பேச்சுப் போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேச்சுப் போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 டிசம்பர், 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 10-வது சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு பேரிடர் விழிப்புணர்வு நாள் கருத்தரங்கம் 26.12.2014 அன்று நடைபெற்றது

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 10-வது சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு பேரிடர் விழிப்புணர்வு நாள் கருத்தரங்கம் 26.12.2014 அன்று நடைபெற்றது.

இக்கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ந.கண்ணன் தலைமை வகித்தார். இயற்பியல் துறைத் தலைவர் க.மனோகரன், தாவரவியல் துறைத் தலைவர் ச.கீதாதேவி, ஆங்கிலத் துறைத் தலைவர் ரா.ரவி, கணினி அறிவியல் துறைத் தலைவர் கா.கீதா ஆகியோர் பேசினர். முன்னதாக மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை மற்றும் சுனாமி தொடர்பான பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. 

பேச்சுப் போட்டியில் ச. உமாமகேஸ்வரி, ப.பாண்டித்துரை, கட்டுரைப் போட்டியில் த. சந்தியா, பு.கெளதமன், ஓவியப் போட்டியில் ச. சம்பத்குமார், சே. அறிவுடைநம்பி ஆகியோர் முதல் 2 இடங்களைப் பிடித்தனர். இவர்களுக்கு கல்லூரி முதல்வர் பரிசு வழங்கினார். கருத்தரங்கில் தமிழ்த் துறைத் தலைவர் சு.தமிழாழிக்கொற்கைவேந்தன் வரவேற்பு உரையாற்றினார். கணிதத் துறைத் தலைவர் சி.சிவசண்முகராஜா நன்றி கூறினார். 










Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

சனி, 2 பிப்ரவரி, 2013

கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் பெரியார் கலைக் கல்லூரி மாணவி இரண்டாமிடம்

கடலூர் :

        தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடந்த கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான படைப்பாற்றல் போட்டிகளில் மாணவிகளே அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

        தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தமிழில் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் பொருட்டு தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி கடலூர், பெரியார் அரசு கல்லூரியில் நேற்று நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் நடந்த இந்த போட்டியில் 18 கல்லூரிகளைச் சேர்ந்த 60 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

         கவிதைப் போட்டியில் குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி. கல்லூரி சுகந்தி, கடலூர் கந்த சாமி நாயுடு மகளிர் கல்லூரி தமிழ்ச்செல்வி, கட்டுரைப் போட்டியில் விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி சுதா, தொழுதூர் ஆறுமுகம் கலைக் கல்லூரி ராதிகா, பேச்சுப் போட்டியில் கடலூர் கிருஷ்ணசாமி கல்லூரி நந்தினி, கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவி சங்கீதா ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.

         மாலை நடந்த பரிசளிப்பு விழாவில் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் தமிழாழிக் கொற்கை வேந்தன் வரவேற்றார். முதல்வர் (பொறுப்பு) மனோகரன், போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கினார். முதல் பரிசாக 10, 000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 7, 000 ரூபாய் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பேராசிரியர் குமரன் மற்றும் பழனிவேலுசெய்திருந்தனர்.போட்டியில் வென்ற மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் உமா நன்றி கூறினார்.

. Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

புதன், 25 ஜனவரி, 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் கடலூர் மாவட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகள்

கடலூர் : 
 
        கடலூர் மாவட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான  கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில்  போட்டிகள் இன்று  (25/01/2012 - புதன் கிழமை) கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் நடக்கிறது. 

        கடலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் 137 பேர் பங்கேற்றனர். தமிழில் பேச்சாற்றல், படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடந்தது. 

          போட்டிகளை பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். முதுநிலை தமிழாசிரியர் மஞ்சு வரவேற்றார். இதில் மாவட்டம் முழுவதும் 47 பள்ளிகளில் இருந்து 137 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு 10 ஆயிரம், இரண்டாம் பரிசு 7,000 ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதில் முதல் பரிசு 15 ஆயிரமும், 2ம் பரிசு 10 ஆயிரமும் வழங்கப்படும்.

Read more...

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேச்சுப் போட்டியில் பங்கேற்ப்பு

சிதம்பரம் : 

             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வேதியியல் துறை சார்பில் "நம் வாழ்க்கையில் வேதியியல்' தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது. 

             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதியியல் துறை சார்பில் சர்வதேச வேதியியல் ஆண்டு - 2011 முன்னிட்டு "நம் வாழ்க்கையில் வேதியியல்' தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது. வேதியியல் துறைத் தலைவர் கருணாகரன் துவக்கி வைத்தார். பூம்புகார் கலைக்கல்லூரி,  மயிலாடுதுறை ஏ.வி.சி., கலைக்கல்லூரி, கடலூர் பெரியார் கலைக் கல்லூரி, புனித வளனார் கல்லூரி, சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி, குறிஞ்சிப்பாடி திருவள்ளூவர் கலைக்கல்லூரி மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக வேதியியல் துறை மாணவர்கள் பங்கேற்றனர். 

                போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடந்தது. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தேசிய அறிவியல் தினத்தன்று துணைவேந்தர் ராமநாதன் பரிசு வழங்குகிறார். போட்டி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கபிலன், கோபாலகிருஷ்ணன் செய்திருந்தனர்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP