தேவனாம்பட்டினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேவனாம்பட்டினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 ஏப்ரல், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஓட்டு எண்ணும் மையத்தில் அ.தி.மு.க.வேட்பாளர்கள் பார்வை

கடலூர் : 

          கடலூர் ஓட்டு எண்ணும் மையத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ள அறையை குறிஞ்சிப்பாடி, நெய்வேலி அ.தி.மு.க., வேட்பாளர்கள் நேற்று பார்வையிட்டனர். 

             கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி மற்றும் பண்ருட்டி ஆகிய தொகுதிகளின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் நேற்று மாலை குறிஞ்சிப்பாடி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், நெய்வேலி வேட்பாளர் சிவசுப்ரமணியன் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை பார்வையிட்டனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில் கையெழுத்திட்டனர். 

               அதனைத் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் இருந்த கட்சித் தொண்டர்களிடம் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனர். உடன் தொழிற்சங்கச் செயலர் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலர்கள் கோவிந்தராஜ், கமலக்கண்ணன், பழனிசாமி, தொகுதி செயலர் வெங்கடாஜலபதி, ஜெ.,பேரவை ஒன்றிய செயலர் வீரமணி உடனிருந்தனர்.

Read more...

வெள்ளி, 15 அக்டோபர், 2010

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் செம்மொழி தாவரவியல் பூங்கா திறப்பு விழா

கடலூர் : 

                     கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரியில் தாவரவியல் துறை சார்பில் தாவரவியல் மன்ற துவக்க விழா மற்றும் செம்மொழி தாவரவியல் பூங்கா திறப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். தாவரவியல் தலைவர் பேராசிரியர் பன்னீர் செல்வம் வரவேற்றார். புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் முதுகலை பட்ட மேற்படிப்பு மைய பேராசிரியர் ராமானுஜம் செம்மொழி தாவரவியல் பூங்காவை திறந்து வைத்து "உயிர் பல் மயம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  பேராசிரியர்கள் பாவாடை, அருணா உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை பிரகாஷ் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் நிர்மல்குமார் நன்றி கூறினார்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP