சனி, 5 பிப்ரவரி, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவருக்கு பாராட்டு

கடலூர் : 

             கடலூர் மாவட்ட மாணவர் காங்., தலைவருக்கு காங்.,சார்பில் பாராட்டுக் கூட்டம் நடந்தது. 
           கடலூர் மாவட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உட்பட 21 கல்லூரிகளில் இருந்து 2,300 மாணவர்கள் காங்., உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் தலைவர், செயலர் உள்பட 10 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாநில நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கும், ஓட்டளிப்பதற்கும் 166 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த 29ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த தேர்தலில் கடலூர் மாவட்ட மாணவர் காங்., தலைவராக தேவனாம்பட்டினம் பெரியார்  கலைக் கல்லூரியைச் சேர்ந்த கலையரசன் தேர்வு செய்யப்பட்டார். 

                      மேலும் நான்கு பேர் பொதுச் செயலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட கலையரசனுக்கு மாவட்ட காங்., அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது. வக்கீல் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் அலமு தங்கவேல், ஜான் சதீஷ், ராமநாதன், ரகுபதி, கார்த்திக், சிவக்குமார், கலியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more...

புதன், 2 பிப்ரவரி, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவராக தேர்வு

கடலூர்:

           கடலூர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் கலையரசனுக்கு, மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தனர்

             கடலூர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் அண்மையில் நடந்தது. 21 கல்லூரிகளைச் சேர்ந்த 2,300 மாணவர்கள் வாக்களித்தனர்.இதில் 166 நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் வாக்களித்து மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவராக, கலையரசனைத் தேர்ந்தெடுத்து உள்ளனர். வடலூரைச் சேர்ந்த கலையரசன், கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் இளங்கலை 3-ம் ஆண்டு படிக்கிறார். அவருக்குக் கடலூர் மாவட்டக் காங்கிரஸ் கட்சி சார்பில் திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

             மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் சந்திரசேகரன் சால்வை அணிவித்துப் பாராட்டினார்.நகர காங்கிரஸ் தலைவர் ரகுபதி, மாவட்டக் காங்கிரஸ் செயலர் அலமு தங்கவேலு, முன்னாள் வட்டாரத் தலைவர் கலியமூர்த்தி, நகரச் செயலர் செல்வகுமார், துணைத் தலைவர் கார்த்திகேயன், இளைஞர் காங்கிரஸ் மக்களவைத் தொகுதி பொதுச் செயலர் ராமநாதன், சட்டப்பேரவை தொகுதி பொதுச் செயலர் சதீஷ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Read more...

திங்கள், 31 ஜனவரி, 2011

கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் மாநில கருத்தரங்கம்

கடலூர்:
 
           செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், கடலூர் பெரியார் கலைக்கல்லூரி தமிழ்த்துறை சார்பில் மாநில கருத்தரங்கம் பெரியார் கலைக்கல்லூரி அண்ணா நூற்றாண்டு வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரங்கநாதன் தலைமை தாங்கினார்.

            தமிழ்த்துறை தலைவர் தமிழாழிக் கொற்கை வேந்தன் வரவேற்றார். தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் அர்த்தநாரி கருத்தரங்கு அறிமுகவுரை ஆற்றினார். கருத்தரங்கை அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது
அய்யப்பன் எம்.எல்.ஏ பேசியது:-

              தமிழுக்காக கடந்த ஆண்டு செம்மொழி மாநாட்டை தமிழக முதல்- அமைச்சர் கருணாநிதி மிக சிறப்பாக நடத்தினார். செம்மொழி மாநாட்டினால் ஒட்டுமொத்த உலகமும் தமிழ்மொழி சிறப்பையும், பெருமையும் தெரிந்து கொண்டதோடு தமிழின் நுணுக்கங்களையும் தெரிந்து கொண்டது. தமிழ்மொழி சிறப்பை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் முழு அளவிலும் மற்றும் நுணுக்கங்களையும் தெரிந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் பெரும் முயற்சியோடு இதுபோன்ற கருத்தரங்கு நடத்தி வருகி றார்கள். இதுமட்டுமின்றி ஆண்டு தோறும் செம்மொழி மாநாடு நடைபெறும் என முதல்-அமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

             தமிழ்மொழி மேலும் சிறப்படைவதற்கு கலைஞர் செம்மொழி அறக்கட்டளை உருவாக்கி அதற்கு வைப்பு நிதியாக எனது சொந்த பணம் ரூ.1 லட்சம் அளித்துள்ளேன். இதன் பயனாக மாணவர்களாகிய நீங்கள் சிறந்த முறையில் கல்வி கற்று தமிழ்மொழியின் சிறப்பை மேலும் வளர்க்க வேண்டும். இதற்காக என்னால் முடிந்தவரைக்கும் உறுதுணையாக இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

           ஆங்கிலத்துறை தலைவர் நடராஜன், வரலாற்று துறை தலைவர் முனைவர் காந்திமதி, கணிதத்துறை தலைவர் முனைவர் ஞானசேகரன், விலங்கியல் துறைத்தலைவர் ஜெயந்திதேவி, தாவரவியல் துறை தலைவர் பன்னீர் செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் பாஸ்கரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இணைப்பேராசிரியர் குமரன் நன்றி கூறினார்.

Read more...

செவ்வாய், 25 ஜனவரி, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வரலாற்றுச் சொற்பொழிவு

கடலூர் : 

            கடலூரில் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்று துறை சார்பில் வரலாற்று பேரவை மாதாந்திரப் சிறப்பு சொற்பொழிவு அண்ணா நூற்றாண்டு விழா நினைவு கட்டடத்தில் நடந்தது. 

                 பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் காந்திமதி முன்னிலை வகித்தார். பேராசிரியர் ராயப்பன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் பேராசிரியர் ரங்கராஜ் வள்ளலாரும் வாழ்வியலும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பேராசிரியர்கள் டாக்டர் சேதுராமன், பிரபா, சிவகாமசுந்தரி, விஜயலட்சுமி, மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர் கார்த்திக் நன்றி கூறினார்.

Read more...

வியாழன், 6 ஜனவரி, 2011

கடலூர் மண்டல பூப்பந்து விளையாட்டுப் போட்டி: பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்ப்பு

கடலூர் : 

            திருவள்ளுவர் பல்கலைக் கழக கடலூர் மண்டல அளவிலான பூப்பந்து விளையாட்டுப் போட்டி கடலூரில் நடந்தது. 

            ஆண்கள் பிரிவில் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி, பெரியார் கலைக் கல்லூரி, செய்யாறு இந்தியன் அமெரிக்கன் கல்லூரி, புதுச்சேரி கல்லூரிகள் பங்கேற்றன. 

             பெண்கள் பிரிவு போட்டியில் கடலூர் கந்தசாமி நாயுடு கல்லூரி, செயின்ட் ஜோசப் கல்லூரி, பெரியார் கலைக்கல்லூரி, விழுப்புரம் தெய்வானை மகளிர் கல்லூரி, விருத்தாசலம் அரசு கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளின் சார்பில் அணிகள் பங்கேற்றன. 

               இதில் ஆண்கள் பிரிவில் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி அணியும், பெண்கள் பிரிவில் விழுப்புரம் தெய்வானை மகளிர் கல்லூரி அணியும் வெற்றி பெற்றன.
 
              போட்டிக்கான ஏற்பாடுகளை கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜமாணிக்கம் செய்திருந்தார். உடற் கல்வி இயக்குனர்கள் வண்ணமுத்து, புவனேஸ்வரி போட்டிகளை நடத்தினர்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP