புதன், 21 ஜனவரி, 2015
புதன், 14 ஜனவரி, 2015
கடலூர், பெரியார் அரசு கலைக் கல்லூரியில் தேசிய தரநிர்ணயக் குழுவினர் 08-10, ஜனவரி-2015 ஆய்வு செய்தனர்
லேபிள்கள்:
Dr. V. N. Viswanathan,
Dr.R.Kannan,
NAAC Peer Team Visit -2015
சனி, 3 ஜனவரி, 2015
கடலூர், பெரியார் அரசு கலைக் கல்லூரியில் தர ஆய்வு செய்வதற்காக தேசியதரச்சான்று நிர்ணயக் குழு வருகை ஜனவரி 8-10 (2015) -NAAC Peer Team Visit
கடலூர், பெரியார் அரசு கலைக் கல்லூரியில் தர ஆய்வு செய்வதற்காக தேசியதரச்சான்று நிர்ணயக் குழுவினால் நியமிக்கப்பட்ட 3 பேராசிரியர்கள் கொண்ட தேசிய தரச்சான்று நிர்ணயக்குழு (NAAC Peer Team Visit) வருகின்ற 2015 ஜனவரி 8-ம் தேதி வியாழக்கிழமை அன்று கல்லூரிக்கு வருகைதந்து 08-ம் தேதி முதல் 10-ம் தேதிவரை மூன்று நாட்கள் கல்லூரியின் தரத்தினை ஆய்வுசெய்து தேசிய தரச்சான்றினை வழங்கவுள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் பெரியார் கலைக் கல்லூரியானது பல்கலைக்கழகமாக மாறுவதற்கான அனைத்து அடிப்படை தகுதிகளையும் பெற்றுள்ளது. பெரியார் கலைக் கல்லூரியின் பொன்விழா ஆண்டினை கொண்டாடிவருகின்ற இவ்வேளையில் தமிழக அரசு இக்கல்லூரியை முதல்தரநிலை (Grade -I) கல்லூரியாக கடந்த மே 2014-ல் தரம் உயர்த்தி அறிவித்துள்ளது.
எனவே உயர்நிலை தேசிய தரச்சான்று பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் கல்லூரி முதல்வர் முனைவர்.வ.நா.விஸ்வநாதன் அவர்கள் தலைமையில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் சீரிய முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
தினத்தந்தி 05.01.2014 |
![]() |
jpdkyh;
06.01.2014
|
கடலூர் மாவட்ட செய்திகள்
லேபிள்கள்:
Dr. V. N. Viswanathan,
Dr.R.Kannan,
NAAC Peer Team Visit -2015
வெள்ளி, 2 ஜனவரி, 2015
பெரியார்கலைக் கல்லூரியில் கோ.ஐயப்பன் அறக்கட்டளை பரிசளிப்பு விழா 31.01.2014 அன்று நடைபெற்றது.
கடலூர், பெரியார் கலைக் கல்லூரி தமிழியல் உயராய்வு மையத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருகோ.ஐயப்பன் அவர்களால் இளங்கலைத் தமிழ் இலக்கியத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும் பகுதி 1 பொதுத் தமிழில் (முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு) முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும் ஆண்டு தோறும் பரிசுகள் வழங்குவதற்காக கோ. ஐயப்பன் அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. அவ்வறக் கட்டளையின் பரிசளிப்பு விழா கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழியல் உயராய்வு மையத்தின் சார்பாக 31.12.2014 அன்று காலை 10.00 மணியளவில் சட்டமன்றஉறுப்பினர்கட்டடத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்குவந்திருந்தஅனைவரையும் தமிழியல் உயராய்வு மையத்தின் தலைவர் முனைவர்சு.தமிழாழிக் கொற்கைவேந்தன் வரவேற்றார். இயற்பியல்துறைத் தலைவர் (முதல்வர்பொறுப்பு) க.மனோகரன் தலைமையுரையாற்றினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருகோ.ஐயப்பன் அவர்கள் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கினார்.மேலும் இவ்விழாவில் திருகோ. ஐயப்பன் அவர்கள் தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சிக்காக தமிழியல் உயராய்வு மைய நூலகத்திற்கு நூல்கள் வாங்குவதற்காக ரூபாய் 50,000/- (ஐம்பதாயிரம்) வழங்குவதாக அறிவித்தார்.
![]() |
jpdkyh; 03.01.2014 |
![]() |
jpdkzp 03.01.2014 |
![]() |
jpdkzp 03.01.2014 |
கடலூர் மாவட்ட செய்திகள்
லேபிள்கள்:
கோ.ஐயப்பன் அறக்கட்டளை பரிசளிப்பு விழா,
தமிழ்த் துறை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














