வரலாற்றுத் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாற்றுத் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 மார்ச், 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை மற்றும் புதுதில்லி இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்துடன் இணைந்து வரலாற்றை மறுகட்டமைத்தல்: தரம் சார்ந்த மற்றும் தரவு சார்ந்த அணுகுமுறைகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசியப் பயிலரங்கம்

பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா ஆண்டை நினைவு கூறும் வகையில், கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை, 7 & 8 மார்ச் ஆகிய இரு நாட்களில் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம், புதுதில்லி நிதி உதவியுடன் “வரலாற்றை மறுகட்டமைத்தல்: தரம் சார்ந்த மற்றும் தரவு சார்ந்த அணுகுமுறைகள்” என்ற தலைப்பில் நடத்திய தேசியப் பயிலரங்கின் துவக்க விழா 07.03.2014 அன்று காலை 10 மணியளவில் கல்லூரியின் விழா அரங்கில் நடைபெற்றது. 

 பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் வி.என். விஸ்வநாதன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். தனது உரையில் பல்வேறு வரலாற்று அணுகுமுறைகளைப் பட்டியலிட்ட அவர், அனைத்து அணுகுமுறைகளையும் உள்ளடக்கியதாக, தரம்சார்ந்தும், தரவு சார்ந்தும் வரலாற்று ஆய்வுகள் அமைய வேண்டும் என்றார். மேலும், என்ன நடந்தது? என்பதை விட, ஏன் நடந்தது? என்ற கேள்வி மிக முக்கியமானது என்றார். 

 தேசியப் பயிலரங்கத்தை குத்துவிளக்கேற்றித் துவக்கிவைத்த, புது தில்லி, இந்திய வரலாற்று ஆய்வுக் கழக உறுப்பினரும், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக கலைப்புல முதல்வரும், வரலாற்றுத்துறைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் நா. இராஜேந்திரன் அவர்கள் பயிலரங்க துவக்க விழா உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது, சார்பு இல்லாத நிலையில் வரலாறு எழுதப்படவேண்டும். வரலாற்றாசிரியர் எத்தகைய அணுகுமுறைகளைப் என்றாபயன்படுத்தினாலும், உள்ளதை உள்ளபடி உரைக்க வேண்டும் என்றார். 

 08.03.2014 அன்று மாலை 4 மணியளவில் கல்லூரியின் விழா அரங்கில் நடைபெற்ற பயிலரங்க நிறைவு விழாவில் முனைவர் எஸ்.கே. அருணி, துணை இயக்குநர், இந்திய வரலாற்று ஆய்வுக் கழக தென் பிராந்திய மையம், பெங்களூரு, அவர்கள் பயிலரங்க நிறைவு விழா உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் வரலாறு பயில்கின்ற மாணவர்களுக்கு இருக்கின்ற வாய்ப்புகள் குறித்து விளக்கியதோடு, வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்கின்ற மாணவர்களுக்கு இந்திய வரலாற்றாய்வுக் கழகம் வழங்குகின்ற உதவித்தொகைகள் பற்றி எடுத்துரைத்தார். 

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த தேசியப் பயிலரங்கில், புதுதில்லி இந்திய வரலாற்று ஆய்வுக் கழக உறுப்பினர் பேராசிரியர் நா. இராஜேந்திரன் அவர்கள் “புள்ளியியல் அடிப்படையிலான வரலாறு” என்ற தலைப்பிலும், பிஷப் ஹீபர் கல்லூரி கலைப்புல முதல்வர் முனைவர் கே. ஜான்குமார் அவர்கள் “பல்வேறு வரலாற்று அணுகுமுறைகளை ஒருங்கிணைப்பதன் நன்மைகள்” என்ற தலைப்பிலும், புதுச்சேரி மொழியியல் மற்றும் கலாச்சார மைய இயக்குநர் முனைவர் பக்தவச்சல பாரதி அவர்கள் “இடப்பெயர்ச்சிக் கதைகள் மூலம் இனவழி வரலாற்றைக் கட்டமைத்தல்” என்ற தலைப்பிலும், பாரதிதாசன் பல்கலைக்கழக பொருளாதாரம், வணிகவியல் மற்றும் நிதியியல் பள்ளியின் தலைவர் முனைவர் எஸ். அய்யம்பிள்ளை அவர்கள் “தரவு சார்ந்த வரலாற்று அணுகுமுறை” என்ற தலைப்பிலும், திருச்சி பெரியார் ஈ.வே.ரா. கல்லூரியின் மேநாள் வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் கே. சூரியமூர்த்தி “அடித்தள வரலாறு” என்ற தலைப்பிலும், சென்னைப் பல்கலைக்கழக பாதுகாப்பு மற்றும் யுத்ததந்திர ஆய்வுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் எஸ். உத்தம் குமார் ஜமதக்னி அவர்கள் “இராணுவ வரலாற்றை மறுகட்டமைத்தல்” என்ற தலைப்பிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறைத் தலைவர் முனைவர். பி. சக்திவேல் அவர்கள் “ஜனநாயகமும் நிறைவில்லா நிலையும்” என்ற தலைப்பிலும், பாரதிதாசன் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மேலாண்மைத்துறை தலைவர் முனைவர் மு. இரவிச்சந்திரன் அவர்கள் “சுற்றுச்சூழல் வரலாற்றின் பொருத்தப்பாடு” என்ற தலைப்பிலும், பாரதிதாசன் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் த. அசோகன் அவர்கள் “வரலாற்றியமும் இந்திய வரலாற்று வரைவியலும்” என்ற தலைப்பிலும், சென்னை காயிதே மில்லத் கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் கே. விஜயா அவர்கள் “பெண்ணிய ஆய்வின் இயல்பும் முறைகளும்” என்ற தலைப்பிலும், பாரதிதாசன் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஒய். சீனீவாச ராவ் அவர்கள் “இந்தியாவில் அடித்தள வரலாற்று ஆய்விற்கான சாத்தியங்களும், சவால்களும்” என்ற தலைப்பிலும் ஆய்வுரைகளை நிகழ்த்தினர். 

 பெரியார் கலைக்கல்லூரியில் இருந்தும், தமிழ் நாடு, பாண்டிச்சேரி மற்றும் கர்நாடகாவின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்தும் சுமார் 400 பங்கேற்பாளர்கள், மூத்த அறிஞர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய்வறிஞர்கள் மற்றும் மாணவர்கள் பயிலரங்கில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், முன்னதாக பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் வி. இராயப்பன் அவர்கள் வரவேற்றார். 

இதில், கல்லூரி மாணவர்கள், மூத்த வரலாற்று அறிஞர்கள், ஆய்வாளர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக, தேசியப் பயிலரங்கின் இயக்குநரும், பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் நா. சேதுராமன் அவர்கள் நன்றி கூறினார்.


வரவேற்புரை நிகழ்த்துகிறார் வரலாற்றுத்துறைத் தலைவர் வி. ராயப்பன்


சிறப்பு விருந்தினர் முனைவர் நா. இராஜேந்திரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்துகிறார் கல்லூரி முதல்வர் முனைவர் வி.என். விஸ்வநாதன் அவர்கள்


தலைமையுரை நிகழ்த்துகிறார் கல்லூரி முதல்வர் முனைவர் வி.என். விஸ்வநாதன் அவர்கள்


தேசியப் பயிலரங்கத்தை குத்துவிளக்கேற்றித் துவக்கிவைத்த, புது தில்லி, இந்திய வரலாற்று ஆய்வுக் கழக உறுப்பினரும், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக கலைப்புல முதல்வரும், வரலாற்றுத்துறைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் நா. இராஜேந்திரன் அவர்கள் பயிலரங்க துவக்க விழா உரை நிகழ்த்துகிறார்


பயிலரங்க நிறைவு விழா உரை நிகழ்த்திய இந்திய வரலாற்று ஆய்வுக் கழக தென் பிராந்திய மைய இயக்குநர் முனைவர் எஸ்.கே. அருணி அவர்களுக்கு பொன்னாடை போர்த்துகிறார் கல்லூரி முதல்வர் முனைவர் வி.என். விஸ்வநாதன் அவர்கள்


பயிலரங்கில் பங்கேற்றோருக்கு நன்றி கூறுகிறார் பயிலரங்க இயக்குநர் முனைவர் நா. சேதுராமன்

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வியாழன், 20 பிப்ரவரி, 2014

One Day State Level Workshop On Entrepreneurial Development And Inauguration Of EDC – The First Of Its Kind in The History Of Cuddalore Periyar Arts College

ONE DAY STATE LEVEL WORKSHOP ON ENTREPRENEURIAL DEVELOPMENT And  INAUGURATION OF EDC – THE FIRST OF ITS KIND IN THE HISTORY OF PERIYAR ARTS COLLEGE, CUDDALORE


    The PG and Research Department of Commerce of Periyar Arts College organized a one day state – level workshop on entrepreneurial development and inaugurated the EDC (Entrepreneur Development Cell) on 13th Feb-2014 in its premises.

    180 students participated in the work shop. Dr. K. MURUGADOSS Head of the Department, welcomed the participants and the dignitaries. Dr. V.N. VISWANATHAN, the Principal, in his presidential address emphasized on the need for self employment which will be a born to the future India. Mr. Rajaganesh, General Manager, District Industries Centre, Cuddalore as the Chief guest, highlighted the government schemes available to an entrepreneur.

    The Key note address was presented by Mr. F.FELIX CLEMENT, Managing Director of MID –Link, Chennai. He spoke on how to become an entrepreneur. He emphasized on the three qualities needed for an entrepreneur viz, Flight balance enterprises and enterprising which make him successful.

    Mr. ASHOK, The President of Medium and Small Enterprises association Cuddalore spoke on avenues open to an entrepreneur. Dr. G.DAMODARAN , Proprietor of Uma Devi Agro and milk products Cuddalore, highlighted on the challenges confronted by an entrepreneur

    Dr .S.SOOSAI JOHN ROSARIO, Asst Professor of Commerce, compered the programme and proposed the vote of thanks. The heads and members of other faculties added grandeur to the progamme by their participation

    As the highlight of the programme, the Entrepreneurial Development (EDC) Cell which is the pioneer attempt among Government colleges was inaugurated which would function as an important organ of the department for motivating and training students to become entrepreneursin the path of creating employment opportunities.


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

புதன், 25 செப்டம்பர், 2013

தூத்துக்குடி புனித மேரி கல்லூரியில் தமிழக வரலாற்றுப் பேரவையின் இருபதாவது ஆண்டுக் கருத்தரங்கில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பு

   தூத்துக்குடி புனித மேரி கல்லூரியில் தமிழக வரலாற்றுப் பேரவையின் இருபதாவது ஆண்டுக் கருத்தரங்கம்  செப்டம்பர்  20, 21 மற்றும் 22, ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. 

        கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர் வி. ராயப்பன் அவர்களின் வழிகாட்டுதலில், கல்லூரி முதல்வர் அவர்களின் ஒப்புதலோடு வரலாற்றுத்துறை முதுகலை மாணவர்கள் 18 பேர் கருத்தரங்கில் கலந்துகொண்டனர். மாணவர்களை வரலாற்றுத்துறைப் பேராசிரியர்கள் முனைவர் நா. சேதுராமன், முனைவர் இ. விஜயலட்சுமி ஆகியோர் பொறுப்பேற்று அழைத்துச் சென்றனர்.   

    கருத்தரங்கில் கலந்து கொண்ட துறைத்தலைவர் வி. ராயப்பன், பேராசிரியர்கள் முனைவர் நா. சேதுராமன், முனைவர் இ. விஜயலட்சுமி, கௌரவ விரிவுரையாளர் ரா. சந்தோஷ் மற்றும் மாணவர்கள் ஜெ. ஜெயசுதா, ர. ஜெயலலிதா, பா. கனிமொழி, எஸ்.மஞ்சுளா, ப. மாலா, அ. சரண்யா, ர. சத்யபாமா, ரா. செல்வி, அ. தமிழரசன், தி. அமுல்ராஜ் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.         

அவர்கள் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரைகள் முறையே பின்வருமாறு: 

“பெஞ்சமின் ராபின்ஸ்: ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி பொறியாளரின் வாழ்க்கை வரலாறு”,

 “கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்: தமிழகத்தின் காந்தியச் செயற்பாட்டாளர்”,

 “தமிழ்நாட்டில் தேவதாசிகள் முறை ஒழிப்பில் பெண் சமுதாய சீர்திருத்தவாதிகள்”, 

“இரட்டை மலை சீனிவாசன்: வாழ்வும் சாதனைகளும்”, 

“தில்லையாடிவள்ளியம்மை: வாழ்வும், பணிகளும்”, 

“கடலூர் புனித டேவிட் கோட்டையின் வரலாறு – ஒர் ஆய்வு”, 

“திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் சிற்பங்கள் – ஓர் ஆய்வு”, 

“திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில் கல்வெட்டுகள் கூறும் வரலாற்றுச் செய்திகள் – ஓர் ஆய்வு”, 

“திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் கல்வெட்டுகள்: ஓர் ஆய்வு”, 

“திருப்பாதிரிப்புலியூர் பாடலேஸ்வரர் கோயிலின் வளர்ச்சி - ஒரு வரலாற்றுப் பார்வை”,

 “திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில் கல்வெட்டுக்கள்–ஓர் ஆய்வு”, 

“கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள் – ஓர் ஆய்வு”, 

  மற்றும் “பல்லவர் காலப் பனைமலை ஓவியங்கள்”.        

  அரசுக் கல்லூரியில் முதுகலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பயிலும் நிலையிலேயே மாணவர்கள் மிகச் சிறப்பான சான்றுகளுடன் ஆய்வுக்கட்டுரைகளைத் தயார்செய்து சிறப்பாகச் சமர்ப்பித்ததை கருத்தரங்கில் கலந்துகொண்ட ஆய்வாளர்கள் அனைவரும் வெகுவாகப் பாராட்டினர்.       

   மேலும், தமிழக வரலாற்றுப் பேரவையின் செயற்குழுவில் கடலூர் பெரியார் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் நா. சேதுராமன் அவர்கள் தமிழக வரலாற்றுப் பேரவை ஆய்வுக்கட்டுரைத் தொகுதியின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.          
    ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்த வரலாற்றுத்துறைப் பேராசிரியர்களையும், மாணவர்களையும் கல்லூரி முதல்வர் முனைவர் வி.என். விஸ்வநாதன் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.

Read more...

சனி, 17 ஆகஸ்ட், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா ஆண்டை (1964-2014) நினைவு கூறும் வகையில் தேசிய அளவிலான கருத்தரங்கம் - புகைப்படங்கள்

பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா ஆண்டை நினைவு கூறும் வகையில், கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை 1 &  2 ஆகஸ்ட் 2013 ஆகிய இரு நாட்களில் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம், புதுதில்லி நிதி உதவியுடன் “சோழமண்டலக் கடற்கரையில் காலனியாதிக்க மேலாதிக்கம்: ஆதிக்கநிலைநாட்டலும் சச்சரவுகளும் – கடலூர் குறித்த சிறப்பாய்வு” என்ற தலைப்பில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கத்தின் புகைப்படங்கள் 



தேசியக் கருத்தரங்கில் வரவேற்புரை நிகழ்த்துகிறார் வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் வி. ராயப்பன்



தேசியக் கருத்தரங்கில் தலைமையுரை நிகழ்த்துகிறார் கல்லூரி முதல்வர் வி.என். விஸ்வநாதன்




சிறப்பு விருந்தினர் முனைவர் நா. இராஜேந்திரன் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் கல்லூரி முதல்வர் வி.என். விஸ்வநாதன் அவர்கள், அருகில் கருத்தரங்க இயக்குநர் முனைவர் நா. சேதுராமன்
 
 

தேசியக் கருத்தரங்க துவக்கவிழா சிறப்புரை நிகழ்த்துகிறார் புதுதில்லி இந்திய வரலாற்றாய்வுக் கழக உறுப்பினர் பேராசிரியர் நா. இராஜேந்திரன் அவர்கள்
 
 


தேசியக் கருத்தரங்க நிறைவுவிழா சிறப்புரை நிகழ்த்துகிறார் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி கலைப்புல முதல்வர் முனைவர் கே. ஜான்குமார் அவர்கள்
 
 


தேசியக் கருத்தரங்கில் கலந்து கொண்டோருக்கு நன்றி கூறுகிறார் தேசியக் கருத்தரங்க இயக்குநர் முனைவர் நா. சேதுராமன்

Read more...

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பொன் விழா ஆண்டு நிறைவை முன்னிட்டு வரலாற்றுத் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பொன் விழா ஆண்டு நிறைவு பெறுவதை  ஒட்டி  வரலாற்றுத் துறை சார்பில் ஆகஸ்ட் 1 மற்றும் ஆகஸ்ட் 12, 2003 நடந்த தேசிய அளவிலான கருத்தரங்கம் குறித்து முன்னணி நாளேடுகளில் வந்த செய்திகளின் தொகுப்பு














Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா ஆண்டை (1964-2014) நினைவு கூறும் வகையில் தேசிய அளவிலான கருத்தரங்கம் - நிறைவு விழா

  பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா ஆண்டை நினைவு கூறும் வகையில், கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை, 1 &  2 ஆகஸ்ட் 2013 ஆகிய இரு நாட்களில் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம், புதுதில்லி நிதி உதவியுடன் “சோழமண்டலக் கடற்கரையில் காலனியாதிக்க மேலாதிக்கம்: ஆதிக்கநிலைநாட்டலும் சச்சரவுகளும் – கடலூர் குறித்த சிறப்பாய்வு” என்ற தலைப்பில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கத்தின் நிறைவு விழா நேற்று மாலை (02.08.2013 - வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் கல்லூரியின் விழா அரங்கில் நடைபெற்றது. 

பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் வி.என். விஸ்வநாதன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது, 

      பெரியார் கலைக் கல்லூரியின் பொன்விழா ஆண்டின் துவக்கத்தையொட்டி, கல்லூரியின் 50 ஆண்டு கால வரலாற்றை எழுதுவதற்கான முயற்சிகள் தொடங்கப்படுகின்றன, நிறைவு விழாவில் அது நூலாக வெளியிடப்படும். மேலும், கடலூரின் காலனியாதிக்க வரலாற்றை ஆவணப்படுத்துகின்ற வகையில், இந்த இரு நாள் தேசியக் கருத்தரங்கில் சமப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஒரு புத்தகமாக வெளியிடப்படும். ஒரிரு மாதங்களுக்குள்ளாகவே அப்பணி செய்து முடிக்கப்படும். மேலும், இது போன்ற தேசியக் கருத்தரங்குகளை கல்லூரியில் தொடர்ந்து நடத்துவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.   

       திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் கே. ஜான்குமார் அவர்கள் தேசியக் கருத்தரங்கத்தின் நிறைவு விழாப்பேருரை நிகழ்த்தினார்.

 அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது, 

சோழமண்டலக் கடற்கரையில் காலனியாதிக்க மேலாதிக்கம் நிலைபெற்றதற்கு அக்காலகட்டத்தில் அப்பகுதிகளில் ஆட்சி செய்த மன்னர்களின் தாராள வாணிபக் கொள்கையே காரணம். அக்கொள்கையின் காரணமாக அவர்கள் காலனியாதிக்கச் சக்திகளுக்கு கடற்கரையோரா நகரங்களில் வாணிபம் செய்வதற்கு அனுமதி அளித்தனர். அவ்வகையில் அனுமதி பெற்ற அயல்நாட்டவர் காலப்போக்கில் கடல்சார் வாணிபத்தையும், கடலையும் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டனர். அதன்பிறகு அவர்களுக்கு அனுமதியளித்த மன்னர்களே கடல்கடந்து பிறநாடுகளோடு வாணிபம் செய்வதற்கு காலனியாதிக்கச் சக்திகளிடம் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசுக் கல்லூரியில் இது போன்ற தேசியக் கருத்தரங்குகள் நடத்தப்படுவது ஆச்சரியம் அளிக்கக் கூடியதாகும். இது போன்ற முயற்சிகள் தொடர வேண்டும்.     

     இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த தேசியக் கருத்தரங்கில், கடலூரின் காலனியாதிக்க வரலாறு குறித்த 35 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 

    கருத்தரங்கில் தேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புகழ்மிக்க மற்றும் அனுபவம் மிக்க கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், வரலாற்றாளர்கள், ஆய்வறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.      

    நிறைவுவிழா நிகழ்ச்சியில், முன்னதாக பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் வி. இராயப்பன் அவர்கள் வரவேற்றார்.        

    நிறைவாக, தேசியக் கருத்தரங்கத்தின் இயக்குநரும் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் நா. சேதுராமன் அவர்கள் நன்றி கூறினார்.   

    பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி. பிரபா அவர்கள் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார் மற்றும் வரலாற்றுத்துறைப் பேராசிரியர்கள் தி. சிவகாமசுந்தரி, நா. தெய்வாம்சம், முனைவர் வீ. ரேவதி, முனைவர். இ. விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய கீதத்துடன் கருத்தரங்க நிறைவு விழா இனிதே நிறைவுற்றது.    

 தேசியக் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

 1.  கடலூரின் காலனியாதிக்க கால வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில் இக்கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. 

2. கடலூரின் வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில் கடலூர் வரலாற்று ஆவண மையம் ஒன்றை கடலூரில் ஏற்படுத்த வேண்டும் என்றும் அதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை விடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 

3. வரலாற்றுப் பாரம்பரியச் சின்னமான புனித டேவிட் கோட்டை பராமரிப்பிலாத நிலையில் இருக்கிறது. அதனைப் புனரமைக்க வேண்டுமென்றும், அங்கு வரும் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அக்கோட்டை குறித்த வரலாற்றைக் காட்சிப் படுத்தி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசையும், மத்திய அரசின் தொல்லியல் துறையையும் கேட்டுக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

பார்க்க: 

 



Read more...

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா ஆண்டை (1964-2014) நினைவு கூறும் வகையில் தேசிய அளவிலான கருத்தரங்கம் - துவக்கவிழா

பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா ஆண்டை நினைவு கூறும் வகையில், கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை, 1 &  2 ஆகஸ்ட் 2013 ஆகிய இரு நாட்களில் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம், புதுதில்லி நிதி உதவியுடன் “சோழமண்டலக் கடற்கரையில் காலனியாதிக்க மேலாதிக்கம்: ஆதிக்கநிலைநாட்டலும் சச்சரவுகளும் – கடலூர் குறித்த சிறப்பாய்வு” என்ற தலைப்பில் நடத்துகின்ற தேசியக் கருத்தரங்கத்தின் துவக்க விழா இன்று (01.08.2013 - வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் கல்லூரியின் விழா அரங்கில் நடைபெற்றது.      

    பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் வி.என். விஸ்வநாதன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். 

அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது, 

கடலூர் நகரின் வரலற்றுச் சிறப்பு மிக்க நகரம். சோழமண்டலக் கடற்கரையில், 1748 முதல் 1752 வரையில் அதுவே ஆங்கிலேயர்களில் தலைமையிடமாக இருந்தது. கெடிலம் நதிக்கரையில் தேவனாம்பட்டினத்தில் அமைந்துள்ள செயின்ட் டேவிட் கோட்டை இன்றும் ஆங்கிலேய ஏகாதிபத்தின் எச்சமாக இருக்கிறது. 1756-ல் ராபர்ட் கிளைவ் இக்கோட்டையின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1653-ம் ஆண்டு இந்து வணிகர் ஒருவரால் கட்டப்பட்ட இக்கோட்டை, 1677-ல் சிவாஜி செஞ்சியைக் கைப்பற்றிய பிறகு மராத்தியர்களில் கைக்குப் போனது, பின்னர் ஆங்கிலேயர்கள் அதனை வாங்கினர். அதற்கென ஒரு புதிய முறையைக் கையாண்டனர். டேவிட் கோட்டையிலிருந்து கடலூர் நகரத்தை நோக்கி பல திசைகளிலும் பீரங்கியால் சுட்டனர். குண்டுகள் விழுந்த இடம் வரையிலான பகுதிகளைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டனர். அவ்வாறு குண்டு விழுந்த இடங்கள் இன்றும் குண்டு உப்பலவாடி, குண்டுசாலை, குண்டுசாவடி என்றே அழைப்படுகின்றன. ஆங்கிலேயர்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் தங்களின் குடியேற்றங்களை உருவாக்கினர்.        

தேசியக் கருத்தரங்கத்தை குத்துவிளக்கேற்றித் துவக்கிவைத்த, புது தில்லி, இந்திய வரலாற்று ஆய்வுக் கழக உறுப்பினரும், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக கலைப்புல முதல்வரும், வரலாற்றுத்துறைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் நா. இராஜேந்திரன் அவர்கள் கருத்தரங்கத் துவக்க விழா உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது, 

      கடல்சார் வரலாறு என்பது கடலில் மனிதனுடைய நடவடிக்கைகளின் பற்றிய ஆய்வாகும். அதில் தேசிய மற்றும் பிராந்திய வரலாறுகள் முதன்மையானதாக இருந்தபோதிலும், பெரும்பாலும் வரலாற்றின் ஒரு பரந்துபட்ட கருத்தியல் ரீதியிலான கூறுபாடு உள்ளடக்குகின்ற ஒரு உலகளாவிய அணுகுமுறையைப் பயன்படுத்துகின்றது. ஒரு கல்வி சார்ந்த பாடமாக, துறைகளின் தரநிலை எல்லைகளைத் தாண்டி பெரும்பாலும் சமுத்திரங்கள், கடல்கள், மற்றும் உலகின் முக்கிய நீர்வழிகள் என மனித குலத்தின் பல்வேறு உறவுகளைப் புரிந்து கொள்வதில் கவனம் செலுத்துகிறது. கடல்சார் வரலாறு கப்பல்கள், சரக்குப் போக்குவரத்து, கடல் பயணம் மற்றும் மாலுமிகளை சம்பந்தப்பட்ட கடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்து விளக்கமளிக்கிறது. கடல்சார் வரலாறு காலஓட்டத்தில் பல்வேறு கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. பண்டைய காலங்களில் வணிகம் மற்றும் வர்த்தகமே பெருமளவில் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. உதாரணமாக, சிந்து சமவெளி நாகரிக இடமான லோத்தலில் கப்பல் கட்டும் தொழில் நடைபெற்றது. எகிப்து, உர் மற்றும் மெசபடோமியா மற்றும் சிந்து நாகரிங்களுக்கு இடையே தீவிர வணிகரீதியான உறவுகள் இருந்தன. சங்ககாலத்தில் சங்ககால மன்னர்கள் இலங்கையின் மீது தொடர்ந்து போர் தொடுத்து அங்கிருந்து கைதிகளைக் கொண்டுவந்து காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்காக அவர்களைப் பயன்படுத்தினர் என்பதற்குச் சான்றுகள் இருக்கின்றன. தமிழர்கள் அடிப்படையில் செல்வத்தைச் சம்பாதிக்க ஆழ்கடல்களைப் பயன்படுத்தினர். “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்பது தமிழ் பழமொழி ஆகும். இந்தக் கருத்தரங்கு சில முக்கிய அம்சங்களை முன்னிலைப் படுத்துகிறது. முதலில் உள்ளூர் வரலாறே அடிப்படையில் அதன் முக்கியக் கருப் பொருளாக இருக்கிறது, அதாவது, ஐரோப்பிய குடியேற்றங்கள் மற்றும் காலனியாதிக்கத்தின் போது கடலூரின் பங்கு. இரண்டாவதாக, இரண்டாவதாக, ஐரோப்பிய கடல்வழி வர்த்தகத்தின் தன்மையின் மீது அது கவனம் செலுத்துகிறது. காலனி ஆதிக்க கால கடல் வணிகமானது விவசாயத்தை வர்த்தகமயமாக்குகின்ற செயல்முறையில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியாவிற்கு பருத்தி துணிகளை இறக்குமதி செய்தல். இந்த கருத்தரங்கமானது, துறைமுகங்கள் ஏற்படுத்தப்படுதல், வர்த்தக வழிகள், வானிலையை கண்காணித்தல், கப்பல்கட்டுமானம், புதிய தொழில்நுட்பங்களின் அறிமுகம் போன்ற ஒரு பரந்த நோக்கெல்லையைக் கொண்டிருக்கிறது. புதுதில்லி இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தில் ஆதரவில் நடைபெறும் இந்த இரண்டு நாள் கருத்தரங்கின் விவாதங்கள் ஒரு தொகுக்கப்பட்ட புத்தக வடிவில் வெளியிடப்படவேண்டும். தென் இந்திய கடல்சார் வரலாறு குறித்து அதிலும் குறிப்பாக தமிழ்நாடு குறித்து மிகச் சில படைப்புகளே இருக்கின்றன. இந்நிலையில் இந்தக்கருத்தரங்கின் ஆய்வுக் கட்டுரைகள், உரைகள், விவாதங்கள் நிரந்தரமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.         

      இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த தேசியக் கருத்தரங்கில், “கடற்கரையை அளவிடுதலில் சோழ மண்டலக் கடற்கரை அனுபவங்கள்”, “காலனியாதிக்க காலத்தில் கடலூர் துறைமுக இஸ்லாமிய கடல் வணிகர்களும், தென்கிழக்காசிய வணிக வலைப்பின்னலும்”, “ஆங்கிலேயர் ஆட்சியில் கடலூர் நகரமயமாதலும், ஜவுளி வணிகமும்”, “பதினெட்டாம் நூற்றாண்டில் தென்கிழக்கு மற்றும் தூரக் கிழக்கு ஆசியாவுடன் பாண்டிச்சேரியின் கடல்சார் வாணிபம்”, “கடலூரில் கடல்சார் வாணிபம்”, “டென்மார்க் காலனியான தரங்கம்பாடியில் சமயம் மற்றும் கல்வி”, “பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெப்ப மண்டல சூறாவளிகளும் கடலூர் மாவட்டத்தில் அதன் தாக்கமும்” “ஆரம்பகாலத் தமிழகம் குறித்த அயல்நாட்டவரின் குறிப்புகள்”, “மத்திய காலத்தில் பழவேற்காடு மற்றும் நாகபட்டினம் துறைமுகங்கள்”, “வாணிபமும் சமூகமும்”, “சதுரங்கப்பட்டிணம் போர்”, “சோழமண்டலக் கடற்கறையின் கடல்சார் வாணிபம்”, “கர்நாடகத்தில் ஆங்கிலேய-பிரெஞ்சு மோதல்களும், கடலூரில் அதன் தாக்கமும்”, “தரங்கம்பாடி மீதான டென்மார்க்கின் மேலாதிக்கம்”, “மேலாதிக்கம் செலுத்துதலில் உள்ளூர் மக்களைப் பயன்படுத்துதல்”, “சோழ மண்டலக் கடற்கரையில் ஐரோப்பிய வாணிபக் கம்பெனிகளின் போட்டி”, “காலனியாக்க சக்திகளும் அவற்றின் கொள்கைகளும்”, “கடலூரில் காலனியாதிக்க கட்டடக்கலை”, “சாதி மற்றும் மதத்தின் மீது பிரெஞ்சு காலனியாதிக்கக் கொள்கைகளின் தாக்கம்”, “பரங்கிப்பேட்டையில் ஏகாதிபத்தியம் மற்றும் காலனியாதிக்க வாணிபம்”, “கடலூர் முற்றுகை”, “சென்னைத் துறைமுகத்தின் வரலாற்று முக்கியத்துவம்”, “கொற்கை, காயல் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களின் வளர்ச்சி”, “பறையர்களும், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் சென்னை இராணுவமும்”, “மேஜர் ஸ்டிஞ்சர் லாரன்சும், புனித டேவிட் கோட்டை பாதுகாக்கப்படலும்”, “கடலூர் பிராந்தியத்தில் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி” உள்ளிட்டவை குறித்த ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.        

          கருத்தரங்கில் முனைவர் கே. ஜான்குமார், பிஷப் ஹீபர் கல்லூரி, முனைவர் என். அதியமான், தமிழ் பல்கலைக்கழகம், முனைவர் எஸ். ராஜவேலு, தமிழ் பல்கலைக்கழகம், முனைவர் எஸ்.என். நாகேஸ்வர ராவ், சர் தியாகராயர் கல்லூரி, முனைவர் எஸ். பாபு, காஞ்சி மாமுனிவர் முதுகலைப் படிப்புகள் மையம், புதுச்சேரி, முனைவர் கே. கன்னையா, கடலூர், முனைவர் எம்.மாணிக்கம், அவ்வையார் கல்லூரி, காரைக்கால், முனைவர் ஜே. ராஜா முகம்மது, முன்னாள் அருங்காட்சியக துணை இயக்குநர், தமிழ்நாடு, முனைவர் என். அழகப்பன், முதல்வர், செட்டிநாடு கல்லூரி, முனைவர் எஸ். ஜெயசங்கர், முதல்வர், ஸ்ரீ வாசவி கல்லூரி, முனைவர் ஜூலியஸ் விஜயகுமார், பொறையார், முனைவர் கே.ஆர். சங்கரன், ஏ.வி.சி. கல்லூரி, முனைவர் டி. அசோகன், பாரதிதாசன் பல்கலைக்கழகம், முனைவர் ஒய். சீனிவாச ராவ், பாரதிதாசன் பல்கலைக்கழகம், முனைவர் ஜே. துர்காலட்சுமி, பதிவாளர், நானி பல்கிவாலா மத்தியஸ்த மையம், சென்னை, செந்தில்குமரன், ஜவர்கர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி உள்ளிட்ட புகழ்மிக்க மற்றும் அனுபவம் மிக்க கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், வரலாற்றாளர்கள், ஆய்வறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் தங்களின் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பிக்கின்றனர். கருத்தரங்க விவாதம் 9 அமர்வுகளில் நடைபெறுகிறது.        

      முழுவதும் புது தில்லி இந்திய வரலாற்று ஆய்வுக் கழக நிதியுதவியுடன் நடத்தப்படுகின்ற இந்த தேசியக் கருத்தரங்கத்தின் கருத்தரங்க விவாதங்கள் கருத்தரங்கம் நிறைவுற்ற பின்னர், கடலூரின் காலனியாதிக்க வரலாற்றை வெளிக்கொண்டுவரும் வகையில் ஒரு புத்தகமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.         

   சுமார் 350 பங்கேற்பாளர்கள், மூத்த அறிஞர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய்வறிஞர்கள் மற்றும் மாணவர்கள் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர். 

    நிகழ்ச்சியில், முன்னதாக பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் வி. இராயப்பன் அவர்கள் வரவேற்றார். நிறைவாக, இந்திய வரலாற்று ஆய்வுக் கழக தேசியக் கருத்தரங்கத்தின் இயக்குநரும் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் நா. சேதுராமன் அவர்கள் நன்றி கூறினார்.     

     பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி. பிரபா அவர்கள் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார் மற்றும் வரலாற்றுத்துறைப் பேராசிரியர்கள் தி. சிவகாமசுந்தரி, நா. தெய்வாம்சம், முனைவர் வீ. ரேவதி, முனைவர். இ. விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, தமிழ்த்தாய் வாழ்த்துடன் கருத்தரங்கத் துவக்கவிழா துவங்கியது.

Read more...

புதன், 4 ஏப்ரல், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை சார்பில் முப்பெரும் விழா


கடலூர்: 

     கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை சார்பில் முப்பெரும் விழா நடந்தது.


   கடலூர், பெரியார் கலைக் கல்லூரியில் வரலாற்றுத்துறை சார்பில் வரலாற்று மன்ற நிறைவு விழா, கல்லூரியில் முதுகலை வரலாறு பாடப் பிரிவு துவக்கியதற்கு நன்றி அறிவிப்பு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் காந்திமதி வரவேற்றார். பல்கலைக் கழகத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் அசோகன் பரிசு வழங்கிப் பேசினார்.

        பேராசிரியர்கள் ராயப்பன், பிரபா, தெய்வாம்சம், விஜலட்சுமி வாழ்த்திப் பேசினர். பேராசிரியர் சேதுராமன் விழாவை தொகுத்து வழங்கினார். மாணவர் ஜோதிநாதன் நன்றி கூறினார்.


Read more...

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை - திருநாவலூர் திருதொண்டீஸ்வரர் கோயில் சிற்பக் கலையின் அருமை - ஆய்வுக் கட்டுரை




¦À¡¢Â¡÷ ¸¨Äì ¸øæ¡¢ - ¸¼æ÷

«.º¢Åºí¸¡¢, þÄí¸¨Ä  ãýÈ¡Á¡ñÎ ÅÃġڠ (2010-2011)


¬ö×ì ¸ðΨÃ

¾¢Õ¿¡Åæ÷ ¾¢Õ¦¾¡ñËŠÅÃ÷ §¸¡Â¢ø
º¢üÀì ¸¨Ä¢ý «Õ¨Á




ÓýÛ¨Ã


Å¢ØôÒÃõ Á¡Åð¼õ, ¯Ùóà÷ §À𨼠Åð¼õ, ¦ºý¨É - ¾¢Õ §¾º¢Â ¦¿Îﺡ¨Ä¢ø Å¢ØôÒþ¢üÌ ¦¾ü¦¸ 22 ¸¢§Ä¡ Á£ð¼÷ ¦¾¡¨ÄÅ¢ø ¯ûÇ ¦¸ÊÄò¾¢üÌ ¸¢Æì§¸ 2 ¸¢§Ä¡ Á£ð¼÷ ¦¾¡¨ÄÅ¢ø ¾¢Õ¿¡Åæ÷ «¨ÁóÐûÇÐ.


¾¢Õ¿¡Åæ¡¢ø ¿¡Åø ÁÃí¸û Á¢Ì¾¢Â¡¸ þÕ󾾡ø, þùç÷ ¿¡Åæ÷ ±Éô ¦ÀÂ÷ ¦ÀüÈÐ. ¸¢.À¢. 7 -¬õ áüÈ¡ñʧħ þùç÷ ¾¢Õ¿¡Åæ÷ ±ýÈ ¦ÀÂÕ¼ý º¢Èô§À¡Î ÅÆí¸¢ ÅÕ¾¨Ä «È¢Â Óʸ¢ÈÐ.


þùç÷ Ӿġõ þᧃó¾¢ÃÉ¢ý ¸¡Äò¾¢ø þს¾¢ò¾É¢ý ¿¢¨ÉÅ¡¸ þს¾¢ò¾ÒÃõ ±É×õ «¨Æì¸ôÀð¼Ð. ¾¢Õ¿¡Åæ÷ ±ýÚ «¨Æì¸ôÀð¼ þùç÷ ¬í¸¢§ÄÂ÷ ¸¡Äò¾¢ø ¾¢Õ¿¡Á¿øæ÷ ±ýÚ ÁÕÅ¢ ÅÆí¸ôÀð¼¾ý ¸¡Ã½õ ¦¾¡¢ÂÅ¢ø¨Ä. À¢ÈÌ «¨Ã áüÈ¡ñθÙìÌ ÓýÒ ¾¢Õ.Å¢.¸øÂ¡½Íó¾ÃÉ¡¡¢ý ¾£Å¢Ã ÓÂüº¢Â¡ø þùç¨Ãô À¨ÆÂ ¦ÀÂÃ¡É ¾¢Õ¿¡Åæ÷ ±ý§È «¨ÆìÌõÀÊ ¦ºö¾¡÷. þ¾¢Ä¢ÕóÐ þùç÷ ¾¢Õ¿¡Åæ÷ ±ý§È «¨Æì¸ôÀθ¢ÈÐ. ¦ÀÕí¸ü¸¡Äõ ¦¾¡¼í¸¢ þó¿¡û Ũà ÅÃÄ¡üÚî º¢ÈôÒ¸û ÀÄÅü¨Èò ¾ýɸò§¾ ¦¸¡ñÎ ¸¡ðº¢ÂǢ츢ÈÐ.



ÅÃÄ¡Ú

Ó¾ü¸¡Ä §º¡Æ÷ ¸¡Äò¾¢ø ¸üÈǢ¡¸ Á¡üÈôÀð¼ §¸¡Â¢ø¸Ç¢ø ¾¢Õ¿¡Åæ÷ ¾¢Õòò¾ÄÓõ ´ýÈ¡Ìõ. ¾¢Õ¿¡Åæ¡¢ø «¨ÁóÐûÇ ¾¢Õ¦¾¡ñËŠÅÃ÷ §¸¡Â¢Ä¢ý ÅÃÄ¡ü¨Èì ¸ø¦ÅðÎì¸û ÁðÎÁøÄ¡Ð, §¾Å¡Ãõ, ¾¢Õò¦¾¡ñ¼ ¾¢ÕÅ󾡾¢, ¦À¡¢Â Òá½õ, ¾¢ÕôÒ¸ú, ¾¢ÕÅÕðÀ¡, ¾¢Õ¿¡Å¡æ÷ò ¾Ä Òá½õ §À¡ýÈ þÄ츢 º¡ýڸĢý ãÄÓõ «È¢Â Óʸ¢ÈÐ. þùÅ¡ÄÂõ ÀøÄÅ÷ ¸¡Äõ Ó¾ø  ¸¢.À¢. 18 - ¬õ áüÈ¡ñÎŨà ¦¾¡¼÷óÐ ÀÄ ÅõºòÐ «÷º÷¸Ç¡ø ¬¾¡¢ì¸ôÀðÎ ÅóÐûÇÉ. ¬ÄÂò¾¢ý À̾¢¸û ÀÄ ¸ð¼ôÀðÎõ, ÒÐÀ¢ì¸ôÀðÎõ, ¦¸¡¨¼¸û ÀÄ ÅÆí¸ôÀðÎõ ÅóòÐûǨ¾ì ¸ø¦ÅðÎî º¡ýÚ¸û ¦¸¡ñÎõ «¾ý ¸¨Ä «¨Áô¨Àì ¦¸¡ñÎõ «È¢Â Óʸ¢ÈÐ.


§¸¡Â¢ø «¨ÁôÒ


¾¢Õ¿¡Åæ¡¢ø °ÕìÌ §Áü§¸ «¨ÁóÐûÇ ¾¢Õ¦¾¡ñËŠÅÃ÷ ¬ÄÂÁ¡ÉÐ ¸ÕŨÈ, «÷ò¾Áñ¼Àõ, þ¨¼¿¡Æ¢, Á¸¡Áñ¼Àõ, ÓýÁñ¼Àõ, ¾¢ÕîÍüÚ Á¡Ç¢¨¸, º¢í¸õÀ¼õ, Å¢¿¡Â¸÷ ¬ÄÂõ ¬¸¢ÂÅü¨È ¦¸¡ñÎ «¨ÁóÐûÇÐ. ż째 Á§É¡ Á§É¡ýÁ½¢ «õÁý ¬ÄÂõ, ż¸¢Æì§¸ Åþრ¦ÀÕÁ¡û ¬ÄÂõ, ¦¾ý¸¢Æì§¸ Íó¾Ãã÷ò¾¢ ¿¡ÂÉ¡÷ ¬ÄÂõ ±É ÀÄ Ð¨½ ¬ÄÂí¸¨Çì ¦¸¡ñÎûÇÐ. þ¨Å ¾Å¢Ã ¬ÄÂò¾¢ý ż¸¢ÆìÌ Á¾¢ø ÍŨà ´ðÊ º¡¨ÄÔõ, Íó¾Ãã÷ò¾¢ ¿¡ÂÉ¡÷ ¬ÄÂò¾¢üÌ ¦¾ü§¸ Á¼ôÀûÇ¢Ôõ, «¾¨É ´ðÊ ¿ó¾ÅÉÓõ «¨ÁóÐûÇÐ. þ¨Š«¨Éò¨¾Ôõ ¯ûǼ츢 ¸¢ÆìÌ §¿¡ì¸¢Â ѨÆ× š¢Öõ «¾ý §Áø ¯Â÷ó¾ §¸¡ÒÃòмÛõ ÜÊ þùšĠÅÇ¡¸õ ÓØ¨Á ¦ÀÕ¸¢ÈÐ. þùÅ¡ÄÂõ §º¡Æ÷ ¸¨Äô À¡½¢Â¢¨É ¦ÅǢ측ðÎõ Ũ¸Â¢ø «¨ÁóÐûÇÐ.



º¢üÀì¸¨Ä º¢ÈôÒ¸û


¾Á¢ú¸ò¾¢ø §º¡Æ÷¸¡Ä º¢üÀí¸¨Çô ¦ÀüÈ ±ñ½¢Èó¾ ¬ÄÂí¸û ¯ûÇÉ. þùŨ¸ ¬ÄÂí¸Ç¢û ´ýÚ¾¡ý ¾¢Õ¿¡Åæ÷ ¾¢Õò¾ÄÁ¡Ìõ. þ¨Å ¾Å¢Ã Å¢ƒÂ¿¸Ã ÁýÉ÷¸Ç¢ý ¸¨ÄôÀ¡½¢¨Â ¦ÅǢ측ðÎõ ´Õ º¢Ä º¢üôÀí¸Ùõ þùÅ¡ÄÂò¾¢ø ¯ûÇÐ. §º¡Æ÷ ¸¡Äõ ÁüÚõ ¸¢.À¢. 19,19 -¬õ áüÈ¡ñ¨¼î º¡÷ó¾ ¯§Ä¡¸ ¾¢Õ§ÁÉ¢¸Ùõ þùÅ¡ÄÂò¾¢ø ¿¢¨ÈóÐì ¸¡½ôÀθ¢ýÈÉ. ¸øÄ¢¨Éì ¦¸¡ñÎ ¦ºÐ츢 º¢üÀí¸¨Ç ¸üüÀí¸û ±ýÚ «¨Æì¸Ä¡õ. þÅüÈ¢ø Ò¨¼ôÒî º¢üÀõ, ¾É¢î º¢üÀõ ±ýÈ ¾É¢ô À¢¡¢×¸Ùõ ¯ñÎ. þùÅ¡ÄÂò¾¢ø ÀøÄÅ÷ ¸¡Äò¨¾î º¡÷ó¾ Ò¨¼ôÒî º¢üÀí¸Ùõ, §º¡Æ÷ ¸¡Äò¨¾ º¡÷ó¾ ¾É¢î º¢üÀí¸Ùõ ¯ûÇÉ. ¦À¡øÄ¡ô À¢û¨Ç¡÷ º¢üÀõ ÀøÄÅ÷ ¸¡Äò¨¾î º¡÷󾾡Ìõ. ¡¨ÉôÀøÄ¡ìÌ, À¢ÃõÁ¡, Å¢‰Ï, ºñʧ¸ŠÅÃ÷, Ð÷¨¸, Á§É¡ýÁ½¢ÂõÁý, ¡¢„À ¾ðº½¡ã÷ò¾¢ º¢¨Ä¨¸û ±É Á¢¸ ÀƨÁ Å¡öó¾ º¢üÀí¸û ¯ûÇÉ.



¯§Ä¡¸î º¢üÀí¸û

¬ÄÂí¸Ç¢ø ÅÆ¢À¡ðÊüÌ¡¢Â  ¾¢Õ ¯ÕÅí¸¨Ç ¯§Ä¡¸ò¾¡ø À¨¼ôÀ¨¾ Áì¸û ¦À¡¢Ðõ Å¢ÕõÀ¢É¡÷¸û. §º¡Æ÷ ¸¡Äò¾¢ø¾¡ý ¯§Ä¡¸ò¾¢Õ§ÁÉ¢¸û Á¢¸î º¢Èó¾ì ¸¨Ä Åñ½õ ¿¢ÃõÀ¢ ÅÆ¢ÔõÀÊ ¦À¡¢Â «ÇÅ¢ø ¯ÕŨÁì¸ôÀð¼Ð ±ÉÄ¡õ. ¯§Ä¡¸ò¾¢Õ§ÁÉ¢¸û ¿¢ýÈ «øÄÐ «Á÷ó¾ ¿¢¨Ä¢ø ¯Ä¡ ÅÕžüÌ ²üÈ Å¨¸Â¢ø ¸Â¢üÈ¡ø ¸ðÊ ±Ç¢¾¡¸ àì¸¢î ¦ºøÄ À£¼í¸Ùõ «¨Áì¸ôÀÎõ. þù×§Ä¡¸ò¾¢Õ§ÁÉ¢¸û «Çì¸ ÓÊ¡¾ ±Æ¢ø ¦¸¡ñ¼¨Å ±ÉÄ¡õ. ¾¨º¸¨Çì ¦¸¡ñ¼ ÀÄ À¢¡¢×¸û ¦ÅÚõ ¯¼õÀ¡ö ¸¡ð¼ôÀðÊÕôÀÐ þî º¢üÀí¸Ç¢ø ¸¡½ôÀÎõ º¢ÈôÒ «õºÁ¡Ìõ. þò¾¢Õ§ÁÉ¢¸Ç¢ø ¯¼ÖÚôÒ §¾¡üÈí¸Ùõ, Ó¸õ ÁüÚõ À¢È ¯ÚôҸǢø ¸¡½ôÀÎõ §ÁÎ, ÀûÇí¸Ùõ ±Ç¢¾¡ì¸ôÀðÎ ¸¡ðº¢ÂǢ츢ýÈÐ. Ӿġõ Àáó¾¸É¢ý Á¸ý þẾ¢ò¾É¡ø ¸üÈǢ¡¸ Á¡üÈôÀð¼ þùÅ¡ÄÂò¾¢ø  ¯§Ä¡¸ò¾¢Õ§ÁÉ¢¸û Á¢¸×õ º¢ÈôÒ¨¼Â¾¡¸ «¾¢¸ ±ñ½¢ì¨¸Â¢ø ¯ûÇÐ ±ýÀÐ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð.


Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP