திங்கள், 28 நவம்பர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆதி திராவிடர் விடுதி மாணவர்கள் அடிப்படை வசதி கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

             கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியின் ஆதிதிராவிடர் விடுதியில் அடிப்படை வசதி கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

               கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் ஆதி திராவிடர் மாணவர்களுக்கு தனியாக விடுதி வசதி உள்ளது. இங்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 88 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக விடுதியில் ஆங்காங்கே மழைநீர் வழிந்தோடுகிறது. இதனால் தங்குவதற்கு சிரமமாக உள் ளது. ஜன்னல் கதவுகள் உடைந்துள்ளதால் சாரைக் காற்று உள்ளே வீசுகிறது. 

            மேலும், மின்விளக்கு எரியாததால் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வியாழன், 17 நவம்பர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு மலர் (2010-2011) - கவிதைகள் (என் உலகம்)

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு மலர் (2010-2011) - கவிதைகள் (என் உலகம்)


எழுதியவர்: S. மணிகண்டன்,    முதலாமாண்டு  (வணிகவியல் துறை - இரண்டாம் சுழற்சி)





கனவுகளில் மட்டும் காதலித்திருப்பேன்.
கண்ணே!
உன் கண்ணைக் காணமல் இருந்திருந்தால்!
நினைவால் மட்டும்  காதலித்திருப்பேன்,
நீ என் மனைவியாக வருவாய் என்றால்
எவருக்கும் தெரியாமல் காதலித்திருப்பேன்,
நீ என்னிடம் பேசாமல் இருந்திருந்தால்,
உயிர் வாழ காதலித்து விட்டேன்,
என் உலகமே நீதான் என்று,


- நான் என்ன செய்வேன்

வெள்ளி, 11 நவம்பர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு மலர் (2010-2011) - கவிதைகள் (அதிசய ரோஜா)

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு மலர் (2010-2011) - கவிதைகள் (இதய வீடு)

எழுதியவர்: G. மணிகண்டன்,   மூன்றா மாண்டு (இளமறிவியல்  - விலங்கியல் துறை)


நீரில்லை, நிலமில்லை
மரமில்லை, வேரில்லை,
செடியில்லை, கொடியில்லை
எப்படி பூத்தது,
என்னவள் கூந்தலில் ரோஜா,

பரிமாற்றம் 


பண்டமாற்று முறையில் மாற்றிக் கொண்டோம்,
பொருட்களை அல்ல இதயத்தை





வியாழன், 10 நவம்பர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு மலர் (2010-2011) - கவிதைகள் (இதய வீடு)



கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு மலர் (2010-2011) - கவிதைகள் (இதய வீடு)

எழுதியவர்: G. மணிகண்டன்,   மூன்றா மாண்டு (இளமறிவியல்  - விலங்கியல் துறை)



நான் ஒரு வீடு இல்லாதவன் 
நான் உன்னை கேட்கவும் இல்லை 
தந்தை தெருவில் அல்ல.

உன் மனதில்.......... 




புதன், 9 நவம்பர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு மலர் (2010-2011) - கவிதைகள் (கருப்பு ரோஜா )


கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு மலர் (2010-2011) - கவிதைகள் (கருப்பு ரோஜா )

எழுதியவர்: மு.குருமூர்த்தி, இரண்டாமாண்டு (இளங்கலை - தமிழ்த் துறை) சுழற்சி II


மலர் அணியாத.......
உன் கூந்தலை 
நான் கண்டபோது........
உன் தலையே
என் கண்ணுக்கு!!!!!!
தெரிகிறது...........


கருப்பு ரோஜாவாக..


செவ்வாய், 8 நவம்பர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு மலர் (2010-2011) - கட்டுரை தொகுப்புகள் (கோடிக்கு மேல் சில எண்கள்)

 கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு மலர் (2010-2011) - கட்டுரை தொகுப்புகள் (கோடிக்கு மேல்)

தொகுத்தவர் : கி.திருபுவனேஸ்வரி, முதுகலை முதலாமாண்டு (கணிதம்) 


ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், பத்துலட்சம், கோடி, பத்துகோடி இவற்றை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். கோடிக்கு மேல் சில எண்கள் உள்ளன 

அவை பின் வருமாறு ,

கோடி : 1,00,00,000
அற்புதம் : 10,00,00,000
நிகற்பதம்:  1,00,00,00,000
கும்பம் :  10,00,00,00,000
கணம் : 1,00,00,00,00,000
கற்பகம் : 10,00,00,00,00,000
நிகற்பதம் : 1,00,00,00,00,00,000
பதுமம்: 10,00,00,00,00,00,000 
சங்கம் : 1,00,00,00,00,00,00,000 
வெள்ளம் : 10,00,00,00,00,00,00,000 
அந்நியம்  : 1,00,00,00,00,00,00,00,000 
மத்தியம் : 10,00,00,00,00,00,00,00,000 

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP