இந்திய மாணவர் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய மாணவர் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கடலூர்:

           கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணிப்பு  செய்தனர்.

           இந்திய மாணவர் சங்கம் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தது. கல்லூரி மாணவர்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும், கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடந்தது. வேலைநிறுத்தம் செய்த மாணவ, மாணவிகள் கல்லூரி வாயிலில் அமர்ந்து தொடர் முழக்கமிட்டனர். 

         தொடர் முழக்கப் போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அரசன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் இளங்கோவன், மாவட்டத் துணைத் தலைவர் பாலாஜி, மாணவர்கள் குப்புராஜ், அழகுநாதன், ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Read more...

வெள்ளி, 7 அக்டோபர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை

கடலூர்:

                கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

            கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின், மாணவிகள் பிரிவு பேரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  கல்லூரியில் இரண்டாம் சுழற்சி மாணவர்களுக்கு குடிநீர் தடையின்றி வழங்க வேண்டும். பட்ட மேற்படிப்பு மாணவர்கள் அனைவருக்கும் அரசு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

            ஈரோடு மாவட்ட இந்திய மாணவர் சங்கச் செயலாளர் கனிமொழி, சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்துப் பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசுதா, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.துளசி, மாவட்டச் செயலாளர் டி.அரசன் உள்ளிட்டோரும் பேசினர்.  புதிய நிர்வாகிகள் தேர்தலில் கல்லூரியின் கிளைத் தலைவராக எஸ்.ரம்யா, செயலாளராக புவனேஸ்வரி மற்றும் 13 பேர் அடங்கிய நிர்வாக்குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர். ஆர்.பாலாஜி நன்றி கூறினார்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP