸ், என்.பாண்டியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  

                  மாணவர்களுக்கு தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன், ஆலோசகர் கவிஞர் பால்கி, பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ் ஆகியோர் நுகர்வோர் உரிமைகள், பாதுகாப்புச் சட்டங்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளித்தனர்.

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேச்சுப் போட்டியில் பங்கேற்ப்பு

சிதம்பரம் : 

             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வேதியியல் துறை சார்பில் "நம் வாழ்க்கையில் வேதியியல்' தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது. 

             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதியியல் துறை சார்பில் சர்வதேச வேதியியல் ஆண்டு - 2011 முன்னிட்டு "நம் வாழ்க்கையில் வேதியியல்' தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது. வேதியியல் துறைத் தலைவர் கருணாகரன் துவக்கி வைத்தார். பூம்புகார் கலைக்கல்லூரி,  மயிலாடுதுறை ஏ.வி.சி., கலைக்கல்லூரி, கடலூர் பெரியார் கலைக் கல்லூரி, புனித வளனார் கல்லூரி, சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி, குறிஞ்சிப்பாடி திருவள்ளூவர் கலைக்கல்லூரி மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக வேதியியல் துறை மாணவர்கள் பங்கேற்றனர். 

                போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடந்தது. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தேசிய அறிவியல் தினத்தன்று துணைவேந்தர் ராமநாதன் பரிசு வழங்குகிறார். போட்டி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கபிலன், கோபாலகிருஷ்ணன் செய்திருந்தனர்.

வியாழன், 24 பிப்ரவரி, 2011

உளவியல் துறை கருத்தரங்கில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பேராசிரியர் பங்கேற்ப்பு

கடலூர் : 

           கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் உளவியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. "தேசிய அளவில் மனித உரிமை நிகழ்வுகளும், சவால்களும்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கை கல்லூரி முதல்வர் ரட்சகர் துவக்கி வைத்தார். 

            சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர் சுதாகர் தலைமை தாங்கினார். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி பேராசிரியர் குமாரசாமி சிறப்புரையாற்றினார். கடலூர் பெரியார் அரசு கல்லூரி பேராசிரியர் சேதுராமன் முதல் அமர்விற்கும், திருவண்ணாமலை அரசு கல்லூரி பேராசிரியர் தனிஸ்தாஸ் இரண்டாம் அமர்விற்கும் தலைமை வகித்தனர். நிறைவு விழாவிற்கு அண்ணாமலைப் பல்கலைக் கழக பேராசிரியர் திருமுருகன் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட சிறந்த ஆய்வு கட்டுரைகளுக்கு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் ராஜேந்திரன் பரிசு வழங்கிப் பேசினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சின்னப்பன், அந்தோணிராஜ், ஜெயராஜ், ரூபி வயலட்ராணி, திட்ட அலுவலர் ஆரோக்கியமேரி செய்திருந்தனர்.

வியாழன், 17 பிப்ரவரி, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தி.மு.க. மாணவரணி ஆலோசனைக் கூட்டம்

கடலூர்:
 
             துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவைத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்று, கடலூர் தி.மு.க. மாணவரணி வேண்டுகோள் விடுத்துள்ளது. கடலூர் பெரியார்  கலைக் கல்லூரி தி.மு.க. மாணவரணி ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.
 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
 
               ராணி மேரி கல்லூரிக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய மு.க. ஸ்டாலின் கடலூர் மத்திய சிறையில் 13 நாள்கள் அடைக்கப்பட்டு இருந்தார். இதேபோல் மு.க. ஸ்டாலின் தொடர்பான வரலாற்று நிகழ்வுகளுக்கும் கடலூருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எனவே சட்டப்பேரவைத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும். 
 
 மாவட்டம் முழுவதும் கிராமங்கள்தோறும் மாணவரணியினர் சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது. 
 
மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், 
 
ஏழைகளுக்கு இலவச உணவு வழங்குதல், 
 
அரசு மருத்துவமனைகளில் ரத்ததானம் செய்தல், 
 
மருத்துவ முகாம்கள் நடத்துதல், 
 
மரங்கள் நடுதல், 
 
மாணர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல், 
 
விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் 
 
உள்ளிட்ட பணிகளைச் செய்வது, 
 
மாவட்டம் முழுவதும் சென்று தி.மு.க. அரசின் சாதனைகளை பிரசாரம் செய்வது, 
 
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், முதல்வர் கருணாநிதிக்கு எதிராவும் குற்றச்சாட்டுகளைக் கூறிவரும் சுப்பிரமணியன் சுவாமியைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
                 கூட்டத்துக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி அமைபபாளர் கு,வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார். மாணவர்கள் வேல்முருகன், குபேந்திரன், விஜயகுமார், சிவா, கிருஷ்ணமூர்த்தி, ஆனந்த் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திங்கள், 14 பிப்ரவரி, 2011

கடலூர் பெரியார் கல்லூரி மாணவர்கள் வேதியியல் கண்காட்சியில் பங்கேற்ப்பு

கடலூர்:

        கடலூர் கந்தசாமி நாயுடு  மகளிர் கல்லூரியில் வேதியியல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் உட்பட 5 கல்லூரி மாணவர்கள்  பங்கேற்றனர்.



செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2ம் நாளாக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கடலூர் : 

        கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ஆதி திராவிடர் மாணவர்கள் இரண்டாம் நாளாக நேற்றும் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் பொருளியல் மூன்றாமாண்டு ஆதிதிராவிடர் மாணவர்கள் 29 பேருக்கு வர வேண்டிய தலா 2,850 ரூபாய் உதவித் தொகைக்கு பதிலாக 2,130 ரூபாய் மட்டுமே வந்தது.

              மாணவர்கள் முதல்வரிடம் புகார் தெரிவித்தனர். விசாரணையில் கல்லூரியிலிருந்து அனுப்பிய பட்டியலில் குறிப்பிட்ட 29 மாணவர்களுக்கு எஸ்.சி., என குறிப்பிடுவதற்கு பதிலாக எஸ்.சி.சி., (எஸ்.சி.,கிறிஸ்தவர்) என தவறுதலாக அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதனை கண்டித்து ஆதி திராவிடர் மாணவர்கள் கடந்த 4ம் தேதி வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்நிலையில் நேற்று இரண்டாம் நாளாக ஆதி திராவிட மாணவர்கள் வகுப்பை புறக்கணித்தனர். இதனையடுத்து கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

திங்கள், 7 பிப்ரவரி, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தேசிய இளைஞர் தினம்

கடலூர் :

       தேசிய இளைஞர் தினம் ( 12/01/2011) அன்று  கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் கொண்டாடப்பட்டது.



சனி, 5 பிப்ரவரி, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் உதவித்தொகை குறைந்ததால் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கடலூர் : 

          கடலூர் கல்லூரியில் ஆதி திராவிடர் மாணவர்கள் உதவித் தொகையை வாங்க மறுத்து ஒரு நாள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

            கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் பொருளியல் மூன்றாமாண்டு மாணவர்கள் 29 பேருக்கு வர வேண்டிய தலா 2,850 ரூபாய் உதவித் தொகைக்கு பதிலாக 2,130 ரூபாய் மட்டுமே வந்தது. மாணவர்கள் முதல்வரிடம் புகார் தெரிவித்தனர். விசாரணையில் கல்லூரியிலிருந்து அனுப்பிய பட்டியலில் குறிப்பிட்ட 29 மாணவர்களுக்கு எஸ்.சி., என குறிப்பிடுவதற்கு பதிலாக எஸ்.சி.சி., (எஸ்.சி.,கிறிஸ்தவர்) என தவறுதலாக அனுப்பப்பட்டது தெரியவந்தது.
 
               இதனை கண்டித்து மாணவர் ரவீந்திரன் தலைமையில் நேற்று காலை மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆதிதிராவிட நலத்துறை உதவி கணக்கு அதிகாரி செல்வம் கூறுகை யில், 

               "ஆன்லைன் பட்டியலில் தவறுதலாக அனுப்பப்பட்டதால் அதற்குரிய தொகை வழங்கப்பட்டுள்ளது. கல்லூரி சார்பில் கடிதம் கொடுத்துள்ளனர். உடன் மாணவர்களுக்கு சேரவேண்டிய தொகை அனுப்பப்படும்' என்றார்.

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவருக்கு பாராட்டு

கடலூர் : 

             கடலூர் மாவட்ட மாணவர் காங்., தலைவருக்கு காங்.,சார்பில் பாராட்டுக் கூட்டம் நடந்தது. 
           கடலூர் மாவட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உட்பட 21 கல்லூரிகளில் இருந்து 2,300 மாணவர்கள் காங்., உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் தலைவர், செயலர் உள்பட 10 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாநில நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கும், ஓட்டளிப்பதற்கும் 166 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த 29ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த தேர்தலில் கடலூர் மாவட்ட மாணவர் காங்., தலைவராக தேவனாம்பட்டினம் பெரியார்  கலைக் கல்லூரியைச் சேர்ந்த கலையரசன் தேர்வு செய்யப்பட்டார். 

                      மேலும் நான்கு பேர் பொதுச் செயலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட கலையரசனுக்கு மாவட்ட காங்., அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது. வக்கீல் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் அலமு தங்கவேல், ஜான் சதீஷ், ராமநாதன், ரகுபதி, கார்த்திக், சிவக்குமார், கலியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

புதன், 2 பிப்ரவரி, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவராக தேர்வு

கடலூர்:

           கடலூர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் கலையரசனுக்கு, மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தனர்

             கடலூர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் அண்மையில் நடந்தது. 21 கல்லூரிகளைச் சேர்ந்த 2,300 மாணவர்கள் வாக்களித்தனர்.இதில் 166 நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் வாக்களித்து மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவராக, கலையரசனைத் தேர்ந்தெடுத்து உள்ளனர். வடலூரைச் சேர்ந்த கலையரசன், கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் இளங்கலை 3-ம் ஆண்டு படிக்கிறார். அவருக்குக் கடலூர் மாவட்டக் காங்கிரஸ் கட்சி சார்பில் திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

             மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் சந்திரசேகரன் சால்வை அணிவித்துப் பாராட்டினார்.நகர காங்கிரஸ் தலைவர் ரகுபதி, மாவட்டக் காங்கிரஸ் செயலர் அலமு தங்கவேலு, முன்னாள் வட்டாரத் தலைவர் கலியமூர்த்தி, நகரச் செயலர் செல்வகுமார், துணைத் தலைவர் கார்த்திகேயன், இளைஞர் காங்கிரஸ் மக்களவைத் தொகுதி பொதுச் செயலர் ராமநாதன், சட்டப்பேரவை தொகுதி பொதுச் செயலர் சதீஷ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP