உள்ளாட்சித் தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உள்ளாட்சித் தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 20 அக்டோபர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

கடலூர்:

            ஓட்டுப்பதிவு செய்த மின்னணு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பாக வைத்துள்ள ஓட்டு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

            உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்டமாக நேற்று கடலூர், சிதம்பரம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தல் நடந்தது. இதில் நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களும், ஒன்றியங்களில் ஓட்டு சீட்டுகளும் ஓட்டுப் பதிவிற்கு பயன்படுத்தப்பட்டன. மாலை 5 மணிக்கு ஓட்டுப் பதிவு முடிந்ததும் அந்தந்த ஓட்டுச் சாவடிகளில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு ஓட்டுப் பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டன.

ஓட்டுபெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்கள் விவரம்:

நகராட்சி: 

கடலூர் -  டவுன்ஹால், கடலூர். 
சிதம்பரம் - ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம்.

பேரூராட்சி: 

குறிஞ்சிப்பாடி, வடலூர் - அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி. திட்டக்குடி - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திட்டக்குடி.
ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு - டி.ஜி.எம்.மேல்நிலைப் பள்ளி, சேத்தியாத்தோப்பு. 
காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை - பர்வதராஜகுல குருகுல மேல்நிலைப் பள்ளி - காட்டுமன்னார்கோவில். 
அண்ணாமலை நகர் - ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி, அண்ணாமலை நகர். 
புவனகிரி, பரங்கிப்பேட்டை - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - புவனகிரி. கிள்ளை - அரசு மேல்நிலைப் பள்ளி, கிள்ளை.

ஒன்றியம்: 

கடலூர் - பெரியார் அரசு கல்லூரி, தேவனாம்பட்டினம். 
 குறிஞ்சிப்பாடி - எஸ்.கே.வி. மெட்ரிக் பள்ளி, குறிஞ்சிப்பாடி. 
மேல்புவனகிரி - சந்திரா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேத்தியாத்தோப்பு. பரங்கிப்பேட்டை - அரசு கல்லூரி, சி.முட்லூர். 
கீரப்பாளையம் - அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
 சிதம்பரம். குமராட்சி - நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 
சிதம்பரம். காட்டுமன்னார்கோவில் - ஆ.சி.மேல்நிலைப்பள்ளி, 
காட்டுமன்னார்கோவில். 

               மாவட்டத்தில் உள்ள 34 உள்ளாட்சி அமைப்புகளில் இரண்டு கட்டமாக நடந்த தேர்தலில் பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுப் பெட்டிகள் 27 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் நேற்று மாலை முதல் ஒவ்வொரு மையத்திற்கும் இரண்டு இன்ஸ்பெக்டர்கள், 4 சப் இன்ஸ்பெக்டர், 100 போலீசார் மூன்றடுக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP