வேதியியல் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேதியியல் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 30 ஜனவரி, 2015
திங்கள், 8 செப்டம்பர், 2014
வேதியியல் துறையின் சாா்பில் “பல்கலைக்கழகம் முதல் தொழிற்சாலை வiர் மாணவர்களிடையே வேதியியல் ஆர்வத்ததை அதிகரிப்பது” என்ற தலைப்பின் கீழ் தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது
திங்கள், 27 ஜனவரி, 2014
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாநில அளவிலான வேதியியல் திறனாய்வுத் தேர்வு நடைபெற்றது
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வேதியியலில் மாநில அளவிலான திறனாய்வுத் தேர்வு (SLPT-2014) 26.01.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
பல்கலைகழகம் மற்றும் கல்லூரிகளில் விரிவுரையாளராக பணியாற்றுவதற்கும், உதவித்தொகையுடன் கூடிய பி.எச்.டி.ஆய்வுப்படிப்பை மேற்கொள்வதற்கும் ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் சி.எஸ்.ஐ.ஆர். மற்றும் பல்கலைகழக மான்ய நல்கலைக்குழு தகுதித் தேர்வுகள் நடைபெறுகிறது. இத்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக நடத்தப்படும் இரண்டு வாரகால இலவசப் பயிற்சி முகாமில் பங்கேற்க, மாநில அளவிலான திறனாய்வுத் தேர்வு 26.01.2014 அன்று மாநிலம் முழுவதும் 6 மையங்களில் நடைபெற்றது.
பல்கலைகழகம் மற்றும் கல்லூரிகளில் விரிவுரையாளராக பணியாற்றுவதற்கும், உதவித்தொகையுடன் கூடிய பி.எச்.டி.ஆய்வுப்படிப்பை மேற்கொள்வதற்கும் ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் சி.எஸ்.ஐ.ஆர். மற்றும் பல்கலைகழக மான்ய நல்கலைக்குழு தகுதித் தேர்வுகள் நடைபெறுகிறது. இத்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக நடத்தப்படும் இரண்டு வாரகால இலவசப் பயிற்சி முகாமில் பங்கேற்க, மாநில அளவிலான திறனாய்வுத் தேர்வு 26.01.2014 அன்று மாநிலம் முழுவதும் 6 மையங்களில் நடைபெற்றது.
இத்தேர்வு கடலூர் பெரியார் அரசுக் கலைக் கல்லூரியில், கல்லூரியின் வேதியியல் துறையும், ராமசுப்பு ஜெயராமன் அறிவியல் அறக்கட்டளையும் இணைந்து முதல்வர் விஸ்வநாதன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இத்தேர்வில் கடலூர் மையத்தில் பல்வேறு பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த முதுகலை வேதியியல் மாணவ, மாணவிகள் 60 பேர் பங்கேற்று இத்தேர்வை எழுதினர்.
லேபிள்கள்:
திறனாய்வுத் தேர்வு,
முதல்வர் விஸ்வநாதன்,
வேதியியல் துறை,
SLPT-2014
ஞாயிறு, 27 அக்டோபர், 2013
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ரூ.50 லட்சம் மதிப்பில் வேதியியல் ஆய்வுக்கூட கட்டடம் திறப்பு
கடலூர்:
கடலூர் பெரியார் கலைக் கல்லூரிக்கு வேதியியல் ஆய்வுக்கூட கட்டடம் கட்ட சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஒதுக்கியிருந்தார். அந்த நிதியில் கட்டப்பட்ட வேதியியல் ஆய்வுக்கூடத்தின் திறப்பு விழா சனிக்கிழமை (26.10.2013) காலையில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) மனோகரன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் வரவேற்று பேசினார்.
விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேதியியல் ஆய்வுக்கூடத்தை திறந்து வைத்து பேசியது:
பெரியார் கலைக் கல்லூயில் முதுகலை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 4016.45 சதுர அடிப் பரப்பில் புதிய வேதியியல் ஆய்வகக் கட்டடம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் ஆய்வுக்கூடம், ஆசிரியர் அறை, பொருள்கள் வைக்கும் அறை மற்றும் ரசாயன அறை ஆகியவை உள்ளன. மாணவர்கள் ஆய்வகத்தை முழுமையாகப் பயன்படுத்தி ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொண்டு தலைசிறந்த மாணவர்களாக உருவாகவேண்டும். 50–ம் ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் இக்கல்லூரிக்கு தன்னாட்சி பெற்றுத்தர முயற்சிகள் எடுப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். என்.எல்.சி. நிறுவனத்திடம் இருந்து 2½ கோடி ரூபாய் கட்டிட வசதிக்காக பெற்றுத்தர ஏற்பாடு செய்வேன். இந்த நிதி கிடைக்கவில்லையெனில் வேறு சாத்தியக்கூறுகளை கண்டறியவும் நடவடிக்கை எடுப்பேன். இக்கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக 12 புதிய பாடப்பிரிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு எம்.பி.ஏ. படிப்பு கொண்டு வருவதற்கு உயர்கல்வித்துறை அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.
விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் குமார், நகராட்சி துணைத்தலைவர் ஜி.ஜெ.குமார், கடலூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பழனிச்சாமி, கவுன்சிலர் பழனிச்சாமி மற்றும் பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் வேதியியல் துறை தலைவர் ஷர்மிளா இந்திராணி நன்றி கூறினார். நிகழ்ச்சியை செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி தமிழ்செல்வராஜன் தொகுத்து வழங்கினார்.
செவ்வாய், 27 மார்ச், 2012
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வேதியியல் மன்றத் தொடக்க விழா
கடலூர்:
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வேதியியல் மன்றத் தொடக்க விழா திங்கள்கிழமை நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வரும் (பொறுப்பு) வரலாற்றுத்துறைத் தலைவருமான முனைவர் க.காந்திமதி தலைமை தாங்கினார். வேதியியல் துறைத் தலைவர் முனைவர் பா.ஷர்மிளா இந்திராணி முன்னிலை வகித்தார். கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி வேதியியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் அனுசுயா சிறப்பு சொற்பொழிவாற்றினார். வேதியியல் துறை இணைப் பேராசிரியர் சு.கலைமணி நன்றி கூறினார்.
லேபிள்கள்:
முனைவர் க.காந்திமதி,
வேதியியல் துறை,
வேதியியல் மன்றம்
வெள்ளி, 25 பிப்ரவரி, 2011
கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேச்சுப் போட்டியில் பங்கேற்ப்பு
சிதம்பரம் :
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வேதியியல் துறை சார்பில் "நம் வாழ்க்கையில் வேதியியல்' தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதியியல் துறை சார்பில் சர்வதேச வேதியியல் ஆண்டு - 2011 முன்னிட்டு "நம் வாழ்க்கையில் வேதியியல்' தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது. வேதியியல் துறைத் தலைவர் கருணாகரன் துவக்கி வைத்தார். பூம்புகார் கலைக்கல்லூரி, மயிலாடுதுறை ஏ.வி.சி., கலைக்கல்லூரி, கடலூர் பெரியார் கலைக் கல்லூரி, புனித வளனார் கல்லூரி, சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி, குறிஞ்சிப்பாடி திருவள்ளூவர் கலைக்கல்லூரி மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக வேதியியல் துறை மாணவர்கள் பங்கேற்றனர்.
போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடந்தது. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தேசிய அறிவியல் தினத்தன்று துணைவேந்தர் ராமநாதன் பரிசு வழங்குகிறார். போட்டி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கபிலன், கோபாலகிருஷ்ணன் செய்திருந்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




